சில பேருக்கு சுதந்திரத்தையும், சில பேருக்கு பிரச்னையையும் பலருக்கு தொல்லையையும் தருகிறது இந்த மெனோபாஸ். மெனோபாஸ் என்றால் என்ன என்றும் அது குறித்த அச்சங்களையும் தீர்வுகளையும் விரிவாகப் கூறுகிறார் ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால். Dr. சாந்தி விஜய்பால் ஆயுர்வேதத்துல மெனோபாஸ் என்பதை ரஜோ நிவ்ருத்தி காலம் என்று கூறுவார்கள். இது நான்கு வகைப்படும். சுபாவிகா – இயல்பாக மாதவிடாய் ஒரு பெண்ணுக்கு 45 – 50 வயதில் நின்றுபோவதுசாரீரிகா – உடல் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்பட்டு நின்று போவதுமானஸிகா – இது மனம் சம்பந்தப்பட்டது. திடீர் அதிர்ச்சி அல்லது அதிக துயர் போன்ற காரணங்களால் நிற்பதுஆகன்துஜா – எதாவது விபத்து, அறுவை சிகிச்சை போன்றவற்றால் பீரியட்ஸ் நின்று போவது எளிமையாக புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், மாதா மாதம் ஏற்படும் மாதவிடாய் நின்றுபோகும் நிலையே மெனோபால். இது ஒரு வியாதியல்ல. மிகவும் இயற்கையான ஒன்று. இளமையும் ஆரோக்கியமும் இருக்கும் போது ஒரு பெண் கருவுருவாள். ஆனால் வயதாக ஆக, அவளது உடலில் இருக்கும் கருமுட்டை அதாவது சினைப்பையில் உள்ள கருமுட்டை தீர்ந்துவிடும். எப்போது கடைசி கருமுட்டை தீர்ந்து போகிறதோ, அதன்பின் மாதவிடாய் வரவே வராது. இதுதான் மெனோபாஸ். ஒவ்வொரு பெண்ணுக்கும் இது மாறுபடும். ஆனால் எல்லா பெண்களுக்கும் கட்டாயம் வந்தே தீரும். 45 வயதிலிருந்து 54 வயது வரை எப்போது வேண்டுமானால் மெனோபாஸ் வரலாம். எவை எல்லாம் மெனோபாஸை நிர்ணயிக்கிறது? பிறக்கும் போதே குறிப்பிட்ட அளவு சினை முட்டைகளுடன் தான் ஒரு பெண் பிறப்பாள். அது வளர்ச்சி அடையாத சின்ன சினைமுட்டைகளாக இருக்கும்.வளர் இளம் பருவத்தில், வயதுக்கு வந்தபின், ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு சினை முட்டை உருவாகத் தொடங்கும். நிறைய பேருக்கு அதைப் பொருத்து தான் மெனோபாஸ் காலகட்டம் அமையும். அம்மாவுக்கு எந்த வயதில் மாதவிடாய் நிற்கிறதோ மகளுக்கும் அதே வயதில் நிற்கலாம். ஒன்றிரண்டு வருடம் வித்யாசம் இருக்கலாம். மெனோபாஸ் மூன்று வகைப்படும், அவை ப்ரீ மெனோபாஸ் கடைசி மாதவிடாய் எப்போது நிற்கிறதோ அதை ப்ரீ மெனோபாஸ் வருடம் என்று சொல்வோம். இது ஏதோ குறுகிய காலம் கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாக மாதவிடாய் வருவது தாமதப்படும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் வரும் மாதவிடாய் அதன் பின் 40 நாளுக்கு ஒரு மூறை, 60 நாளுக்கு ஒரு தடவை, மூன்று மாதங்களில் ஒரு தடவை என்று விட்டு விட்டு வரும். எப்போது ஒரு வருடம் வரை வராமல் இருக்கிறதோ அது பெரி மெனோபாஸ் என்று சொல்வோம். ஒரு வருடம் தாண்டிவிட்டால் போஸ்ட் மெனோபாஸ் என்று சொல்வோம். எர்லி மெனோபாஸ் சில பேருக்கு எர்லி மெனோபாஸ் ஏற்படலாம். சீக்கிரம் வயதுக்கு வந்துவிட்டவர்கள், ஹார்மோன் பிரச்னை இருப்பவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு சீக்கிரம் மெனோபாஸ் வந்துவிடும். இதுதான் எர்லி மெனோபாஸ் சர்ஜிகல் மெனோபாஸ் கர்ப்பப்பை எடுத்துவிட்டவர்களுக்கு அது ஒரு மெனோபாஸ் போலத்தான்.. கர்ப்ப்பை மற்றும் சினைப்பை எடுத்துவிட்டால் அதன் வேலை இருக்காது. இது…
உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும் முருங்கைக் கீரை முருங்கைக் கீரையில் நார்ச் சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன. முருங்கை இலையை (1 கைப்பிடி) அளவு எடுத்து, அதனை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் சிறிதளவு தேன், சிறிதளவு மிளகுத் தூள் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கி, காலை வேளையில் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறைந்து, இதயம் சீராக இயங்கும். தினந்தோறும் இரண்டு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள சுண்ணாம்புச் சத்து ரத்தக் குழாய்களைத் தளர்த்தி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.சையது முஷ்டாக் டி20: , தமிழகம், மகாராஷ்டிரம் வெற்றி குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu விளக்கெண்ணெய் சமாசாரமுங்கோ
சத்துக்கள் : வைட்டமின் B, C, கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து தீர்வு : வெண்பூசணிக்காய் (250 கிராம் தோல், விதையுடன்), எலுமிச்சம் பழம் (1 தோலோடு), புதினா (சிறிதளவு) அதனுடன் வெற்றிலை (2), கொத்தமல்லி, மிளகு (2), தக்காளி சிறியது (1) இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் அல்லது மோர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு காலையில் இருந்து மதியம் வரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். தீர்ந்தவுடன் மறுபடியும் ஜூஸாக்கி குடிக்கலாம் தொடர்ந்து குறைந்தபட்சம் 21 நாட்களாகவது குடித்து வரவும். (தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.) மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.அடிக்கடி விக்கல் வருதா? தண்ணீர் அருந்தியும் நிற்கவில்லையா? அப்போ இதைப் படிங்க! வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்
நிர்மலா கான்வென்ட் என்றொரு தெலுங்குத் திரைப்படம், அதில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அவசரமாக ‘O’ குரூப் ரத்தம் தேவைப்படும். ஆனால் மருத்துவமனையில் அந்த நேரத்தில் ‘B’ குரூப் ரத்தமே ஸ்டாக் இருக்கும். உடனே படத்தின் நாயகனான பள்ளிச்சிறுவன் மருத்துவரிடம் சென்று மேலும் தேவையான அளவுக்கு B குரூப் ரத்தம் சேகரியுங்கள் டாக்டர் என்று சொல்லி விட்டு வெளியில் காட்டுக்குள் ஓடிச் சென்று பச்சை காப்பிக் கொட்டைகளைப் பறித்து வந்து சேகரிக்கப்பட்டிருக்கும் அந்த ரத்தக் குப்பிகளில் குறிப்பிட்ட அளவுக்கு சேர்ப்பான். கைகளில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு தான். அவனது இந்த முந்திரிக் கொட்டத்தனமான செயலுக்காக டாக்டர் அவனைத் திட்டுவார், அவனோ, டாக்டரிடம் தயவு செய்து இப்போது அந்த ரத்தத்தைச் சோதித்துப் பாருங்கள் குரூப் மாறி இருக்கும் என்பான். டாக்டர் திட்டிக் கொண்டே அந்த ரத்தக் குப்பிகளை சோதனைக்கு எடுத்துச் செல்வார். என்னே ஆசர்யம்! நிஜமாகவே சில வினாடிகளில் பச்சை காப்பிக் கொட்டை சேர்க்கப்பட்ட B குரூப் ரத்தம் O குரூப் ரத்தமாக மாறி இருக்கும். அடிப்படையில் இப்படி ஒரு கண்டுபிடிப்பு இருப்பது நிஜம் தான். ஆனால் அதை அவர்கள் படமாக்கிய விதம் சற்று விபரீதமாக இருந்தது. இது குறித்த சோதனைகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. முற்றிலுமாக ஒரு பள்ளிச்சிறுவனால் இத்தகைய சாகஸங்களை நிகழ்த்தி விட முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் இந்த முறையில் ரத்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை. ஆனால் இதில் ஒரு விஷயம் மட்டும் உண்மை என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு பல்லாண்டுகளாகிறது. 