பீத மாதமும் பாவை நோன்பும் மார்கழி மாதம்தான், சாந்தீபனியின் ஆச்ரமத்தில் கிருஷ்ணர் பாடம் கேட்டார் என்னும் நம்பிக்கையும் உண்டு. மார்கழி மாதத்தை தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் என்று விவரிப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும், சூரியோதயத்திற்கு முன்னதாக இருக்கும் 96 நிமிடங்கள், பிரம்ம முகூர்த்தமாகும். பொழுது புலர்ந்து நாள் தொடங்குவதற்கு முன்னர், கடவுளை வணங்கி வழிபட வேண்டிய நேரம் அது. நம்முடைய ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள்; தை முதல் ஆனி வரையிலான உத்தராயண ஆறு மாதங்கள் அவர்களுக்குப் பகல்; ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயண ஆறு மாதங்கள் அவர்களுக்கு இரவு. இந்தக் கணக்கில், தேவ பகல் தொடங்கும் தை மாதத்திற்கு முன்னதான மார்கழி, தேவர்களின் பிரம்ம முகூர்த்தமாகும். இந்த வேளையில், தேவர்களும் முனிவர்களும் இறைவனை வழிபடுகிறார்கள். மார்கழி மாதத்தில் இறைவனைத் துதித்துப் பலவாறாக நம்முடைய முன்னோர்கள் வழிபட்டார்கள் என்பது புராணங்கள் வழியாகவும் இலக்கியங்கள் வழியாகவும் புலனாகிறது. ஆயர்பாடிப் பெண்கள், ஆற்று மணலில் பாவை (அம்பிகை போன்ற பொம்மை) பிடித்து வைத்து வழிபட்ட தகவல், ஸ்ரீமத் பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தில் (பத்தாவது தொகுப்பு) காணப்படுகிறது. ஹேமந்தே ப்ரதமே மாஸி நந்த வ்ரஜகுமாரிகா: சேருர்ஹவிஷ்யம் புஞ்சானா: காத்யாயன்யர்ச்சனவ்ரதம்ஆப்லுத்யாம்பஸி காலிந்த்யா ஜலாந்தே சோதிதே அருணேக்ருத்வா ப்ரதிக்ருதிம் தேவீமானர்சுர் – – – காத்யாயனி மஹாமாயே மஹாயோகின்யதீச்வரீ நந்த கோப ஸூதம் தேவி பதிம் மே குரு தே நம: ஹேமந்த பருவத்தின் முதல் மாதத்தில் (மார்கழி), நந்த விரஜையின் கோபிகைகள், விரதமிருந்து, காத்யாயனி வழிபாடு செய்தார்கள். காளிந்தி நதியின் (யமுனை) கரையில் மணல் பாவை பிடித்து அம்பாளாக வழிபட்டார்கள். காத்யாயனி, மகாமாயீ, மகா யோகீச்வரி என்றெல்லாம் அழைத்து, “நந்தகோபர் மகனாக கண்ணன் என் கணவனாக ஆகும்படி அருள்வாயாக’ என்று வேண்டினார்கள். சங்கத் தமிழ் நூலான பரிபாடல், அம்பா ஆடலைக் குறிப்பிடுகிறது. ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து மாயிரும் திங்கள் மறுநிறை ஆதிரை விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்பமார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 23) வெம்பாதாக, வியன் நில வரைப்பென அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர் முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப் பனிப்புலர் பாடி… ஆதிரையோடு நிலவு சேர்கிற நன்னாளில், விரிநூல் அந்தணர்களின் விழா தொடங்கியபோது, கன்னியர் அம்பா ஆடல் ஆடினர். மிருகசீர்ஷத்திற்கு அடுத்த நட்சத்திரம் திருவாதிரை. ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நிலவானது 2 நட்சத்திரத்தோடு இணையும் (27 நட்சத்திரங்கள் – 12 மாதங்கள், ஆக ஒவ்வொரு மாதத்திற்கும் 2 நட்சத்திரங்கள்). மார்கழிப் பெளர்ணமியில் (அது மிருகசீர்ஷம் அல்லது ஆதிரை என்று எதுவானாலும்) அந்தணர்கள் தங்களுடைய அத்யயனத்தைத் தொடங்கினார்கள். அதே நாளில், கன்னிப் பெண்களும் ஆற்றங்கரையில் மணலால் அம்பிகை வடிவம் செய்து நோன்பு நோற்றார்கள். நூற்றாண்டுகள் பலவற்றுக்கு முன்னர் அம்பா ஆடலாக இருந்த நோன்பு முறை, பின்னர், தைந்நீராடல் என்றும் வழங்கப்பட்டிருக்கிறது. எவ்வாறு? சந்திர- சூரிய அசைவுகளைக் கொண்டு நாள்களைக் கணிக்கும்போது, நட்சத்திரக் கணக்கு சில…
டிசம்பர் மாத பலன்களை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். (மேஷம் முதல் கன்னி வரை) மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: ராசியில் குரு (வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் புதன் – தொழில் ஸ்தானத்தில் சனி – அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலைகள் உள்ளன. கிரகமாற்றங்கள்: 02-12-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 16-12-2023 அன்று சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 20-12-2023 அன்று சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-12-2023 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-12-2023 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இந்த மாதம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவம் சார்ந்த செலவுகள் குறையும். அடுத்தவர்களுக்கு உதவும் முன் யோசித்து செயல்படுங்கள். மூன்றாம் மனிதர்களின் தலையீட்டால் பிரச்சனைகள் சுமூகமாக முடியும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் நீங்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிட்டும். மேலதிகாரிகளிடம் உங்களது மீதான நல்ல எண்ணங்கள் மேலோங்கும். பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது முக்கியம். பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. அஸ்வினி: இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும்….
