சென்னை: இரவு வானத்தில் எப்போதாவது ஒரு முறை அதிசயங்கள் நடக்கும். அந்த வகையில், நேற்று வெள்ளி, நிலவு மற்றும் சனி ஆகிய கிரகங்ள் ஒரே நேர்க்கோட்டில் தெரிந்திருக்கின்றன. வாய்ப்பிருந்தால் இன்றும் இதனை நம்மால் சென்னையில் இருந்து பார்க்க முடியும்.

வானியல் அதிசயம்: பூமியிலிருந்து சுமார் 10.6 கோடி கி.மீ தூரத்தில் வெள்ளி கிரகம் இருக்கிறது. சூரிய குடும்பத்தின் மிகவும் பிரகாசமாக இருக்கும் இந்த கிரகமும், பூமியிலிருந்து ஏறத்தாழ 3.8 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவும், 151 கோடி கி.மீ தொலைவில் உள்ள சனி கிரகமும் நேற்று ஒரே நேர்க்கோட்டில் வந்திருக்கிறது. 2.2 டிகிரிதான் மூன்று கோள்களுக்கும் இடைவெளி இருந்திருக்கிறது. இது ஒரு வானியல் அதிசயமாகும். சில ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்று நிகழும்.
(Visited 10014 times, 31 visits today)