1981 ஆம் ஆண்டு வாக்கில் பச்சை காப்பிக் கொட்டைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் B குரூப் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகள் அதாவது ஆண்ட்டிஜென்கள் பச்சை காப்பிக் கொட்டையால் நீக்கப்படுவதன் வாயிலாக அது தானே O குரூப் ரத்தமாக மாற்றம் அடைவதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதற்கான காப்புரிமை கூட இந்திய விஞ்ஞானி ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. ஆனால் அந்த விஞ்ஞானி யார்? இந்த ஆய்வின் அடிப்படையில் ரத்த குரூப்கள் மாற்றம் செய்யப்பட்டு இந்தியாவில் எவருக்கேனும் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதைக் குறித்த தகவல்கள் எதையும் தேடிய வரையில் காணோம்.குறட்டை விடுவதை நிறுத்த வேண்டுமா? இதைச் செய்தால் போதும் ரத்த குரூப்களைப் பொறுத்தவரை ஒருவருக்கு A, B, AB, A நெகட்டிவ், B நெகட்டிவ், O, O நெகடிவ் என்றெல்லாம் ரத்த குரூப்கள் பிரிக்கப்படுவது அவற்றில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகளின் அடிப்படையில் தான். ஒரு ரத்த குரூப்பில் எவ்விதமான சர்க்கரை மூலக்கூறுகளும் இல்லாவிட்டால் அந்த ரத்தம் O குரூப் என அறிவிக்கப்படுகிறது. இது தான் இந்த ஆராய்ச்சியின் அடிப்படை. இந்தக் கண்டுபிடிப்பால் ஒரு சின்ன ஆறுதல் என்னவென்றால், ஒருவேளை இந்த பச்சைக் காப்பிக் கொட்டை…
கேன்சர் நோயாளிகளை நோயின் பிடியிலிருந்து காக்கும் வரமாகக் கருதப்படும் கீமோதெரபி சிகிச்சைக்கு அமெரிக்க மருத்துவர் ஒருவர் வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மட்டும் 14 மில்லியன் கேன்சர் நோயாளிகள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் நோயால் இறப்பதைக் காட்டிலும் கீமோதெரபி சிகிச்சைமுறையால் கடும் அவதிக்குட்பட்டு விரைவில் மரணமடைகிறார்கள் என்கிறார் டாக்டர் ஹார்டின். பி.ஜோன்ஸ். கீமோதெரபி என்பது நச்சு ரசாயணங்களை உடலில் செலுத்தும் முறைதானே தவிர அதன் மூலமாக நோயாளிகளுக்கு கடுமையான வலியாலும், பீதியாலும் துடித்து இறப்பதைத் தவிர எந்தவிதமான பலனும் இல்லை. கீமோதெரபி பரிசளிப்பது வலியையும் மரணத்தையும் என்கிறார் டாக்டர் ஹார்டின். இதை இவர் போகிற போக்கில் சும்மா சொல்லி விட்டுப் போகவில்லை. தனது நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சியின் முடிவாக கீமோதெரபி சிகிச்சை முறையின் பாதங்கள் என ஒரு ஆய்வுக்கட்டுரையாக முன் வைத்திருக்கிறார். கேன்சர் மருத்துவ சிகிச்சை என்பது தற்போது உலகிலுள்ள லாபம் கொழிக்கும் மற்ற வியாபாரத் துறைகளைப் போலவே லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நிறுவனமாக வளர்ந்து வருகிறது. மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குதாரர்கள் ஆகியோரே இதன் மூலம் பெருத்த லாபம் சம்பாதிப்பவர்கள். இவர்களுக்கு லாபம் மட்டுமே முக்கியம். நோயாளிகளின் நோய் குணமாவதைப் பற்றியெல்லாம் அக்கறை இல்லை. ஒவ்வொரு முறையும் ஒரு நோயாளி வழக்கமான கீமோதெரபி சிகிச்சைமுறைக்கு ஒப்புக் கொண்டு கைழுத்திடும் போதும் அது ஒரு லாபக் குறியீடாகவே கருதப்படுகிறது. பெரும்பாலான சிகிச்சைமுறைகளில் கீமோதெரபி ரசாயணங்கள் உடலுக்குள் இஞ்சக்சன் மூலமாக செலுத்தப்படுகிறது. அல்லது கதிர்வீச்சு முறையில் உடலில் உள்ள கேன்சர் செல்கள் ஊடுருவி அழிக்கப்படுகின்றன. அல்லது கேன்சர் செல்கள் பரவிய உடலுறுப்புகள், உள்ளுறுப்புகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. சில நோயாளிகளுக்கு சிலசமயங்களில் இந்த மூன்று விதமான சிகிச்சைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அப்போதெல்லாம் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் பொய் சொல்கிறார்கள், ‘நீங்கள் நோயை எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கிறீர்கள் என!’ ஆனால், உண்மை என்னவென்றால் நீங்கள் உங்களது நேரத்தை, வாழ்நாளை கடன்வாங்கி நீட்டித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தான். சிகிச்சையின் தாக்கம் முடிந்த பின் மீண்டும் அதே பழைய கடுமையான நோய்த்தாக்குதல் தொடங்குகிறது. முடிவில் மரணமே எஞ்சுகிறது. இதில் சோகத்துக்குரிய விஷயம் நீங்கள் நோயால் இறப்பதைக் காட்டிலும் நோய்க்கான சிகிச்சையால் மிகுந்த வலியுடனும், மோசமான முறையிலும் இறக்க நேரிடுகிறது என்பது தான். இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ள டாக்டர் ஹார்டின் ஜோன்ஸ் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் ஃபிசிக்ஸ் மற்றும் ஃபிசியாலஜி துறைப்பேராசிரியர் என்பதோடு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கேன்சர் நோயாளிகளின் வாழ்நாள் நீட்டிப்பு குறித்த ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமது ஆராய்ச்சியின் முடிவாக அவர் தமது ஆய்வுக் கட்டுரையில் முன் வைப்பது மக்களின் நெடுங்கால நம்பிக்கையான கீமோதெரபி சிகிச்சைமுறை கேன்சர் நோயாளிகளின் நோய்த்தீவிரத்தையோ அல்லது மரணத்தையோ எந்தவிதத்திலும் ஒத்திப் போடாது. மொத்தத்தில் அது கதைக்கு ஆகாத சிகிச்சை. அதனால் பலனேதும் இல்லை என்பதே. அவர் தனது தொடர் ஆராய்ச்சியில் கண்டறிந்ததாகக் கூறுவது கீமோதெரபிக்கு உள்ளாகும் நோயாளிகள் அனைவரும்…
‘என்ன இப்படி இளச்சிட்டீங்க? ஷுகர் இருக்கா?’ முப்பது வயசுதான் ஆகுது… அதுக்குள்ளயே தலமுடியெல்லாம் நரச்சி வயசான ஆளு மாதிரி இருக்குறான்.. ஷுகர் ஏதாச்சும் வந்துடுச்சா? சாப்பாடு கொஞ்சமாதான் சாப்பிட்டீங்க? போதுமா? என்ன ஏதாச்சும் டயட் கன்ட்ரோல்ல இருக்கீங்களா? இல்ல, சக்கர நோயா?’ எங்கே சென்றாலும், இப்படி அன்றாட வேலைகள், உணவுப்பழக்கம் போன்றவற்றில் பல சந்தேகங்களைப் புகுத்திப் பாடாய்படுத்தும் சர்க்கரை நோயைக் கண்டும், தனக்கும் வந்து விடுமோ என்று பயத்துடனும்தான் பலர் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயைப் பற்றிய பல தகவல்களை பல்வேறு வகையான ஊடகங்களின் வாயிலாகவும், ஏற்கெனவே நீரிழிவு நோயாளிகளாக இருப்பவர்கள், நண்பர்கள்; மூலமாகவும் தினம் தினம் அனைவரும் கேட்டுக் கொண்டிருப்பதால், முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நீரிழிவு பற்றிய புரிதல் சற்று அதிகமாகவே இருக்கிறது. ஆனால், கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் திடீர் சிக்கலான கர்ப்பகால நீரிழிவு பற்றியும், அதற்கான உணவுமுறை பற்றியும் முழுமையான தெளிவு பெண்களுக்கு போதுமான அளவில் இல்லை என்றே எண்ணவைக்கிறது அதிகரித்து வரும் தற்போதைய புள்ளிவிவரங்கள். இந்தியாவில் வெவ்வேறு இடங்களில், புவியமைப்பைச் சார்ந்து 3.8 % முதல் 21% வரை கர்ப்பகால நீரிழிவு நோய் பரவியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. சென்னையில் 16.2 சதவிகிதமும், ஈரோட்டில் 18.8 சதவிகிதமாகவும் இருக்கிறது. இந்தியர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் பின்பற்றும் அமெரிக்காவில், வருடத்திற்கு 1,00,000 பெண்கள் கர்ப்பகால நீரிழிவால் அவதிப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீரிழிவு நோய் எப்படி வருகிறது? கணையம் எனப்படுகின்ற உறுப்பானது, பீட்டா செல்களின் மூலம் இன்சுலின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இந்த இன்சுலின் சுரப்பானது, ஒருவரின் உடலிலுள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்றி உடலுக்கும் அன்றாட வேலைகளுக்கும் தேவையான சக்தியை உருவாக்கித்தருகிறது. இதனால் சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகரிப்பது தவிர்க்கப்பட்டு ஒரு சராசரி நிலையில் வைக்கப்படுகிறது. இவ்வாறு சுரக்கப்படுகிற இன்சுலின் அளவு குறைவதாலோ அல்லது சுரக்கப்பட்ட இன்சுலின் வீரியம் இல்லாமலும் மற்றும் சரியாக பயன்படுத்த முடியாத ஒரு நிலை உடலுக்கு வருவதாலோ, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் அதிகமாகி விடுகிறது. இதனால், புரதம் மற்றும் கொழுப்பு போன்ற பிற சத்துக்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு விதமான உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்த நிலையே சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோய் அல்லது மதுமேகம் என்றழைக்கப்படுகிறது. கர்ப்பகால நீரிழிவு கர்ப்பகாலம் என்பது, அதிகளவு இன்சுலினை வெளியிடுவதாகவும் அதே சமயம் எதிர் இன்சுலின் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்ட்ரான், பிளாசன்ட்டாவின் லாக்டோஜன், கார்டிசோன் மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் போன்றவைகளின் செயல்பாட்டால், குறைந்த அளவு இன்சுலின் தாங்குதிறன் அல்லது செயல்திறன் கொண்ட நிலையாகவும் இருக்கிறது. கர்ப்பகாலத்தில் நீரிழிவு ஏற்படுவதற்கு, அப்பெண்ணின் முன்கர்ப்பகால ஆரோக்கியம், பணிச்சூழல், உணவுமுறை, சமூக மற்றும் பொருளாதார நிலை ஆகியவையும் காரணங்களாகின்றன. கர்ப்பகால நீரிழிவு நோய் உள்ள பெண்கள், பிரசவத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு சீரடைந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு…
ஒரு உயிரின் தொடக்க புள்ளியாகக் கருதப்படுவது தொப்புள். அனைத்துப் பாலூட்டி உயிரினங்களுக்கும் தொப்புள் இருந்தாலும் மனிதர்களுக்கு மட்டுமே இது தெளிவாக தெரியும்படி அமைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் சேய் இருக்கும் போது அவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாகவும் இது விளங்குகிறது. அப்படிப் பார்த்தால் நம் அனைவரது வாழ்வும் ஆரம்பமாகும் இடம் அது தான். அந்த ஆரம்ப புள்ளியில் நாம் எதைச் செய்தாலும் அதன் பாதிப்பு நமது உடல் முழுவதும் ஏற்படும் என்பது உண்மைதானே. அதனால் தான் ஒவ்வொரு வாரமும் உச்சந்தலை மற்றும் தொப்புளில் எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதே சமயம் தொப்புளில் ஒவ்வொரு வகையான எண்ணெய் தேய்ப்பதன் மூலம் வெவ்வேறு விதமான பலன்களை நாம் பெற முடியும். எந்தெந்த எண்ணெய்க்கு எதன் மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா? வேப்ப எண்ணெய்: தினமும் 3 அல்லது 4 முறை தொப்புளை சுற்றித் தேய்க்க வேண்டும். பொதுவாகவே நமது அழகிற்கும் சரி ஆரோக்கியத்திற்கும் சரி வேப்ப இலையால் பல நன்மைகளைத் தர முடியும். பொலிவான சருமம் பெற, கண் தொடர்பான பிரச்னைகள் தீர, வயிற்றுக் கிருமிகள் மற்றும் புழுக்களை கொல்ல என வெப்ப மரத்தின் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம். வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் வேப்ப எண்ணெய்யைத் தொப்புளை சுற்றித் தடவுவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், தேம்பல்கள் ஆகியன நீங்கும். மேலும் முடி உதிர்வு போன்ற பிரச்னைகளுக்கும் ஒரு நல்ல தீர்வாகும். பாதாம் எண்ணெய்: தினமும் 2 அல்லது 3 முறை தொப்புளை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். நமது உடலுக்கு மிகவும் தேவையான சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஊட்டச்சத்தான ‘வைட்டமின் ஈ’ பாதம் கொட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. இந்த எண்ணெய்யைத் தினமும் தொப்புளைச் சுற்றி தேய்ப்பதன் மூலம் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாத்து சரும பொலிவும் அதிகரிக்கும். முகம் பளிச்சிட மற்றும் கூந்தல் மிருதுவாக பாதாம் எண்ணெய் பயன் படுத்துவது நல்ல பலனை தரக் கூடியது. தேங்காய் எண்ணெய்:பற்களின் பளீர் புன்னகையைக் காக்க சாப்பிட வேண்டிய ஐந்து எளிய உணவுப் பொருட்கள்… வாரம் 3 முறை தொப்புளை சுற்றித் தேய்த்தால் போதும். தேங்காய் எண்ணெய்யைத் தேய்ப்பதன் மூலம் கர்ப்பப் பை வலுப்பெற்று குழந்தை பேறு பிரச்சினைகள் நீங்கும். சரியாக மாதவிலக்கு இல்லாதவர்கள் தங்களது தொப்புளைச் சுற்றி சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவுவதால் 28 நாட்கள் சுழற்சியும் சீராக இயங்கும். கடுகு எண்ணெய்: தினமும் 2 அல்லது 3 முறை தொப்புளில் தடவவும். கடுகு எண்ணெய் தேய்ப்பதன் மூலம் குடல் அடைப்பு போன்ற பிரச்னைகள் தீர்ந்து செரிமானத்தை அதிகரிக்கும். மேலும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் பெருக்கும். வெண்ணெய்: ஒரு நாளைக்கு ஒரு முறை தொப்புளை சுற்றித் தேய்த்தால் போதும். சுத்தமான பசும் பாலில் இருந்து எடுத்த வெண்ணெய்யைத் தொப்புளில் தடவுவதன்…