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 13 புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழ முறங்கிற்று புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய் குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: இதுவும் துயிலெடை. "பறவை வடிவம் கொண்டுவந்த பகாசுரனின் வாயைக் கிழித்து அழித்தவனும், கொடிய இராவணனைக் குலத்தொடும் வேரறுத்தவனுமான எம்பெருமானுடைய பெருமைகளைப் பாடிக்கொண்டே நோன்புக் களத்திற்குப் பெண்கள் சென்றுவிட்டனர். கிழக்கே வெள்ளி முளைத்துவிட்டது. வியாழக் கோள் இறங்கிவிட்டது. பறவைகள் பலவகைகளிலும் ஒலி எழுப்புகின்றன. மலர்போன்ற கண்களைக் கொண்ட அழகானவளே. (அதிகாலைப் பொழுதில்) ஆற்றில் குள்ளக் குடைந்து நீராடாமல் இவ்வாறு உறங்கிக் கிடக்கிறாயே’ என்று உள்ளிருப்பவளைப் புறத்திருப்போர் அழைக்கின்றனர். பிறரெல்லாம் நோன்புக் களம் போன பின்னாலும் நீ இன்னும் உறங்கலாமா? என்னும் அங்கலாய்ப்பு. பாசுரச் சிறப்பு: கிருஷ்ணாவதார, இராமாவதாரப் பெருமைகளை இப்பெண்கள் பாடுகின்றனர். விடியலின் அடையாளங்களாக வெள்ளி எழுவதும் வியாழன் விழுவதும் காட்டப்பெறுகின்றன. முதலில் பறவைகளின் ஒலி என்று பொதுவாய்ச் சொல்லி, பின்னர் ஆனைச்சாத்தனைக் காட்டியவர்கள், இப்போது மீண்டும் பறவைகள் என்கின்றனர். எல்லா வகைப் பறவைகளும் ஒலியெழுப்பதால், பொழுது நிறையவே புலர்ந்துவிட்டது எனக் கொள்ளலாம். இனிமை கூறுவதில் குயில் போலவும், ஒருமுகச் சிந்தனையில் கொக்கு போலவும், நன்மையை ஈர்ப்பதில் அன்னம் போலவும், எம்பெருமான் தொண்டில் கருடன் போலவும் இருக்கவேணும். ஸ்வாபதேச முறையில், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைக் குறிக்கும் பாசுரம். அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 13 பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 22) தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – மயிலாடுதுறை சிவகுமார் விளக்கம்: பொய்கையை அடைந்த பெண்கள், அப்பொய்கையையும் அம்மையப்பனாகவே காண்கிறார்கள். கருமையான குவளை மலர், கருமேனி கொண்ட அம்மையாகத் தோற்றம் தர, தாமரையின் செம்மை ஐயனை நினைவூட்டுகிறது. வெண்குருகுப் பறவைகள் நீரில் விளையாடுகின்றன; சிற்றலைகள் பாம்புகள் போல் நெளிகின்றன. இவற்றைக் காண, இறைவன் திருமேனியில் திகழும் குருக்கத்தி மாலையும் பாம்பணிகளும் நினைவு வருகின்றன. உடல் அழுக்கைப் போக்கிக்கொள்ள விரும்புவோர் பொய்கைக்கு வருகின்றனர். மன அழுக்கைப் போக்கிக்கொள்ள விரும்புவோர், இறைவன் காலடியில் பணிகின்றனர். ஆக, இப்பொய்கையைக் கண்டால், மொத்தத்தில் அம்மையும் அப்பனுமாகத் தெரிகிறது. இத்தகைய பொய்கையில் பாய்ந்து, வளைகளும்சிலம்புகளும் ஓசையெழுப்ப, மார்புகள் அசையவும் நீர் மேலெழும்பிப் பொங்கவும் நீராடுகின்றார்கள். பாடல் சிறப்பு: அழகென்பது காண்பவர் கண்ணைப் பொறுத்தது என்பார்கள். முதலில் குளமாகத் தெரிந்த ஒன்று, இப்போது…
ஒரு மனித வாழ்வு என்பது இரண்டு பெரிய பிரிவுகளில் தான் அமைந்துள்ளது. அதாவது, அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டம் இதுதான் மனித வாழ்வை நகர்த்திச் செல்லுகிறது. தொடர்ந்து அதிர்ஷ்டம் கொண்டவரும் இல்லை, தொடர்ந்து துரதிர்ஷ்டம் கொண்டவரும் இல்லை. ஆனால் வெகு சிலர் மட்டுமே தொடர்ந்து துரதிர்ஷ்டத்தையும், அதிர்ஷ்டத்தையுமே அனுபவிப்பதைக் காண முடிகிறது. அது ஏன் அவ்வாறு அவர்களுக்கு மட்டும் நடைபெறுகிறது என்பதனை சில விளக்கங்கள் மூலம் இந்த கட்டுரையில் காணலாம். முதலில் அதிர்ஷ்டம் என்றால் என்னென்ன? அது, உடல் ஆரோக்கியத்தைச் சார்ந்தது, தனி நபர் ஆளுமை தன்மை, அரசியலில் தொடர்ந்து வெற்றி, நிதி ஆதாயம், கல்வியால் நன்மைகள், மனவலிமைகள், பெற்றோரை முதுமையிலும் காக்கும் குழந்தைகள், குழந்தைகளை அருமையாக அன்பாக வளர்க்கும் பெற்றோர்கள், இது போன்று சொல்லிக்கொண்டே போகலாம். மேலே கூறப்பட்டவை அனைத்தும் ஒருவருக்குத் தொடர்ந்து கிடைப்பதுவே அதிர்ஷ்டம் ஆகும். அவரை நாம் கொடுத்துவைத்தவர் எனச் சொல்கிறோம். அவன் என்னப்பா அதிர்ஷ்டகட்டை எனவும் சொல்வதுண்டு. சிலருக்கு சிறிது காலம் அதிர்ஷ்டம் கிடைத்து பின்னர் ஒரு நாள் விலகுவதும் உண்டு. அப்படியே தலைகீழாய் நிலைமை மாறுவதும் உண்டு. துரதிர்ஷ்டம் என்றால் என்னென்ன? துயரங்கள், துயரங்களின் ஆதாரங்கள், அனைத்துவித கவலைகள், துன்பங்கள், பிரச்னைகள், உடல் மற்றும் மன ரீதியான சிதைவுகள், கெட்ட குழந்தைகள் போன்றவையே துரதிர்ஷ்டம் ஆகும். ஒருவரின் ஜாதகம் என்பது 12 கட்டங்களை கொண்டதாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்து இருப்பீர்கள். பொதுவாக அதில் 6 வீடுகள் ஜாதகருக்கு சாதகமானதாக இருக்கும். மீதமுள்ள 6 வீடுகள் ஜாதகருக்கு சாதகமற்றதாகவே இருக்கும். அதிலும் மிகவும் மோசமான வீடுகள் 6, 8, 12ஆம் வீடுகள் தான். இதனை தந்திர (TRIK HOUSES ) வீடுகள் என்பர். அதனை விரிவாகக் காண்போம். ஏன் என்றால், இந்த வீடுகளின் போக்கை அறிவதே மிகச் சிரமமாகும். இதனை நன்கு ஆராய்ந்தால் தான் தெளிவாக தெரிய முடியும். சிலருக்கு, சிலவற்றிற்கு, சில நிலைகளில் இந்த வீடுகள் நல்லன போன்று தோன்றும் / செய்யும் ஆனால் அதே சமயம் சிலருக்கு, சிலவற்றிற்கு, சில நிலைகளில் தீயதை மட்டுமே செய்யும். இதனை ஒவ்வொரு வீடாகக் காணலாம். பொதுவாக ஜோதிடத்தில் ஜனன கால ஜாதகத்தை வைத்து பலனை ஓரளவுக்குத் தான் சொல்லமுடியும். துல்லியமாகப் பலனைக் காண, பல்வேறு பிரிவு விளக்கப்படம் (DIVISIONAL CHARTS) மூலம் தான் காண இயலும். ஒவ்வொரு பிரிவும் ஒருவித பலனைத் துல்லியமாகக் கூறும். அனைத்தையும் கண்டு பலன் சொல்வதென்பது நிச்சயம் வெகு சிரமமான ஒன்று. அதற்கு முதலில் சரியான பிறப்பு குறிப்பு தேவை. அடுத்து இதனைப் பொறுமையாக ஆய்வு செய்ய ஆழ்ந்த அறிவும் அனுபவ ஞானமும் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக அவசரமும் இதனை காண்பதற்குரிய தட்சிணை தருவதில் சிக்கல் ஏற்படும். அதனாலேயே இதனை அதிகமாக விரிவாக யாரும் காண்பதில்லை. மேலெழுந்த வாரியாக ராசி சக்கரம் எனும் D -1 , நவாம்ச சக்கரம் எனும் D – 9 மட்டுமே…
