குழந்தை பாக்கியம் கிட்ட செய்ய வேண்டியவை.. ஜோதிடம் சொல்வதென்ன?




இதன் அடிப்படையில், ராமர் வழிபட்ட இத்தலத்தில் அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு, கோயிலுக்கு வந்து அங்குத் தரப்படும் நாகர் சிலைக்கு ஒரு நாள் முழுவதும் கணவனும், மனைவியும் உபவாசகம் இருந்து ஜலக்கிரீடை செய்ய வேண்டும். பின்பு அன்றிரவு கோயிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் முறைப்படியாக நாக பிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டி யாகம் செய்து விட்டு, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருப்புல்லானியில் தற்போது இந்தப் புத்திரகாமேஷ்டி யாகம் செய்வதில்லை என தகவல். ஆனால் குழந்தை பாக்கியம் பெறுவதற்கு அங்குத் தினமும் காலை 9 மணி அளவில் நெய்வேத்திய பாயசம் அளிக்கப்படுகிறது. இதனை அருந்தியும் குழந்தை பாக்கியம் பெறுகின்றனர்.

தமிழகத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு அருகில் உள்ள புதுக்காமூரில் புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு தமிழ் ஆனி மாதம் வரும் பௌர்ணமி நாளில் 11 சிவாச்சாரியார் கொண்டு “புத்திர காமேஷ்டி யாகம்” நடைபெறுகிறது. இதில் புத்திர பாக்கியம் பெற வேண்டுபவர்கள் கலந்துகொண்டு, புத்திர தோஷம் நீங்கி நற் புத்திர பாக்கியம் பெறுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறது. இங்கே கருவறையில் 9 நாகங்கள் குடைப் பிடிக்க அதன் கீழ் தான் லிங்கவடிவில், புத்திரகாமேட்டி ஈஸ்வரர் அமர்ந்துள்ளார். இங்குள்ள இறைவியின் பெயர், பெரியநாயகி. இங்குப் பிரார்த்தனை செய்யும் அன்பர்களுக்குப் புத்திர பாக்கியம் நிச்சயம் பெரிய மனதுடன் அருளுகிறாள் என்பதில் சந்தேகம் வேண்டாம். இந்த யாகம் வரும் ஜூலை மாதம் 10ஆம் தேதி (ஆனி பௌர்ணமி) நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் விசாரித்துப் பின்னர் யாகத்தில் கலந்து கொள்ளலாம்.

புத்திர தோஷம்

புத்திர தோஷம் என்பது, ஒருவர் ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் எனப்படும் லக்கினத்தை அடுத்து வரும் 5ஆம் இடத்தில், ராகு, கேது, சனி, செவ்வாய், சூரியன் இருந்து தோஷத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளவர்கள் இந்த யாகத்தில் பங்கு பெறுவதோடு அங்குள்ள வேம்புடன் இணைந்து வளர்ந்துள்ள ஆலமரத்தடியில் தமது நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்து வழிபடுவதும் ஒரு நம்பிக்கைக்குரிய செயலாகும். புத்திர காமேஷ்டி யாகத்திற்கு கோயிலில் சிறப்பு கட்டணமும் வசூலிக்கிறார்கள் அதனை நன்கறிந்து தேவைப்படும் அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தப் புத்திரகாமேஷ்டி யாகத்தை, தசரதர் தமது குல குருவான வசிஷ்டரின் ஆலோசனையின் பேரில் அவர் குறிப்பிட்ட இடத்தில் செய்து ராமர் அவருடன் பிறந்த மற்ற மூவர் லக்ஷ்மணர், பரதர், சத்ருக்னர் ஆகியோரை பெற்றார் என்பது ராமாயண காப்பியத்தில் கூறப்பட்ட தகவல். இதனை நம்பிக்கையுடன் செய்வதால் பித்ரு தோஷம் போன்ற பிற அனைத்து தோஷத்தையும் நீங்கிக் குழந்தை பாக்கியம் பெறுவார்கள். பொதுவாக எந்தப் பரிகாரம் ஆகினும் வளர்பிறையில் செய்வது நற்பலனை தரும். எனவே, முழு நம்பிக்கையோடு, மேற்படி யாகத்தில் பங்குபெற்று அனைத்து தோஷமும் நீங்கி, புத்திர பாக்கியம் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

தொடர்புக்கு : 98407 17857 / 91502 75369

SUMMARY

Things to do to get a child.. What does astrology say?





நன்றி Hindu

(Visited 1001 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 12 =