தினசரி ஒரு மணி நேரம் என ஏழு நாட்கள் கேலிகிராஃபி பயிற்சி வழங்கி, கிறுக்கலான ஆங்கிலக் கையெழுத்தையும் அழகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் அரசுப் பள்ளி அன்பாசிரியர் பூபதி அன்பழகன். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் பூபதி. கரோனாவுக்கு முன்னர் தன்னுடைய பள்ளி மாணவர்களின் கையெழுத்தைப் பயிற்சி மூலம் முத்து முத்தாக மாற்றியவர், தற்போது தமிழகம் முழுவதும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கையெழுத்துப் பயிற்சியை வழங்கி வருகிறார். இதுகுறித்து ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய ஆசிரியர் பூபதி, ”அழகான கையெழுத்து, அசத்தலான ஆங்கிலம் ஆகியவைதான் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப முக்கியக் காரணம் என்பது என்னுடைய கருத்து. அதை நாம் கொடுத்துவிட்டால் எங்களை நோக்கியும் மாணவர்கள் வருவார்கள் என்று நினைத்துதான் இதை ஆரம்பித்தேன். கேலிகிராஃபி என்னும் வெளிநாட்டுக் கையெழுத்துப் பயிற்சியை, கோவை இளைஞரிடம் கற்றுக்கொண்டேன். அவர் மூலம் எங்கள் பள்ளியில் 4 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்தோம். இதில் 6,7,8-ம் வகுப்பு மாணவர்கள் அச்சுக் கோத்தது போல எழுதப் பழகினர். கரோனா காலத்தில், வீட்டில் சும்மா இருப்பதைவிட இதை மற்ற பள்ளி மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கலாமே என்று தோன்றியது. அடிப்படை கேலிகிராஃபிக்கென யூடியூப் பக்கத்தை ஆரம்பித்தேன். அதைப் பார்த்துக் கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் பலர் முன்வந்தனர். வாட்ஸ் அப் மூலம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன். கேலிகிராஃபி பயிற்சிக்கு அடிப்படை சாய்வுக் கோடு, மேல் வளைவு, கீழ் வளைவு ஆகிய மூன்று காரணிகள். முதல் நாளில் இதுகுறித்த அடிப்படைப் பயிற்சிகள், இரண்டாம் நாளில் a முதல் m வரை எப்படி எழுதுவது என்று பயிற்சி கொடுக்கப்படும். மூன்றாவது நாளில், n முதல் z வரை எழுதப் பயிற்சி அளிப்பேன். நான்காம் நாளில் A முதல் M வரையிலான சொற்களையும் ஐந்தாம் நாளில் N முதல் Z வரையான சொற்களையும் எழுதும் பயிற்சி உண்டு. அதேபோல 6-வது நாளில், ஒரு பத்தியை எழுதவும் 7-வது நாளில் ஒரு முழுப்பக்கக் கடிதம் எழுதும் பயிற்சியையும் கொடுக்கிறேன். அத்துடன் பயிற்சி முடிந்தது. இத்துடன் தினசரி அரை மணி நேரம் எழுதிப் பழகினால் போதும், கையெழுத்து நிச்சயமாக மாறும்.இரவில் நன்றாக தூக்கம் வர வேண்டுமா? இதோ ஒரு இயற்கை வழி! மேற்புற, கீழ்ப்புற வளைவுகளை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாணவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டதுண்டு. அதேபோல, கேப்பிட்டல் எழுத்துகளை எழுதவும் மாணவர்கள் சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறேன். 6-வது நாளில் இருந்து ஒற்றைக்கோடு உள்ள நோட்டில் எழுதப் பயிற்சி வழங்குவதால், மாணவர்களால் சுலபமாக அச்சில் கோத்தாற்போல எழுத முடியும். இதுவரை தமிழகம் மற்றும் புதுவையில் 120 மாணவர்கள் இந்தப் பயிற்சியின் மூலம் தங்கள் கையெழுத்தை அழகாக்கி இருக்கின்றனர். 60 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்திருக்கிறேன். இன்னும் சில நண்பர்கள் ஆர்வத்துக்காகக் கற்றுக்கொள்கின்றனர். 45 வயதான எல்ஐசி ஏஜெண்ட்…
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், ஐந்து நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி, உழவர்கள், பெண்கள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு அளிக்கப்படுகிறது. வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும் ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது. இதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்! இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை அளிக்கப்படுகிறது. பயிற்சிக் கட்டணமாக, நபர் ஒன்றுக்கு ரூ.11,800 வசூலிக்கப்படுகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே உள்ளன. மேலும் விவரங்களுக்கு 0422-6611310, 95004-76626 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்,” எனக் கூறப்பட்டுள்ளது. home remedies for personal health |காம உணர்வை அதிகரிக்க உதவும் சூப்
‘நாம் ஓடி ஓடி உழைப்பது எதற்கு எல்லாம் இந்த வயித்துக்கு தானே?’ வாய்க்கு ருசியாக முதலில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு சற்று ஓய்வெடுக்க அமரும் போது தான் நம் கண்ணில் படும் வளர்ந்து நிற்கும் தொப்பை. அதற்காகச் சாப்பிடுவதை நிறுத்தி பட்டினி கிடக்கக் கூடாது, அதனால் தொப்பை குறையப் போவதும் கிடையாது. தொப்பையை வைத்து பலரும் படாத பாடு படுகிறோம், பிடித்த ஆடையைப் போட முடியாது, குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முடியாது மற்றும் ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படும். இந்தத் தொப்பையை குறைக்கப் பல வழிகளில் நீங்கள் முயற்சித்து இருப்பீர்கள், ஆனால் பலன் எதுவும் கிடைத்திருக்காது. கவலையை விடுங்கள் உங்களது தொப்பை குறைந்து தட்டையான வயிற்றை ஒரே வாரத்தில் பெற இந்த 5 விஷயங்களைச் செய்தால் போதும். 1. நிறையத் தண்ணீர் குடியுங்கள்: தட்டையான வயிற்றைப் பெற வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டாலே அதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது நிறையத் தண்ணீர் குடிப்பது தான். பொதுவாகவே நிறையத் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒன்று, அதிலும் குறிப்பாக உடலில் நீர் சத்து அதிகமாக இருந்தால் அது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கும், இதனால் தொப்பையின் அளவும் குறையும். சில சமயங்களில் உடலுக்குத் தேவையான நீர் பற்றாக்குறையே வயிறு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. சுவைக்கு வேண்டும் என்றால் தண்ணீரில் எலுமிச்சை, ஆரெஞ்சு, வெள்ளரிக் காய்களை நருக்கி பொட்டு குடிக்கலாம். 2. கிரீன் டீ: இது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒரு வழி தான், இன்னும் சொல்லப் போனால் நம்மில் பலர் இதை முயற்சி செய்துவிட்டு இதைக் குடிப்பதற்கு தொப்பையுடனே வாழ்ந்து விடலாம் என்ற முடிவை எடுத்திருப்போம். ஆனால் உண்மையில் கிரீன் டீ உடலுக்கு அவ்வளவு நன்மை தரக்கூடிய ஒன்றாகும். இதில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட் தொப்பையைக் குறைத்து உடலின் மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும். ஆகையால் தினமும் ஒரு கப் கிரீன் டீ கட்டாயம் குடிக்க வேண்டும். 3. நார் சத்து நிறைந்த உணவுகளை கம்மியாக உண்ணுங்கள்:இலவச தையல் பயிற்சி நார் சத்து உடலுக்குத் தேவையான ஒன்று என்றாலும் அதை அதிகமான சாப்பிடுவது வயிற்றை வீக்கம் அடையைச் செய்யும். உதாரணத்திற்கு பீன்ஸ், கேரட், தேங்காய், காலிஃப்லவர் போன்றவை நார் சத்து அதிகமாக இருக்கும் உணவுப் பொருட்கள், அதற்காக முற்றிலும் அவற்றைத் தவிர்த்து விடாதீர்கள், நார் சத்தும் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதற்குப் பதிலாக பொட்டாசியம் சத்து அதிகம் இருக்கும் வாழைப்பழம், பப்பாளி, மாம்பழம் மற்றும் தயிர் ஆகியவற்றைச் சாப்பிடுவது மெட்டபாலிஸம் அளவைச் சரி செய்யும். 4. ஏரோபிக் உடற்பயிற்சி: ஏரொபிக்கை போல் வேறு எந்த உடற்பயிற்சியும் தொப்பையை வேகமாகக் குறைக்காது. இது பெரும்பாலும் 67% வயிற்று கொழுப்பை கரைத்துவிடும். ஒரு வாரத்திற்குக் குறைந்தது 150 நிமிடங்கள் இதைச் செய்தால் போதும், அதாவது நீச்சல் அடிப்பது, நடைப்பயிற்சி செய்வது இல்லையேல் வேகமாக ஓடுவது போன்றவற்றை முயற்சி செய்யவும். 5….