விநாயகப் பெருமானின் வாகனம் மூஷிகம் என்று சொல்லப்பட்டாலும் இவர், பல்வேறு யுகங்களில் வெவ்வேறு வாகனத்தில் அருள்புரிந்திருக்கிறார். கிருதயுகத்தில் இவரது வாகனம் சிங்கம். திரேதா யுகத்தில் மயில். துவாபர யுகத்தில் மூஷிகம். கலியுகத்தில் இவரது வாகனம் குதிரை என்று சொல்லப்பட்டாலும் அந்த வாகனத்துடன் இவரை தரிசிப்பது அரிதாகும். விநாயகருக்கு ரிஷபம், யானை ஆகியவையும் வாகனமாய் இருந்திருக்கின்றன. கப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் பஞ்சமுகங்களுடன் காணப்படும் விநாயகர், சிம்ம வாகனத்தில் காட்சி அளிக்கிறார். திருவொற்றியூர் குருதட்சிணாமூர்த்தி ஆலயத்திலும் பஞ்சமுகங்களுடன் சிம்மத்தில் அருள்புரிகிறார். பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் ஆலய சுதைச் சிற்பத்திலும் அருப்புக்கோட்டை தாதன்குள விநாயகர் ஆலயத்திலும் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் உள்ள ஓவியத்திலும் விநாயகர் மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார். கோயம்புத்தூர் குருபதேசக் கவுண்டர் ஆலயத்திலும் கடலூர் வட்டம் சென்னப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள மலையாண்டவர் விநாயகர் ஆலயத்திலும் குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். திருச்செந்தூர் ஆவுடையார் குளக்கரையில் உள்ள அரசாள்வார் விநாயகருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்விளாகம் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் உள்ள விநாயகருக்கும் யானை வாகனமாக உள்ளது. சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்திலுள்ள விநாயகர் முன்பும் நெல்லை காந்திமதியம்மன் கோயிலில் அருள்புரியும் விநாயகப்பெருமானின் முன்பும் காளை வாகனம் காட்சியளிக்கிறது. – டி.ஆர். பரிமளரங்கன் சாட்சி விநாயகர்ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி: இழந்ததும் இழக்கக்கூடாததும் திருச்சானூரில் பெருமாளும் தாயாரும் திருமணம் செய்து கொள்ள சாட்சியாக இருந்த விநாயகர் “சாட்சி விநாயகர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பெருமாள் தாயாருடன் சேர்ந்து இருக்கும் விநாயகரை இங்கு தான் தரிசிக்க முடியும். குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்க இங்கு வந்து மணி கட்டி வழிபாடு செய்து வருகிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகில் உள்ளது காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலின் பிரசாதம் அங்குள்ள கிணற்று நீர்தான். இந்த கிணற்றில் தான் சுயம்புவாக வரசித்தி விநாயகர் தோன்றினார். அதனால் அதே கிணற்றின் மேல் தான் அவர் காட்சி தருகிறார். விநாயகரைச் சுற்றிலும் எப்போதும் கிணற்றின் நீர் ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்தப் பிள்ளையாரை சாட்சியாக வைத்து ஒரு காலத்தில் வழக்குகளை முடித்துக் கொள்வார்களாம். அதனால் இன்றும் வழக்குகளில் வெற்றி பெற இந்த விநாயகரை வழிபட்டு வருகின்றனர். திருச்சானூரில் பெருமாளும் தாயாரும் திருமணம் செய்து கொள்ள சாட்சியாக இருந்த விநாயகர் “சாட்சி விநாயகர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பெருமாள் தாயாருடன் சேர்ந்து இருக்கும் விநாயகரை இங்கு தான் தரிசிக்க முடியும். குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்க இங்கு வந்து மணி கட்டி வழிபாடு செய்து வருகிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகில் உள்ளது காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலின் பிரசாதம் அங்குள்ள கிணற்று நீர்தான். இந்த கிணற்றில் தான் சுயம்புவாக வரசித்தி விநாயகர் தோன்றினார். அதனால் அதே கிணற்றின் மேல் தான் அவர் காட்சி தருகிறார். விநாயகரைச் சுற்றிலும் எப்போதும் கிணற்றின் நீர் ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்தப் பிள்ளையாரை சாட்சியாக வைத்து ஒரு காலத்தில் வழக்குகளை முடித்துக் கொள்வார்களாம். அதனால் இன்றும்…
உலகத்தைக் காத்து ரட்சிப்பது இறைவன் என்ற மாபெரும் சக்தி. காப்பதும் அந்த இறைவன்தான். அழிப்பதும் அந்த இறைவன்தான். அப்படிப்பட்ட இறைவனில், பரமாத்மாவான ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர். ஸ்ரீ கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து, மக்களைக் காத்து அருளினார். மேலும், மகாபாரதப் போரில் பல தத்துவங்களை உணர்த்தி பகவத் கீதை என்ற அற்புதத்தை அருளினார். கண்ணா, கிருஷ்ணா என்றாலே நம்முடைய மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்திப் பண்டிகையைக் கொண்டாடும் நாளில், செல்வ வளத்தைப் பெருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் குறித்தும் சிலவற்றைத் தெரிந்துகொள்வோம். ஸ்ரீ கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து, மக்களைக் காத்து அருளினார். கம்சன் என்ற அரக்கன், தனது தங்கைக்குப் பிறக்கும் 8 ஆவது குழந்தையின் கையால் கொல்லப்படுவான் என்பதை அசரீரியின் மூலம் அறிந்து தங்கை என்றும் பாராமல் தேவகி – வசுதேவரைச் சிறையில் அடைத்தான். தேவகிக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தைகளையும் கொன்று வந்தான். கம்சனிடமிருந்து தப்பித்து 8 ஆவதாக பிறந்த, இல்லையில்லை அவதரித்த, கிருஷ்ணரைக் காப்பாற்ற, யமுனை நதியைக் கடந்து, கிருஷ்ணரை வசுதேவர், கோகுலத்தில் வாழ்ந்து வந்த யாதவ குலத்தைச் சேர்ந்த நந்தகோபர் – யசோதையிடம் கொண்டு போய் சேர்த்தனர். கோகுலத்தில் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக வளர்ந்த கிருஷ்ணர், பல லீலைகளைப் புரிந்தார். வளர்ந்து இளைஞன் ஆனதும், அரக்கன் கம்சனை அழித்தார். பின்னர் மகாபாரதப் போர் என கிருஷ்ணரின் லீலைகள் தொடர்ந்து கொண்டே சென்றன. கிருஷ்ண ஜெயந்தியை வீட்டில் எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்வோம். ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியானது ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 11.25க்கு தொடங்கி, ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவு 1.59 மணிக்கு நிறைவடைகிறது. ரோகிணி நட்சத்திரமானது ஆகஸ்ட் 30ஆம் தேதி திங்கள்கிழமை காலை 6.39 மணிக்குத் தொடங்கி, மறுநாள் காலை 9.44க்கு நிறைவடைகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நாளான அஷ்டமி திதி தொடங்கும் ஆகஸ்ட் 11 ஆம் தேதிதான் தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி கடைப்பிடிக்கப்படுகிறது. அதே வேளை ஸ்ரீ கிருஷ்ணர் இரவில்தான் பிறந்தார் என்பதால், வட இந்தியர்கள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயரில் இரவில் பூஜை புனஸ்காரங்களை செய்கின்றனர். இதுதான் வட இந்தியர்களின் வழக்கம். அஷ்டமி திதி ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 11.25க்கு தொடங்கி, ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவு 1.59 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, ஆகஸ்ட் 30ஆம் தேதி எமகண்டம், குளிகை, ராகு காலம் உள்ளிட்ட பொருத்தமற்ற நேரங்களைத் தவிர்த்து விட்டு, எப்போது வேண்டுமானாலும் பூஜைகள் செய்யலாம். குறிப்பாக, நல்ல நேரம், கெளரி நல்ல நேரம் மிகவும் உத்தமமான நேரமாகும். மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 28) ஸ்ரீ கிருஷ்ணருக்கு வெண்ணெய் உள்ளிட்ட அனைத்து இனிப்பு பலகாரங்களும் பிடிக்கும். அதனால், அவரவர்களுக்கு முடிந்த அளவுக்கு இனிப்புகளைச் செய்து வழிபட வேண்டும். வெண்ணெய் அவசியம்…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 11 கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி! நீ எற்றுக் குறங்கும் பொருளேலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: துயிலெடைப் பாசுரங்கள் ஒவ்வொன்றிலும், உள்ளே உறங்குகிற பெண்ணுடைய தன்மைகளைக் கூறி எழுப்பிக்கொண்டு வருகிறார்கள் என்பது வெளிப்படை. இவ்வகையில், இந்தப் பாசுரத்திலும், உள்ளே இருப்பவளின் பெருமைகள் கூறப்படுகின்றன. இவளுடைய இல்லத்தில் நிறைய மாடுகள்; இவளுடைய வீட்டின் கோபாலர்கள் (இவளின் தந்தையாகவோ சகோதரர்களாகவோ இருக்கக்கூடும்), பகைவர்களோடு திறம்படப் போரிடக் கூடியவர்கள். இவை மட்டுமின்றி, எவ்விதக் குற்றமும் இல்லாதவர்கள். இப்படிப்பட்ட செல்வம் நிறை குடும்பத்தைச் சேர்ந்தவள், பொற்கொடி போலும் அழகானவள், புற்றிலிருக்கும் பாம்பின் படம் போன்ற இடைப்பகுதியைக் கொண்டவள், மயிலின் சாயலாள். “செல்வமிக்க பெண் பிள்ளாய், எழுந்து வா’ என்றழைக்கிறார்கள். “அண்டை அசலில் இருக்கும் தோழிப் பெண்கள் அனைவரும் வந்துவிட்டோம். உன் இல்லத்தின் முற்றத்தில் வந்து நின்று மேக நிறத்தவனான கண்ணனின் பெருமைகளைப் பாடுகிறோம். இவ்வளவிருந்தும் நீ அசையாமலும் விடை பகராமலும் உறங்குகிறாயே, இது நியாயமா?’ என்று வினவுகிறார்கள். பாசுரச் சிறப்பு: நயமிக்க சொற்கள் சில, இப்பாசுரத்தில் கையாளப்பட்டுள்ளன. “கோவலர்’ என்பது கோபாலர் என்பதன் திரிபு. ஆயர்பாடியின் ஆயர்களே, கோபாலர்கள்; பசுக்களைப் பராமரிப்பவர்கள் (கோ=பசு). கண்ணன் மீது நிரம்பப் பிரியம் வைத்தவர்கள்; எவ்வகையிலும் அந்த அன்பில் குறையாதவர்கள். இப்படிப்பட்டவர்களின் வழியில் வந்தவள், கண்ணனைவழிபடுவதை மறந்துவிட்டு உறங்கலாமா? கோபாலன் என்பதைக் கண்ணனைக் குறிக்கும் சொல்லாகக் கொண்டால், கோவலர் பொற்கொடி என்பது அந்த தெய்வத்தையே ஆதாரமாகக்கொண்டு படருகிற கொடி என்றாகும். ஆதாரமில்லாமல் கொடி துவண்டுவிடும்; அதுபோல், பக்தி குன்றினால், அடியார்கள் வாடிவிடுவர். பெண்டாட்டி = பெண் பிள்ளாய். கண்ணனை முகில்வண்ணன் என்று கூறிவிட்டு, நோன்பு நோற்கும் பெண்ணைப் புனமயில் என்பது சிறப்பான நயம். முகிலைக் கண்டால் மயில் ஆடும்; கண்ணனைக் கண்டால், இப்பெண் மகிழ்ச்சியில் ஆடுவாள். ஸ்வாபதேச முறைப்படி, இப்பாசுரமானது, முதலாழ்வார்களில் ஒருவரானபூதத்தாழ்வாரைக் குறிப்பது. அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 11 மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்வரத்தை அருளும் அம்மன் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா! வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற் செய்யாவெண் ணீறாடி! செல்வா! சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா! ஐயா!நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – மயிலாடுதுறை சிவகுமார் விளக்கம்: பொய்கைக் கரையில் நிற்பவர்கள், இறைவனை மேலும் வழிபடுகின்றனர். “மலர்கள் நிறைந்து, அதனால் வண்டுகள் நிறைந்ததாகக் காணப்படும் குளத்தில் புகுந்து நீராடி உன்னுடைய புகழைப் பாடுகிறோம். வழிவழியாக நாங்கள் உன்னுடைய அடிமைகள். நெருப்பு…
