உடல் பருமன் குறைய வேண்டுமா? இது ஒரு சிறந்த வழி!




 

காய் : கொத்தவரங்காய் + எலுமிச்சம் பழத்தோல்  + கோவக்காய்

சத்துக்கள் : இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது.

தீர்வு : காலை எழுந்தவுடன்  மற்றும் மாலையில் குடிக்கவும்.

கொத்தவரங்காய்யுடன் (5), கோவக்காய் (5), ஒரு அரை எலுமிச்சம்பழம் (தோலோடு), உப்பு (கொஞ்சம்), தக்காளி (1), புதினா (சிறிதளவு), வெற்றிலை (2) இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது இஞ்சி (1 துண்டு), மிளகு (2) சேர்த்து அரைத்து ஜூஸாக்கி தினந்தோறும் காலை எழுந்தவுடன் மற்றும் மாலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.

காலை  இரவு வேளை உணவாக

கேரட் துருவல். 50 கிராம் 
புடலங்காய் அரிந்தது. – 50 கிராம் கோவைக்காய் அரிந்தது – 50 கிராம் நறுக்கிய தக்காளி. – 2 
நறுக்கிய வெங்காயம். – 50 கிராம் தேங்காய் துருவல் – 50 கிராம்
சீரகத் தூள். – 5 கிராம்
மிளகுத் தூள். – 5 கிராம் 
எலுமிச்சைச் சாறு தோலோடு  – 50 மி.லி 
புளிக்காத கெட்டித் தயிர் – 100 கிராம்

மேற்கண்ட அனைத்தையும் ஒன்றாக கலந்து, சிறிது உப்பு சேர்த்து அதனுடன் நறுக்கிய கறிவைப்பில்லை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிடவும். இதை காலை மற்றும் இரவு வேளை உணவாகச் சாப்பிட்டு வரவும். பின்பு பசித்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com







நன்றி Hindu

(Visited 10038 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 13 =