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை. மிகவும் நேர்த்தியாக உடையணிந்து தனது இரண்டு சக்கர வாகனத்தில் விரைந்து கொண்டிருந்த அந்த இளைஞர் வண்டியை மெதுவாக்கி ஓரம் கட்டும் போதே வண்டியோடு சரிகிறார். பரபரப்பாக சீறிக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியாகி அவரிடம் நெருங்க, சிக்னலில் ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த டிராபிக் காவலரும் விரைகிறார். கூடி நின்ற மக்கள் தண்ணீர் தெளிக்கிறது. எங்கிருந்தோ ஒரு ஆட்டோகாரர் வந்து நிற்கிறார் ‘வண்டியிலே ஏத்துங்க பக்கத்துல தான் ஆஸ்பத்திரி’ என்று பதற்றக் குரல் வீச ‘நல்ல வேளை ஸ்லோ பண்ணி விழுந்தாப்பலே வந்த வேகத்துல விழுந்திருந்தா சிதறி இருப்பாப்பலே!’ ‘வண்டியை ஓரங்கட்டுங்க!’ என்று போலிஸ் அந்த இளைஞனின் இருசக்கர வாகனத்தை ஓரம் கட்ட, ஐ.டி. கார்டு பார்த்து கம்பெனிக்கு போன் செய்ய இன்னொரு உதவிக்கரம் முயல. ஒரு வயதான பெண் அந்த இளைஞனை ஆட்டோவில் ஏற்றி கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைகிறது. அவுட் பேஷண்ட் பிளாக்கில் சோதித்த டாக்டர் வந்தவர்களிடம் சொல்கிறார் ‘பதற்றப்படாதீங்க…..உடல் வறட்சியினாலே மயக்கம்… Dehydration… டிரிப் ஏத்தினா எல்லாம் நார்மலாகிவிடும்’ வந்தவர்கள் பெருமூச்சு விட …’டெய்லியும் ஒருத்தனாச்சும் மயக்கம் போடறதா பார்க்கிறேன்…!’ என்று புள்ளி விவரம் பேசினார் ஆட்டோக்காரர். இந்த சம்பவம் ஒரு சோறு பதம். சென்னையில் கொளுத்தும் வெயிலில் இந்த நிகழ்வுகள் சகஜமாகிவிட்டது. காலை பதினோரு மணி முதல் மாலை நான்கு மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம். இந்த கட்டுரைய எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் சென்னை வெயிலின் அளவு 107 டிகிரி ஃபாரீன்ஹீட்டை தாண்டி கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உடல் வறட்சி பற்றிய விழிப்புணர்வும் பாதுகாத்தும் கொள்ளும் வழிமுறைகளும் அறிந்து கொள்வது அவசியமாகிறது. உடல் வறட்சி என்றால் என்ன ?மனநலம் பாதித்தவரின் வயிற்றில் சிம் கார்டு, நாணயங்கள்: எண்டோஸ்கோபி மூலம் அகற்றம் உடலின் இயக்கத்திற்கு நீர்ச்சத்து அவசியம் என்பதை அறிவோம். ரத்த ஓட்டமும் அதன் அடிப்படையான காற்றோட்டம் சீராக இயங்க செய்யும் நுரையீரல், இதய ஓட்டமும் ஒரு ஒழுங்கு முறையில் இயங்க உடலில் நீர்ச்சத்தானது போதுமான அளவில் இருக்க வேண்டும். இந்த நீர்ச்சத்து குறைவாக ஏற்படும் பாதிப்புதான் உடல் வறட்சி. கேட்பதற்கு ஏதோ ஒரு சாதரணமான பாதிப்பு போன்று தோன்றும் கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் உயிருக்கே உலை வைக்கும் அளவிற்கு ஆபத்தானது இந்த உடல் வறட்சி. பொதுவாக உடலுக்கு தேவையான அளவு நீரை நாம் அருந்தவில்லையெனில் இந்த நீர்ச் சத்து குறைப்பாடுகள் ஏற்படும். ஆனால் வெயில் காலங்களில் நமது உடலில் இருந்து வியர்வையாக அளவுக்கு அதிகமாக நீர் வெளியாவதின் மூலமாக வெயிலில் திரிவதின் காரணமாக ‘சன் ஸ்ட்ரோக்’ என்றழைக்கப்படும் பாதிப்பினால் இந்த உடல்வறட்சி அதிகம் ஏற்படுகிறது. உடல் வறட்சியின் அறிகுறிகள் எப்படி இருக்கும் ? மிக எளிதான அறிகுறிகள் என்றால் தாகம் எடுப்பதுதான். ஆனால் தாகம் எடுக்கும் போது எல்லாம் தண்ணீர் குடிப்பதை தள்ளி போடும் சோம்பேறித்தனம் நம்மிடம்…
உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி உலக நாடுகளிலேயே இந்தியாவிலேயே அதிகமான நீரிழிவு நோயாளிகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் வயதானவர்களுக்கு மட்டும் மரபணு முதிர்ச்சியினால் வந்த இந்த நோய் இன்றைய நிலையில் சர்வ சாதாரணமாகச் சிறியவர், பெரியவர் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் தாக்கும் ஒரு முதன்மை நோயாக உருவெடுத்துள்ளது. அந்த அறிக்கையின்படி பட்டியலில் முதலிடத்தில் இந்தியாவும், அதைத் தொடர்ந்து வரிசையாகச் சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, ஜப்பான், பாக்கிஸ்தான், ரஷ்யா, பிரேசில், இத்தாலி மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உள்ளன. 2000-ம் ஆண்டில் இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 31.7 மில்லியன் ஆகும், இந்த எண்ணிக்கை 2030-ம் ஆண்டிற்குள் அப்படியே இரட்டிப்பாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 79.4 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் 2030-ம் ஆண்டில் பாதிக்கப்பட்டிருப்போம். இயற்கையாகவே உடலில் சுரக்க வேண்டிய இன்சுலின் உற்பத்தியாகாமல் போவதால் ரத்தில் இருக்க வேண்டிய சர்க்கரை அளவு குறைகிறது, இதுவே நீரிழிவு நோயாளியாக ஒருவரை மாற்றுகிறது. இந்த நிலை வெகு நாட்களுக்கு நீடித்தால் அது இதய நோயை உண்டாக்குகிறது. மீன் சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வருமா! ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன? தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் கூறியுள்ளதாவது, சமமான உணவு பழக்கத்தின் மூலமே இதைக் கட்டுப்படுத்த முடியும், மேலும் இதனால் ஏற்படும் அபாயத்தில் இருந்து தப்பிக்க சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிகமான எடை நீரிழிவு நோய் வருவதற்கான ஒரு முக்கிய காரணமாகும். எனவே ஆரோக்கியமான உணவு பழக்கத்துடன் உடற்பயிற்சி செய்தால் உடல் பருமனை தவிர்க்கலாம். நவம்பர் 14-ம் தேதியான இன்று உலகம் முழுவதிலும் உலக நீரிழிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமானது மக்களிடையே நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதைக் கூறுவதே. இந்தத் தினத்திலாவது நீரிழிவு நோய் பாதிப்பை விளையாட்டாகக் கருதாமல் அதே சமயம் உயிரைப் பரிக்கும் கொடிய நோயாகவும் கண்டு அஞ்சாமல் அதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதைக் கண்டறியுங்கள். நீரிழிவு நோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். நன்றி Hindu உஷார்! பற்களைச் சுத்தமாகப் பேணாவிட்டால் உணவுக்குழாய் கேன்சர் வர வாய்ப்பு!