சிவனின் வாயில் காப்பாளர் நந்திதேவரின் சீடர்கள் காந்தன், மகா காந்தன் ஆகிய இருவர். ஒருநாள் காலை இருவரும் குளத்தில் இருந்த வெண் தாமரைப் பூக்களைப் பறித்தனர். கை தவறிய பூ ஒன்று நீரில் விழுந்து மீனாகவும், மற்றொன்று கரையில் விழுந்த கிளியாகவும் மாறின. இதனால் வியப்படைந்த அவர்கள், மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருந்தனர். பூஜைக்கு பூக்கள் வராததைக் கண்டு கோபமடைந்த நந்திதேவர் குளக்கரைக்கு வந்தபோது, இந்த விளையாட்டைக் கண்டவர் கோபத்துடன் சீடர்களை நோக்கினார். அப்போது காந்தன் பூனை போல் விழிக்கவும், மகா காந்தன் சுரட்டுக்கோலை வைத்துகொண்டும் நின்றனர். உடனே நந்தி தேவர், காந்தனைப் பூனையாகவும், மகா காந்தனை வேடுவனாகவும் மாறிட சாபமிட்டார். சீடர்கள் சாப விமோசனம் வேண்டினர். மனம் இறங்கிய நந்திதேவர், “காஞ்சிக்குத் தென்கிழக்குத் திசையில் புண்டரீகப் புஷ்கரணி என்ற தீர்த்தமும், அதனருகில் அகஸ்தீஸ்வரர் என்ற மகா லிங்கமும் உள்ளன. இருவரும் தனித்தனியே அங்கு ஒருவருக்கொருவர் அறியாமல் குளத்தில் மூழ்கி வழிபட்டு வாருங்கள். இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும்போது உங்கள் சாபம் விலகும்’ என்றார். பூனையான காந்தன் முதலில் வழிபாடு செய்து முடிப்பதும், அதன்பின் வேடுவனான மகா காந்தன் பூஜை செய்வதும், தொடர்ந்தது. வேடுவனுக்கு ஒரு ஐயம் இருந்தது. நாம் பூஜை செய்வதற்கு முன்பாகவே வேறு யாரோ பூஜை செய்து விடுகிறாரே, அது யார் என்று அறிய ஆவல். இதனால் சீக்கிரமாகவே பூஜை செய்ய முனைந்த வேடுவன் கோயிலுக்குச் சென்றான். அப்போது அங்கே ஒரு பூனை பூஜை செய்துகொண்டிருந்தது. கோபமுற்ற வேடுவன், பூனை மீது அம்பை எய்தான். பூனை சற்று நகர்ந்துவிட, அம்பானது லிங்கத்தின் மீது பட்டு ரத்தம் பீறிட்டது. பயந்த வேடுவனும் பூனையும் ஒருவரையொருவர் நோக்க, சாப விமோசனம் கிடைத்தது. பூனை காந்தனாகவும், வேடுவன் மகா காந்தனாகவும் பழைய நிலைக்கே உருமாற இருவரும் சிவனை வேண்டி நிற்க, இறைவனும் அருள் வழங்கினார். அன்றுமுதல் இறைவன் திருப்பெயர் “கிராத மார்ஜாலீஸ்வரர்’ என்றும், இவ்வூர் “கிராத மார்ஜாலபுரம்’ என்றும், வழங்கப்பட்டது. “கிராதன்’ என்பதற்கு “வேடுவன்’ என்றும் “மார்ஜாலம்’ என்பதற்கு “பூனை’ என்றும் பொருள். “கங்கை, தன் தோஷம் நீங்க, புண்டரீக தீர்த்தத்தில் நீராடி மகாலிங்கத்தை வணங்கினார்’ என்று புராணம் கூறுகின்றது. அன்று முதல் இவ்வூர் “கங்கை கொண்ட சோழபுரம்’ என்று அழைக்கப்படுகிறது. திருமால், படைப்புத் தொழில் மேம்பட பிரம்மன் உள்ளிட்டோரும் இங்கு நீராடியதாக வரலாறு. சிவன்- பார்வதி திருமணத்தைக் காண எண்ணற்ற தேவர்களும் ரிஷிகளும் கயிலாய மலையில் கூடியதால், பூமியின் சமநிலை பாதிக்கப்பட்டது. இதனால் தென்திசை மேலெழும்ப இறைவன் ஆணைப்படி பூமி சமநிலையை அடையச் செய்ய, பொதிகையை நோக்கி அகத்தியர் பயணித்தபோது வழியில் கொன்றை மரத்தடியில் ஒரு மகாலிங்கம் இருப்பதைக் கண்டார். அவரை வணங்கி, அதன் அருகில் பாண லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தார். அன்று முதல் அந்த இறைவனுக்கு “மகாலிங்கம்’ என்றும், “அகஸ்தீஸ்வரர்’ என்றும் பெயர் நிலைத்தது. இதன்பின் பொதிகை மலை சென்று பூமியைச் சமன்படுத்தினார்.அவதாரம்! குறுந்தொடர் 6 தெற்கு நோக்கிய…
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி பகல்பத்து உற்சவம் தொடங்கியது. முக்கிய வைபவமான சொர்க்கவாசல் திறப்பு வருகிற 25 ஆம் தேதி நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா குறிப்பிடத்தக்கது. பகல்பத்து, ராப்பத்து இயற்பா என 21 நாள்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுந்த ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் 14 ஆம் தேதி தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார். காலை 8.15 மணி முதல் மதியம் 1 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர். மாலை 6.30 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பகல் பத்தின் முதல் நாளான நேற்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாள்களுக்கு நடைபெறும். இதே போல் பகல்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (24-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள்(25 ஆம் தேதி) வைகுந்த ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்கவாசல் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 31 ஆம் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். ஜனவரி 1 ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 23) சொர்க்கவாசல் திறப்பு தினமான 25 ஆம் தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ராப்பத்து ஏழாம் திருநாளான 31 ஆம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான ஜனவரி 1 ஆம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 3 ஆம் தேதி தீர்த்தவாரியும், 4 ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்….
ஒருவரின் வருங்காலஇஷ்ட தெய்வங்களை அறிவது எப்படி?வாழ்க்கைத் துணையை எங்கு, எப்போது காணப்போகிறோம் என்பதை ஜோதிடம் எளிதாக உணர்த்தும். நன்றி Hindu இந்த ராசிக்காரர்களுக்கு தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும்: புரட்டாசி மாத பலன்கள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 2 வையத்து வாழ்வீா்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோா் எம்பாவாய்! திருப்பாவை – பாடியவர் புவனேஸ்வரி விஸ்வநாதன் பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்:உலகத்தில் வாழ்வோரே என்று அனைவரையும் அழைக்கிற ஆண்டாள்,நோன்பில் செய்ய வேண்டியவற்றை வரிசையாகக் கூறுகிறாள். ‘திருப்பாற்கடலில் கண்வளரும் எம்பெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடுவோம்; அதிகாலையில் நீராடுவோம்; நெய்யும் பாலுமான உணவுகளை உண்ணமாட்டோம்; நீராடி வந்தபிறகு, பெண்கள் வழக்கமாகத் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் வகையில் கண்களில் மைதீட்டி, முகம் திருத்தி, கூந்தலில் மலா் சூடுவது போன்றவற்றைச் செய்யமாட்டோம் (எங்களை அலங்கரித்துக் கொள்ளமாட்டோம்); எங்கள் பெரியவா்கள் செய்யகூடாது என்று தடுத்தவற்றைச் செய்யமாட்டோம்; பிறா் பற்றி அவதூறு பேசி, கோள் சொல்லமாட்டோம். எங்களால் முடிந்த அளவுக்கு ஐயம் இடுவோம், பிச்சை இடுவோம்.’ பாசுரச் சிறப்பு:என்னவெல்லாம் செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை விளக்குகிற பாசுரம் இது. ‘டூ’ஸ்அண்ட்டோண்ட்’ஸ்’ என்று மேலாண்மையில் கூறுவதுபோல், செய்வன (கடைப்பிடிகள்),செய்யக்கூடாதன (விலக்கடிகள்) என இரண்டையும் பட்டியலிடும் சிறப்புக்குரியது. ‘ஐயம்’ என்பது உயா்ந்தவா்களுக்கும் தக்கவா்களுக்குமிடுவது; ‘பிச்சை’ என்பது அனைவருக்கும் இடுவது. அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை- பாடல் – 2 திருவண்ணாமவையில் அருளியது பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்அட்சய திருதியையும் ஸ்ரீ அன்னபூரணியும் பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே நேசமும் வைத்தனையோ? நேரிழையாய் நேரிழையீா்! சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடமீதோ? விண்ணோா்கள் ஏத்துதற்குக் கூசு மலா்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனாா்க் கன்பாா்யாம் ஆரேலோா் எம்பாவாய்! பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – கரூர் சுவாமிநாதன் விளக்கம்: நோன்புக் களத்திற்குச் (நோன்பு செய்கிற இடம்) செல்வதற்காகப் புறப்பட்டு வரும் பெண்கள், இன்னும் புறப்படாமல் உள்ளே உறங்குகிற பெண்ணை அழைக்கிறாா்கள். பகலும் இரவும் தோழிப் பெண்களான இவா்கள் அளவளாவிக்கொண்டே இருப்பாா்கள். இவ்வாறு பேசும்போதெல்லாம், ‘என்னுடைய அன்பு முழுவதும் பரமனுக்குத்தான்’ என்று வாய்ச் சாலாக்குப் பேசியவள், இப்போது எழுந்திராமல் உறங்குகிறாள். ‘அணிமணிகள்அணிந்தவளே! பரமனுக்குப் பாசமா? படுக்கைக்குப் பாசமா?’ என்று கிண்டல் செய்கிறாா்கள். உள்ளிருந்து அவள் உடனே கூறுகிறாள்: ‘தோழிகளே! உங்கள் வாயிலிருந்து இகழ்வுச் சொற்கள் வரலாமா? விளையாடிப் பழிக்கும் நேரம் இதுவோ? இதைக் கேட்டவுடன், ‘தேவா்கள் போற்றினாலும் கொடுத்தருள்வதற்கு நாணுகிற திருவடிகளை, எளியவா்களானநமக்குக் கொடுப்பதற்காக எழுந்தருளியிருக்கும் திருக்கயிலாய நாதனும் தில்லைச்சிற்றம்பலத் தேவனுமான இறைவனின் அன்பு எங்கே? கேலிப் பேச்சு பேசும் நாம் எங்கே?’ என்று கூறி நோன்புக்குச் சித்தமாகிறாா்கள். பாடல் சிறப்பு:பாவை பாடல்கள், உரையாடல் முறையில் அமைவது வழக்கம். இறைவனிடம் உள்ளத்தைச் செலுத்தாமல், வேண்டாதவற்றில் செலவிடுதலைத் தவிா்க்கக்கூறும் இப்பாடலில், உள்ளும் புறத்தும் இருப்பவா்கள் மாறி மாறிப் பேசிக்…
தமிழ் மாதங்கள்மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 23)ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உள்ளன. எனினும் இவை அனைத்தைக் நன்றி Hindu பகல் பத்து 10-ம் திருநாள்: மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்
முன்பு கோடி ரிஷிகள் தவம் செய்ததால் “கோடிரிஷிபாக்கம்’ எனப்பட்டது. கார்கோடகன் என்ற நாக அரசன் திருமாலை வழிபட்ட இடம் என்பதால், “கோடகன்பாக்கம்’ எனப்பட்டது. “கோடு’ என்றால் மலை. திரிபுர அசுரர்களை அழிப்பதற்காக சிவன் மேரு மலையை வில்லாக வளைத்தது இத்தலத்தில்தான். இந்த இடம் தற்போது “கோடம்பாக்கம்’ என அழைக்கப்படுகிறது. வியாக்ரபாதர் என்ற முனிவர் மலர்களை தேனீக்கள் தீண்டுவதற்கு முன்னரே தூய்மையான நிலையில் அதைப் பறித்து, சிவ பூஜை செய்ய விருப்பம் கொண்டிருந்தார். அதற்காக விரைந்து செயல்பட வரமும் பெற்றிருந்தார். வியாக்ரம் என்றால் வேங்கை, புலி எனப் பொருள்படும். பாதம் என்றால் கால். புலியின் கால்களைப் பெற்றிருந்ததால் அவர் வியாக்ரபாதர் என்ற பெயரைப் பெற்றார். அவர் தில்லை நடராசப்பெருமானை வழிபட்டு, அருள்பெறுவதற்கு முன்னர் இத்தலத்தில் நெடுநாள் தங்கி தமது பெயரில் லிங்கத் திருமேனியை நிறுவி, வழிபட்டு வந்தார். இந்தத் தலம் “புலியூர்’ என்றும், இறைவன் “வியாக்ர புரீஸ்வரர்’ எனவும் அழைக்கப்படுகிறார். வியாக்ரபுரீஸ்வரரே தமிழில் வேங்கீஸ்வரர். நான்கு புறமும் வாயில்கள் உள்ளன. கிழக்கில் உள்ள பிரதான வாயிலில் சிவபுராணக் கதைகளைச் சித்திரிக்கும் கலையம்சம் கொண்ட ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. அதன் வழியே நுழைந்தால், தங்க முலாம் பூசிய பெரிய கொடிமரம் தகதகக்கிறது. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பலிபீடம், சிறிய மண்டபத்துடன்கூடிய நந்தீஸ்வரர் அடங்கிய முன் மண்டபம் கலையை உணர்த்தும் தூண்களுடன் காட்சி அளிக்கிறது. உள்ளே சென்றால் மேற்கு நோக்கி வியாக்ரபாதரும், அவருடைய நண்பர் பதஞ்சலியும்; வடக்கு நோக்கி நால்வரும் அருள் வழங்குகிறார்கள். கருவறை நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்களும், உச்சியில் கஜலட்சுமியும் காட்சி அளிக்கிறார்கள். கருவறையின் உள்ளே ஐந்து தலை நாகத்துடன் வேங்கீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். யானையின் பின்புற அமைப்பில், அதாவது கஜபிருஷ்ட வடிவில் அமைந்த கோயிலில் மூலவரைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தால், கிழக்கு நோக்கி தனிச் சந்நிதியில் அருள்கிறார் வரசித்தி விநாயகர். கோஷ்ட தெய்வங்களாக கணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, வள்ளி} தெய்வானை சமேத சுப்பிரமணியர், விசாலாட்சி சமேத காசி விசுவநாதர், மகாலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. நடராஜர் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜரையும் தரிசிக்கலாம். மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 12) விசாலமான திருக்கல்யாண மண்டபத்தின் வழியாக வந்தால், கொடிமரம் அருகிலேயே தனிக்கோயில் போன்ற அமைப்பில் அழகிய முன்மண்டபத்துடன்கூடிய தனிச் சந்நிதியில் அபய வரத ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி எழில் சிந்துகிறாள் சாந்தநாயகி அம்மன். நுழைவாயிலின் உச்சியில் அம்மனின் பல்வேறு சுதை வடிவங்கள் பார்க்கப் பார்க்கப் பரவசம் தருகின்றன. கருணையே வடிவாகக் காட்சி அளிக்கும் சாந்தநாயகி அம்மனை வணங்கி குங்குமப் பிரசாதம் பெறலாம். ஆடிப் பூரத்தன்று அன்னையின் சந்நிதியில் வளையல் அலங்காரப் பந்தல் அசத்தும். தனி சந்நிதியில் வடக்கு நோக்கி பைரவரும்; அருகே நவக்கிரக சந்நிதியும், மேற்கு நோக்கி தனியாக சனி பகவானும், முனீஸ்வரரும், ராஜகோபுரத்தின் அருகே உள்புறங்களில் சந்திரன், சூரியன், வீரபத்திரரும் அருள்பாலிக்கிறார்கள். தனியாக தீபமேற்றும் இடம், வாகன…