முதலில் தக்காளியைசுகாதார விழிப்புணர்வுகால அட்டவணை வெளியீடுசின்னதாக அரிந்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கரைசலாக்கி வைத்துக் கொள்ளவும். நன்றி Hindu குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும்
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்புதுாரில் கனரா வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மையம், மத்திய, மாநில அரசுகளின், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி செயல்படுகிறது. இங்கு தையல் பயிற்சி உட்பட பல்வேறு விதமான சுயதொழில் பயிற்சிகள் மதிய உணவோடு, முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. 17ம் தேதி முதல் தொடர்ந்து, 30 நாட்கள் மகளிர் ஆடை தையல் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. பயிற்சியில் சேர வயது வரம்பு, 18 முதல், 45க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி எட்டாம் வகுப்புக்கு மேல். உங்களுக்கு இதய நோய் உள்ளதா? தெரிந்து கொள்ள குனிந்து கால் விரலைத் தொட்டு பாருங்கள்! பயிற்சி முடிவில் அரசு சான்றுகளுடன், அரசு திட்டங்களின் வாயிலாக வங்கி கடன் பெற ஆலோசனைகள், தொழில்முனைவோர் திட்டங்களும் எடுத்துரைக்கப்படும். கிராமப்புற மகளிருக்கு முன்னுரிமை உண்டு. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர், 0422 2692080 மற்றும் 94890 43926 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
சென்னையில் 15 வருடங்களுக்கு முன்பு ஸ்பென்சர் பிளாஸா மாதிரி சில இடங்களில் மாத்திரமே எஸ்கலேட்டர் இருந்தது. ஒருமுறை நாங்கள் அங்கே சென்றிருந்த போது எனக்கு எஸ்கலேட்டர் குறித்த பயம் இருந்தாலும் அப்போது எப்படியோ அந்தப் பயத்தைப் பற்றி பொருட்படுத்தாது என் 70 வயதுப் பாட்டியுடன் அதில் ஏறிச் சென்றேன். எஸ்கலேட்டரில் ஏற எனக்குத்தான் பயமே தவிர பாட்டி ரொம்ப ஜாலியாக அதில் ஏறி வந்தார். இறங்கியதும் இதென்னடா? அவ்வளவு தானா? நாம கீழ இறங்கும் போதும் இதிலேயே இறங்கலாம் என்றவாறு அப்புசாமியின் மாடர்ன் சீதாப்பாட்டி ஸ்டைலில் புன்னகை பூத்தார். ஒரே ஒரு முறை… அது தான் முதல் முறையும் கூட… அப்படி ஒரே ஒரு எஸ்கலேட்டர் பயணத்திலேயே எனக்கு நெஞ்சுக்குள் ஐஸ் கத்தியை இறக்கியதைப் போல மனமெல்லாம் எப்போதடா பத்திரமாக அதிலிருந்து கீழே இறங்குவோ என்று பரபரப்பாக இருந்தது. அதாகப் பட்டது அப்போது நான் நன்கு உணர்ந்து கொண்டேன், எனக்கு எஸ்கலேட்டரில் பயணிப்பது என்றால் ரொம்பப் பயம் என்று! அதற்குப் பின் இப்போதெல்லாம் சென்னையில் பல இடங்களில் எஸ்கலேட்டர் வந்து விட்டது. இன்னும் சில வருடங்களில் தடுக்கி விழுந்தால் ஏதாவதொரு எஸ்கலேட்டரில் தான் விழுந்து எழுவோமோ என்னவோ! அப்படியான நாட்கள் வந்து விட்டன. ஆனால், எனக்கு எஸ்கலேட்டர் பீதி மட்டும் இன்னும் தீரவே இல்லை. எங்கு சென்றாலும் எஸ்கலேட்டர் இருந்தால் உடனே அங்கே மாடிப்படிகளோ அல்லது மின் தூக்கியோ( லிஃப்டோ) இருக்கிறதா? எனத் தேடத்துவங்கி விடுகிறேன். அவை இரண்டும் இல்லாமல் வெறும் எஸ்கலேட்டரில் தான் மாடிகளைக் கடக்கவேண்டுமெனில் அங்கே ஷாப்பிங் செய்யவே தேவையில்லை எனப் புறக்கணிக்கக் கூட தயாராக இருக்கிறேன் நான். காரணம் எனக்கிருக்கும் எஸ்கலேட்டர் பயம் தான். உலகில் நான் மட்டும் அல்ல. இன்னும் பலருக்கும் கூட இந்த பயம் இருக்கிறதெனச் சொல்கின்றன கூகுளும், யூ டியூபும் இன்னபிற அறிவியல் சஞ்சிகைகளும். இதை மருத்துவப் பெயரில் சொல்வதென்றால் ‘எஸ்கலோஃபோபியா’ என்கிறார்கள். எஸ்கலோஃபோபியா இருப்பவர்களுக்கு எஸ்கலேட்டரில் பயணிக்க பயம் இருக்கும். அந்தப் பயம் சாதாரணமானது தான் எனில் உரிய துணை இருப்பின் அதாவது எஸ்கலேட்டர் பயன்படுத்த உங்களை ஊக்குவிக்கக் கூடிய அளவில் கணவரோ / மனைவியோ, நெருங்கிய நண்பர்களோ, உறவினர்களோ, உங்களது குழந்தைகளோ இருந்து அவர்களது துணையுடன் நீங்கள் எஸ்கலேட்டர் பயத்தைக் கடந்து விட்டீர்கள் எனில் உங்களது எஸ்கலோஃபோபியா குறித்து நீங்கள் அஞ்ச வேண்டியதே இல்லை. உங்களால் அந்த பயத்தை எளிதில் கடக்க முடியும். மாறாக எந்தவிதத்திலும் உங்களது எஸ்கலேட்டர் பயம் மறையவே இல்லை… நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் போகிறது. எஸ்கலேட்டரைக் கண்ட மாத்திரத்தில் தலைசுற்றி மயக்கம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியான சமயங்களில் நீங்கள் நிச்சயம் உங்களது பயத்தை எதிர்கொண்டு போராடி வெல்லத்தான் வேண்டும். ஏனெனில், இனி வரும் உலகில் எஸ்கலேட்டர்கள் எனும் நகரும் படிக்கட்டுகளின்றி உங்களால் சில இடங்களுக்குச் செல்லவே முடியாமல் ஆகலாம். ஒவ்வொருமுறையும் படிகளையும், லிஃப்டையும் தேடி…
பெண்கள் இருக்கும் வீடுகளில் நாப்கின் அவசியம் இருக்கும். மாதாந்திர மளிகை லிஸ்டில் அதுவும் இடம்பெறும். அத்தியாவசியப் பொருளான அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து இங்கு பார்க்கப் போகிறோம். 16 வருடங்களுக்கு முன் The United States of America, Hwaii யில் Honolulu என்னும் நகரத்தில் உள்ள Ala wai Golf Course Club house ல் 08.05.2002 அன்று The vegetarian society of Hwaii என்னும் NGO அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் Dr.Edward.K.Fujimoto,PH,MPH,CHES என்னும் மருத்துவ ஆராய்ச்சியாளர் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து ஒரு ரசாயனத்தை பற்றி ஒரு மணி நேரம் விரிவாக பேசியுள்ளார். இவர் Castle Medical Centre ல் Wellness Manager & Clinical Preventive care & Lifestyle Medicine Specialist ஆக பணியாற்றி வருகிறார். அது என்ன ரசாயனம்? அவர் என்ன பேசினார்? என்பதை இப்பொழுது விரிவாக பார்க்கலாம் வாருங்கள். அவர் பேசிய ரசாயனத்தின் பெயர் Dioxin! Dioxin என்னும் ரசாயனம், Group of 75 Chlorinated Hydrocarbon Chemicals-ல் ஒரு வகையை சேர்ந்தது. ஒரு நாட்டில் ராணுவ சண்டை வரும் வரை எப்படி அந்நாட்டில் Terrorist இருப்பதே தெரியாதோ, அது போல் தான் இந்த Dioxin எனும் ரசாயனமும் உடலில் இருப்பது தெரியாது என்கிறார். இந்த Dioxin ரசாயனம் எங்கிருந்து வருகிறது? எதில் எல்லாம் கலந்துள்ளது என்பதை பார்ப்பதற்கு முன், இவை இப்பூவுலகிற்கு ஏற்படுத்திய பாதிப்புகளை பார்ப்போம் வாருங்கள். Dioxin என்னும் ரசாயனத்திற்கு Expose ஆன காட்டு விலங்குகளை பல வருடம் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இவர் கண்டறிந்த பாதிப்புகள், சமச்சீரற்ற ஹார்மோன் அளவுகள். குறைந்த கருவுறுதல். மீன்களின் கரு முட்டை வளர்ச்சி குறைந்து இனப்பெருக்கம் குறைந்தது. பறவைகளின் இனப்பெருக்கம் குறைந்து. முட்டை ஓடுகள் லேசானது. மாறுபட்ட பாலுணர்வு செயல்கள். gulls என்னும் பெண் பறவை இன்னொரு பெண் பறவையுடன் பாலுணர்வுகொள்ள முயற்சி, இது California வில் நடந்தது. நோய் எதிர்ப்பு சக்தியில் மறுகட்டமைப்பு. பெண் மீன்களுக்கு, ஆண்தன்மை அதிகரித்து, இருபால் கலந்த மீன்கள் பெரிய ஏரிகளில் உள்ளது. ஆண் முதலைகளுக்கு, பெண்தன்மை அதிகரித்து, ஆண்குறி மற்றும் விதைப்பை அளவுகள் குறைந்து காணப்படுகிறது. முதலைகளளின் விதைப்பையில், வம்சாவளி வந்த விதைகள் மாறுபட்டுள்ளது. ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் புற்றுநோய். கரு முட்டை குழாய், கருப்பை, கருப்பை வாய் தவறான வடிவமைப்பில் உருவாகி உள்ளது. எலும்பின் அடர்த்தி மற்றும் வடிவமைப்பு மாறுபட்டுள்ளது. Florida வில் panther என்னும் கருஞ்சிறுத்தையின் ஹார்மோன் சோதித்து பார்த்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. ஆண் சிறுத்தையின் உடலில், ஆண் ஹார்மோனை விட பெண் ஹார்மோன் அதிகமாக இருந்தது. பெண் சிறுத்தையின் உடலில், பெண் ஹார்மோனை விட ஆண் ஹார்மோன் அதிகமாக இருந்தது. ஹார்மோன்கள் தலைகீழாக மாறி இருந்தததையும், அனைத்தும் ஹார்மோன் தொடர்புடைய பிரச்னைகளாகவே இருந்ததையும் கண்டு அதிர்ந்து போனார். மேலும் ஆராய்ந்ததில், Dioxin…