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் புராண கதைகளை எப்பொழுது படித்தாலும் மனதுக்கு இனிமையாக இருக்கிறது. மதுரா நகரில் “பாங்கே பிஹாரி” என்று அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ணன் திருவிளையாடல்கள் பல செவி வழி செய்திகளாக அவ்வப்போது உலா வந்து கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றை நாம் இப்போது அனுபவிப்போம். வெகு நாட்களுக்கு முன்பு பிருந்தாவன ஷேத்திரத்தில் “ஸ்ரீ பாங்கே பிஹாரிஜி மந்திர்” என்று அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் திருக்கோயில் இருக்கிறது. அழகே உருவான ஸ்ரீ கிருஷ்ணர் அங்குத் திருக்கோயில் கொண்டு ஸேவை சாதிக்கிறார். கையில் புல்லாங்குழல், தலையில் மயில் பீலி, இடுப்பில் பட்டு வஸ்திரம், கூடவே வெண்மை நிறமான பசுவும், கன்றும் கொண்டுள்ள கிருஷ்ணனைப் பார்க்க எப்போதும் பக்தர்கள் வந்து கொண்டு இருப்பார்கள். வரும் போது கையில் சீடை, முறுக்கு, லட்டு, ஜாங்கிரி முதலான தின்பண்டங்களை கொண்டு வந்து சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அந்தக் கோயிலில் ஒரு குருக்கள் பூஜை செய்து கொண்டு வந்திருந்தார். அவர் மிகுந்த பக்தி பாவத்துடனும், மனம் உருகியும் கைங்கர்யம் செய்து கொண்டு வந்திருந்தார். அபிஷேக, ஆராதனைகளைத் தவிர திருப்பள்ளி அறையை மிகுந்த கவனத்துடன் நேர்த்தியாக அழகுபடுத்தி, படுக்கையை விரித்து, அதன் மீது மலர்களைத் தூவி, வாசனைத் திரவியங்களை தெளித்து, புதியதாக தோரணங்கள் கட்டி, படுக்கையின் அருகில் பழங்கள், ஜலம் இவற்றை வைப்பார். சயன ஆரத்தி சமயத்தில் ஒரு சிறியதாக கிருஷ்ண விக்ரஹத்தினை படுக்கையில் வைப்பது வழக்கம். தவிர, இரவு நேரத்தில் கிருஷ்ணன் விழித்து எழுந்தால், கிருஷ்ணனுக்குப் பசிக்குமே என்று அவருக்கு ஆதங்கம். அதனால், மாலை வேளைக் கோயிலுக்கு வரும் போது ஒரு தின்பண்ட கடையில் நான்கு லட்டுக்களை வாங்கி வருவார். அந்த லட்டுக்களைப் படுக்கையின் அருகில் ஒரு தட்டில் வைத்து மூடி வைக்கும் வழக்கத்தினை கொண்டு இருந்தார். அவ்வளவு பக்தி பாவம் அவருக்கு. ஆனால் என்ன ஆச்சரியம்.. காலையில் படுக்கையிலும், தரையிலும் லட்டுக்களின் துகள்கள் சிதறிக் கிடக்கும். இது தினமும் நடக்கும். தன்னுடைய லட்டுக்களைப் பகவான் ஸ்வீகரித்துக் கொண்டுவிட்டான் என்று எண்ணம் அவருக்கு வேரூன்றி இருந்தது. இது ஒரு சிலருக்கு மாத்திரம்தான் தெரியும். ஒரு நாள் அவருக்கு உடல் நிலை சரியில்லாததால், வரும் போது அவர் 4 லட்டுக்களைக் கோயிலுக்கு வரும் போது வாங்கி வரவில்லை. மறந்துவிட்டார். அன்று இரவு சயன அறையைத் தயார் செய்து விட்டு, கிருஷ்ண விக்ரஹத்தினை வைத்து விட்டு ஆரத்தி எடுத்தபிறகு இல்லம் வந்து சேர்ந்தார் அவர். அன்று இரவு 2 மணி அளவில், ஊர் அடங்கிய பிறகு, எந்தத் தின்பண்ட கடையில் அவர் லட்டு வாங்குவாரோ அந்தக் கடையின் முதலாளி கடையை சார்த்த முற்பட்டார். அப்பொழுது ஒரு சிறுவன் கடை முதலாளியிடம் ஓடி வந்து தனக்கு பசிக்கிறது என்றும் லட்டு வேண்டும் என்று கேட்க, கடை முதலாளி லட்டு தீர்ந்து விட்டது, நாளை காலை புதியதாக வரும் அப்போது வா அல்லது வேறு ஏதாவது வாங்கிக்கொள்…
ஜோதிடத்தில் ஆத்ம காரகன் என்று ஒன்று உண்டு. ஆத்ம காரகன் ஜாதகத்தில் உச்சபட்ச பாகை பெற்ற கிரகம். இந்திய ஜோதிடத்தின்படி, ஆத்ம காரகா ஒரு நபரின் ஆன்மாவையும், அவரது உண்மையான ஆளுமையையும், இந்த பிறவியின் அவதாரத்தை / பிறப்பை ஏற்றுக்கொள்ளச் செய்த அந்த இலக்குகள் மற்றும் ஆசைகளையும் காட்டுகிறது. ஆத்ம காரக கிரகங்கள் மற்றும் அவற்றின் பொருள் ஜாதகத்தில் ஆத்ம காரகத்தையும் அதன் நிலையையும் பகுப்பாய்வு செய்வதன் மூலம், ஒரு நபரின் கர்ம பணிகளை ஒருவர் தீர்மானிக்க முடியும். ஜாதகர் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் மற்றும் இப்பிறவியில் செய்யவேண்டிய காரியங்கள் யாவை என்று அறிவதோடு, பரமாத்வாவோடு இணைய வழிகளையும் அதன் மூலம் அறிய முடியும். ஆத்ம காரகமாக சூரியன் ஒரு நபர் பெருமை மற்றும் அகங்காரத்தைக் கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அத்தகையவர்கள் அடக்கமாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். அவர்கள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆத்ம காரகமாக சந்திரன் கருணை, அனுதாபம், இரக்கம் ஆகியவை வளர்த்துக்கொள்ள வேண்டிய முக்கிய குணங்கள் என்பதை சந்திரன் ஆத்ம காரகம் காட்டுகிறது. அத்தகையவர்கள் ஒருவரை கவனித்துக்கொள்வது, தாய்மை அல்லது தந்தையின் அனுபவத்தை அனுபவிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆத்ம காரகமாக செவ்வாய் ஒரு நபர் தனது ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும், வன்முறை மற்றும் அவமதிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை செவ்வாய் குறிக்கிறது. ஆத்ம காரக செவ்வாய் உள்ளவர்கள் அஹிம்சை (உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காதது) கொள்கையை புரிந்து கொண்டு கடைப்பிடிப்பது மிகவும் இன்றியமையாதது. ஆத்ம காரகமாக புதன் ஒரு நபர் துறவி பேச்சைக் கடைப்பிடிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது. பொய்கள், திட்டுதல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகம் ஆகியவை குறிப்பாகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். கிசுகிசுக்காமல் இருப்பதும், அதிகம் பேசாமல் இருப்பதும் உத்தமம். முழு மௌனத்தைக் கடைப்பிடிப்பது இன்னும் சிறந்தது. உதாரணமாக, வாரத்தில் ஒரு நாள் இதற்காக ஒதுக்குங்கள்.