மாதவிடாய் என்பது பெண்களின் வழக்கமான உடல் செயல்பாடு என்கிற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. இந்தியாவில் கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பு 2014 -ஆம் ஆண்டின் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி சுமார் 42சதவித பெண்களுக்கு மாதவிடாய் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பது தெரியவந்துள்ள தகவல். அதோடு மாதவிடாய் காலங்களில் உடலை எந்தளவுக்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வும் அவர்களுக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது. மாதவிடாய் காலங்களில் சரியான முறையில் பராமரிக்கவில்லையென்றால் நோய் தாக்கம் ஏற்படும், மற்றும் இதனால் குழந்தை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரியாமல் உள்ளனர். பெண்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மட்டுமல்ல, வறுமையில் உழலும் ஆப்பிரிக்கா நாடுகளிலும், பணக்கார நாடான அமெரிக்காவிலும் மாதவிடாயால் பெண்கள் குறிப்பாக பள்ளி கல்லூரி செல்பவர்கள் அதிகம் பாதிப்படைகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். மாதவிடாய்க்குப் பயன்படுத்தத் தேவையான சுகாதாரமான பொருட்கள் கிடையாமையாலும் தண்ணீர், துப்பரவு, சுகாதார வசதிகள் இல்லாமையாலும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் சிறுமியர் ஐந்து நாட்கள் வரை பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாமல் இருக்கின்றனர். கடந்த 2015 -ஆம் ஆண்டு வங்காள தேசத்திலுள்ள ஒரு பள்ளியில் துப்பரவு வசதிகளை மேம்படுத்தியதால் அப்பள்ளியின் சிறுமியரின் சேர்க்கைப் 11சதவிகிதம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள பள்ளிகளில் மாதவிடாய்க் கழிவு அகற்றல் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை. உலகளவில் பள்ளிகளில் மாணவியர்களுக்குத் தண்ணீர் மற்றும் துப்பரவு வசதி 47சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. பள்ளிகளில் கழிவறைகள் இருந்தாலும் கூட அங்கு மாதவிடாய் கழிவுகளைச் சேகரிக்கும் கூடைகள் வைக்கப்பட்டிருப்பதில்லை. இதனால் பயன்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட மாதவிடாய் அணையாடைகள் பள்ளி வளாகத்தில் பல்வேறு இடங்களிலும் கிடக்கிறது ஆனால் நம் தமிழகத்தில் இது போன்று பல இன்னல்கள் குறைவுதான் என்று சொல்லலாம். மக்களிடம் இது போன்று மாதவிடாய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஜெர்மனியைச் சேர்ந்த வாஸ் என்கிற தனியார் சேவை நிறுவனம் தான் மே 28- ஆம் தேதியை உலக மாதவிடாய் சுகாதார நாளாக பல நாடுகளில் உள்ள சுகாதார அமைப்புகளின் ஆதரவோடு இந்த நாளை உருவாக்கி அறிவித்தது. அந்தத்தினத்தில் பல பேரணி, கருத்தரங்குகள், விழிப்புணர்வு நாடகம், கட்டுரைப்போட்டிகளை நடத்தி வருகிறது. மாதவிடாயின்போது பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள்! கால்சியம் : அந்த நாட்களில் கால்கள் இழுப்பதும், அடி வயிற்றில் அதிக வலியும் இருக்கும். அதனால் கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், வெண்டைக்காய், பாதாம் ஆகியவற்றை சாப்பிடுங்கள். மேலும் கண்டிப்பாக ஏதேனும் கீரைகளை சேர்த்துக் கொண்டால் படிப்படியாக இந்தப் பிரச்னைகள் குணமடையும்.இந்த 7 காரணங்களைத் தெரிந்து கொண்டால் தினமும் வாழை இலையில்தான் சாப்பிடுவீர்கள்! வைட்டமின்: வைட்டமின் பி6 நமது உடலில் ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளை சரி செய்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, “ப்ரி மென்ஸýரல் சின்ட்ரோம்’ஐ குறைக்கிறது. வைட்டமின் டி எலும்புகளை வலுவாக்கிறது. மிகவும் முக்கியமாக, மாதவிடாய்க்கு முன்பு மேற்கூறிய வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கும் ஆரஞ்சு, நட்ஸ் வகைகள், வாழைப்பழம், மீன்,…
ஷேன் டிரென்ச் என்னும் இந்த நபர் தினமும் 40 கேன் அதாவது 13 லிட்டர் கோகோ-கோலா–வை குடித்து வந்துள்ளார். 21-வயதே ஆன இவர் இதன் சுவைக்கு அடிமையாகி நாள் ஒன்றிற்கு இவ்வளவு சர்க்கரை கலவையைக் குடித்த காரணத்தால் இவரது உடல் எடை 203 கிலோவைத் தொட்டது. மீன் சாப்பிடுவதாக இருந்தால் கூட அந்த மீனை கோகோ-கோலாவை ஊற்றித் தான் இவர் கழுவி சமைப்பாராம். காலை, மதியம், இரவு என எப்போது உணவு உண்டாலும் தண்ணீருக்கு பதிலாக இதைத் தான் குடிப்பாராம். இவருடைய இந்த கோகோ-கோலா வெறி நாளொன்றிற்கு 5,250 கெலோரிகளை தந்தது. இதனால் இவரது உடல் அதிக பருமனடைந்ததோடு, கோக்கில் இருக்கும் அதிக சர்க்கரை இவருக்குப் பல ஆரோக்கிய சீர்கேட்டையும் தந்தது. இந்த அதீத உடல் எடையால் நடக்க, நீண்ட நேரம் நிற்க, படிக்கட்டுகள் ஏறி, இறங்க என அனைத்து வேலைகளும் இவருக்குக் கடினமானது. சில சமயங்களில் தன்னுடைய வேலைகளைக் கூட இவரால் செய்து கொள்ள முடியவில்லை. இதற்காக மருத்துவர்களை ஆலோசித்த போது தான் இவருக்கான அதிர்ச்சி காத்திருந்தது. இவரது உடலை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் இவர் இந்தப் பழக்கத்தை இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் இவர் இறந்து விடுவார் என்று தெரிவித்துள்ளனர். உயிர் மீது வந்த பயத்தால் எப்படியாவது இந்தப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என்று முடிவெடுத்த ஷேனுக்கு அப்போது தான் உண்மையான சவால் ஒன்று வந்தது. இதன் சுவைக்கு அடிமையாகிப் போனதால் இவரால் இந்தப் பழக்கத்தை கை விட முடியாமல் தவித்தார்.தினமும் காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்னவாகும்? ஆராய்ச்சியும், ஆயுர்வேதமும் சொல்லும் உண்மை! தன்னுடைய சுவை அரும்புகளை ஏமாற்ற இவர் ஷான் ஒரு முடிவெடுத்து, சாதாரண கோகோ-கோலாவுக்கு பதிலாக சர்க்கரை சேர்க்கப்பட்டாக கோகோ-கோலா ஸீரோ-வை குடிக்கத் துவங்கினார். இதனால் இவர் உடலின் சர்க்கரை அளவு மிகவும் குறைந்ததால் மிகவும் சோர்வடைந்து செயலிழந்து போனார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் போராடி 69 கிலோ எடையைக் குறைத்தார். பின்னர் மெல்ல மெல்ல மொத்தமாக கோக் குடிப்பதையே நிறுத்தினார். முன்னர் இருந்த உடல் எடையைச் சரி பாதியாகக் குறைத்ததால் இவருடைய ஆரோக்கியம் சற்று தேரியது. 2016-ம் ஆண்டு இரைப்பையில் பைப்பாஸ் அறுவை சிகிச்சையை இவர் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர், ஆனால் இந்தத் தீய பழக்கத்தை விடுத்து சில உடற் பயிற்சிகளின் மூலமே எந்தவொரு அறுவை சிகிச்சையும் செய்யாமல் இவர் குணம் அடைந்ததைக் கண்டு மருத்துவர்களே வியந்து போனார்கள். இவருடைய இப்போதைய உடல் எடை 127 கிலோ, இதையும் குறைத்து 100 கிலோவிற்கு வரவே தான் முயற்சி செய்து கொண்டிருப்பதாக இவர் கூறியுள்ளார். கட்டுக்கோப்பே இல்லாத உணவு பழக்கம் நமக்கு எமனாய் வந்து அமையும் என்பதற்கு இவருடைய வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம். நன்றி Hindu உடல் பருமன் குறைய வேண்டுமா? இது ஒரு சிறந்த வழி!
பிறந்த குழந்தைகள் கரோனாவினால் பாதிக்கப்படும் போது அதன் பெற்றோர் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர் தங்களது குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியானல் என்ன செய்வது என்பது குறித்து பொதுவாக கவலைப்படுவார்கள். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் அவர்களுக்கு தடுப்பூசியும் தற்போது கிடையாது போன்ற விஷயங்கள் பெற்றோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அவர்களுக்கான நல்ல செய்தி என்னவென்றால் குழந்தைகளுக்கான கரோனாவின் பாதிப்பு மிகக் குறைவு என்பதுதான். பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்த பெற்றோர்களின் கேள்விகளும் மற்றும் அதற்கான பதில்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு கரோனா தொற்று இருக்கும் போது என் குழந்தையை தொற்றிலிருந்து பாதுகாக்க முடியுமா? நீங்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவராக இருக்கும் பொழுதும் உங்களது குழந்தையை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும். அதற்கு நீங்கள் சில பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். குழந்தையினை தொடுவதற்கு முன்பு கைகளை சோப்பு போட்டு நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு பாலூட்டும் போதும் அவர்களுடன் நெருங்கி இருக்கும் போதும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தற்போது வரை தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏதும் பரவுவதாக நிரூபணமாகவில்லை. கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தாய்ப்பால் கொடுக்காமல் இருக்கலாம் என நினைக்காமல் தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்திட வேண்டும். பிறந்த குழந்தையின் உடன் பிறந்தவர்கள் மூலம் கரோனா பரவுவதை தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தடுக்கலாம். குழந்தைக்கு சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? பெரியவர்களுக்கு எப்படி கரோனா பரிசோதனை செய்கிறோமோ அதே போல குழந்தைகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளலாம். குழந்தைகளுக்கு ரேபிட் ஆண்டிஜன் சோதனை செய்யலாம். ஆனால், இந்த சோதனையை மேற்கொள்வதற்கு குழந்தையின் வயது மிகவும் முக்கியம். அதனால் குழந்தைக்கு சோதனை செய்யும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ளலாம். குழந்தைகளுக்கு குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் கரோனா: கரோனா பரவத் தொடங்கிய நாள் முதலே அனைத்து வயது குழந்தைகளின் மீதும் அதன் தாக்கம் குறைவாக இருந்துள்ளது. பெரியவர்களில் ஏற்படுவதுபோல் எந்தவொரு பாதிப்பும் குழந்தைகளுக்கு ஏற்படவில்லை. கரோனாவினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற தேவையும் உருவாகவில்லை. கரோனாவினால் குழந்தைகளின் இறப்பு என்பதும் மிக அரிது. இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டிற்குள் இருமடங்காக அதிகரிக்கும் அபாயம்! பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி இல்லாத போதிலும் குழந்தையின் தாய் தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவரிடமிருந்து குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதன் மூலம் குழந்தைகள் கரோனாவிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு பொதுவாக என்ன மாதிரியான அறிகுறிகள் தோன்றும்? குழந்தைகள் கரோனாவினால் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு பலவிதமான அறிகுறிகள் தென்படும். ஆனால், 25 சதவிகித குழந்தைகளுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாமலே கரோனா தொற்று ஏற்படுகிறது. குழந்தைகளுக்குப் பொதுவாக காய்ச்சல், மூக்கடைப்பு, இருமல் மற்றும் உணவு உட்கொள்வதில் சிரமம்…
கடந்த சில நாட்களாக கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் குறித்து அண்டை மாநிலமான தமிழகத்திலும் கடும் பீதி நிலவுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் குறித்த பீதியைப் போக்கும் விதத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது. அவை முறையே; நிபா வைரஸ் தொற்று இருக்கும் என சந்தேகிக்கும் இடங்களில் வாழும் பன்றிகளிடமிருந்து மனிதர்கள் விலகியிருத்தல் நல்லது. பன்றிக்கறி உண்பவர்கள் எனில் நிபா வைரஸ் தொற்று பீதி நீங்கும் வரை பன்றிக்கறியுண்ணும் ஆசைக்கு முற்றும் போடுவது நல்லது. பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு முன் நன்றாக நீரில் கழுவிய பின்னரே உண்ண வேண்டும், அணில் மற்றும் வெளவால் கடித்த பழங்களை உண்ணக் கூடாது. மூளைக்காய்ச்சல் & இன்ஃபுளூயன்ஸா வைரஸ் தொற்று இருப்பவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து போதிய சிகிச்சை அளித்துக் காக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய நோய்த்தொற்று உள்ளவர்களைத் தான் நிபா வைரஸ் எளிதில் டார்கெட் செய்கிறது. எனவே நோய் நாடி நோய் முதல் நாடி தீர்ப்பது பாதுகாப்பானது. நிபா வைரஸ் தொற்றைத் தவிர்க்க வனத்துறை, கால்நடை வளர்ப்புத் துறை, வனவிலங்குப் பாதுகாப்புத்துறை என மூன்று துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், காரணம் வனங்களில் வாழும் வெளவால்களிடமிருந்து பன்றிகளுக்கும் பிறகு பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்குமென இந்த வைரஸ் பரவுகிறது. கேரளாவில் இந்த வைரஸ் தொற்றால் 10 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். எனவே நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அண்டை மாநிலத்தவர்களான நம் தமிழக மக்களுக்கும் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நம்பகத்தன்மை வாய்ந்த தரமான ஆய்வகங்களில் மட்டுமே நிபா வைரஸ் தாக்கம் குறித்த சந்தேக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். வீடுகளில் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு மிருகங்கள் வளர்ப்பவர்கள் தங்களது விலங்களிடம் நிபா வைரஸ் தொற்று அறிகுறி இருக்கிறதா என கால்நடை மருத்துவர்களை அணுகி சோதித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வீட்டு விலங்குகள் வாயிலாகவே இந்த நோய் எளிதில் பரவுகிறது. நோய்த்தாக்கம் ஏற்பட்ட நபரை உடனடியாகத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது நல்லது. நோயின் துவக்க கட்டத்திலேயே சிகிச்சை வழங்கத் தொடங்குவது உயிரிழப்பைத் தடுக்கும். நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள்…இலவச தையல் பயிற்சி நிபா வைரஸ் மனித உடலைத் தாக்கிய மாத்திரத்தில் 3 முதல் 14 நாட்களுக்குள் மனித உடலில் முழு வீச்சில் பரவி விடுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட மூன்றாவது நாளில் இருந்தே காய்ச்சலும், தலைவலியும் தோன்றி விடும். பாதிக்கப்பட்டவர்கள் சதா அரைத்தூக்க நிலையில் இருக்க நேரிடும். நோய்த்தொற்று வீரியமானதாக இருந்தால் நோயாளி 28 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் கோமா நிலைக்குச் சென்று விடுவார். சிலருக்கு ஆரம்ப நிலையில் சுவாசக் கோளாறுகளும் பிறகு நேரமாக, ஆக நோயின் வீரியம் கூடி அதிதீவிரமான நரம்பியல் பாதிப்புகளும் ஏற்படும். சிலருக்கு வலிப்பு வரும். கோமா நிலைக்குச் செல்லும் நோயாளிகள் பலர் உயிரிழக்க நேரிடும். சிகிச்சை… நிபா வைரஸ்…