சூரியன் – சந்திரன் சேர்க்கை நம்மை என்ன செய்துவிடும்? ஜோதிட சூட்சுமங்கள் ஆத்ம காரகமாக குரு வியாழன் ஆத்ம காரகம் இந்த வாழ்க்கையில் ஒரு நபர் பெரியவர்கள், தந்தை, ஆசிரியர், தலைவர் மற்றும் கணவர் ஆகியோரை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அதிகாரிகளுக்கு மரியாதை, அதே போல் குழந்தைகளை (நம் சொந்தம் அல்லது மற்றவர்கள்) கவனித்துக்கொள்வது அத்தகைய நபர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. ஆத்ம காரகமாக சுக்கிரன் சுக்கிரன் – முதலில், நீங்கள் தூய்மையைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இது உடலின் தூய்மைக்கும் மனசாட்சியின் தூய்மைக்கும் பொருந்தும். எண்ணங்களிலும் செயல்களிலும் கற்பு அவசியம். அப்படிப்பட்டவர்கள், தகாத பாலுறவைத் தவிர்ப்பது, விசுவாசமாக இருப்பது, ஆசைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். ஆத்ம காரகமாக சனி துரதிர்ஷ்டத்தின் சுமையைத் தாங்க ஒரு நபர் தனது துக்கங்களையும் சிரமங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை சனி குறிக்கிறது. மற்றவர்களுக்கு துன்பம் தராமல் இருப்பதும் முக்கியம். இத்தகைய மக்கள் உண்ணாவிரதம் மற்றும் துறவறத்தில் மிகவும் நல்லவர்கள், இதன் காரணமாக ஒருவர் ஆன்மீக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைய முடியும். ஆத்ம காரகமாக ராகு ராகு மாயையிலிருந்து…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 26 மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன் னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலி னிலையாய் அருளேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: "பரிசு, பரிசு என்கிறீர்களே, அப்படி என்ன வேண்டும்?’ என்று கண்ணன் வினவ, தங்களுக்கு என்னென்ன வேண்டும் என்று பட்டியலிடுகிற பாசுரம். "வசீகரித்து மயக்குபவனே, நீலமணியின் நிறத்தவனே, ஆலிலை மீது பள்ளி கொள்பவனே, முன்னோர்களும் மூத்தோர்களும் செய்து காட்டிய வழியில் மார்கழி நீராட்ட நோன்பியற்றிய நாங்கள் வேண்டுவன என்னென்ன என்று கூறுகிறோம், கேள். பால் போன்ற வெண்மைமிக்க உன்னுடைய பாஞ்சஜன்யத் திருச்சங்கு போன்று உலகையெல்லாம் நடுங்கச் செய்யும் சங்குகள், நல்ல இசை கொண்ட பெரிய பறைகள் ஆகியன வேண்டும். திருப்பல்லாண்டு இசைப்பவர்கள் வேண்டும். அழகான மங்கல விளக்குகள், கொடிகள், விதானங்கள் ஆகியனவும் வேண்டும். இவற்றை எங்களுக்கு அருள வேண்டும்’ என்று கேட்கிறார்கள். பாசுரச் சிறப்பு: மால் – திருமால். "மால்’ என்னும் சொல்லுக்குக் கருமை, பெருமை, மயக்கம் என்னும் பொருள்கள் உண்டு. கருநிறத்தவன், பெரியவன், மயக்குபவன் என்னும் முப்பொருளும் கண்ணனுக்குப் பொருந்தும். சீரிய சிம்மாசனத்தில் கண்ணனை வீற்றிருக்கக் கேட்டவர்கள் இப்போது ஊர்வலம் புறப்பட வேண்டுகிறார்கள் எனக் கொண்டால், புறப்பாட்டுக்கு முன்னதாகச் சங்கநாதம், புறப்பாட்டின்போது பறையொலி, ஊர்வலத்தில் முன்செல்லும் கொடி, பெருமான் அருகில் பல்லாண்டு இசைப்பவர்கள், அருகில் விளக்கு, பெருமானுக்கு மேல் பிடிக்கும் விதானம் ஆகியவற்றை வேண்டுகிறார்கள் எனலாம். நோன்புக்குத் துணை செய்வதற்கான பொருள்களாகப் பலவற்றைக் கேட்கிறார்கள் என்றும் இப்பாசுரத்திற்குப் பொருள் காணலாம். இவ்வகையிலும் நோன்புக் களத்தில் சங்கநாதம், பறை இசை, பல்லாண்டு பாடுவோர், கொடி, விளக்கு, விதானம் என விளக்கலாம். தவிரவும், மூன்றாவதான உள்பொருள் உண்டு. "உனக்கே நாங்கள் தொண்டு (கைங்கர்யம்) செய்ய வேண்டும்; அதற்கான உபகரணங்களைத் தர வேண்டும்’ என்றே பிரார்த்திக்கிறார்கள். உபகரணங்களாவன: 1.சங்கு என்பது பிரணவம்; (உன்னைத் தவிர) வேறு யாருக்கும் அடிமையில்லை (அனன்யார்ஹசேஷத்வம்) என்பதைக் காட்டும்; 2. பறை என்பது வணக்கம்;அனைத்திற்கும் உன்னைச் சார்ந்த தன்மை (பாரதந்த்ரியம்) என்பதைக் காட்டும்; 3. பல்லாண்டிசைப்பார்} நல்ல நட்பும் உறவும் (ஸத்சஹவாசம்) என்பதைக் காட்டும்; 4. விளக்கு என்பது ஞானம்; அடியார்களுக்கு அடிமை என்னும் அறிவைக் (பாகவதசேஷத்வ ஞானம்) காட்டும்; 5. கொடி என்பது எம்பெருமானுக்குத் தொண்டு (பகவத் கைங்கர்யம்) செய்யும் விருப்பம்; 6. விதானம் என்பது தன்னலமின்மையைக் (போக்த்ருத்வ நிவ்ருத்தி) காட்டும். ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 6ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: கடகம் பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார் பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின் வணங்குகின் றார் அணங்கின் மணவாளா! செப்புறு கமலங்கண் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே இப்பிறப்…
ஸ்ரீநம்பெருமாள் கிருஷ்ணர் செளரி கொண்டை, வைர அபயஹஸ்தம், மார்பில் மஹாலட்சுமி பதக்கம், முத்துச்சரம், பவள மாலை, அவுரிசரம் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 4 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீநம்பெருமாள் கிருஷ்ணர் செளரி கொண்டையில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா். பகல்பத்து விழாவில் நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதிப்பாா். வரத்தை அருளும் அம்மன் பகல்பத்து 4 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் செளரி கொண்டை , வைர அபயஹஸ்தம், மார்பில் மஹாலட்சுமி பதக்கம் , முத்துச்சரம், பவள மாலை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா். காலை 8 மணி முதல் பக்தா்கள் வரிசையில் நின்று தரிசித்து வருகின்றன. இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை. பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்து வருகின்றனர். நன்றி Hindu மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 18)
தமிழ் மாதங்களில் “ஆடி’க்கும், “மார்கழி’க்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்தனர். இறைவனின் திருவிழா வைபவங்களுக்கென்றே இரண்டு மாதங்களும் என்பதால், இந்த மாதங்களில் திருமண வைபவத்தைத் தமிழ் மக்கள் நடத்துவதில்லை. அதிலும் ஆடி மாதத்தில் அம்பிகைக்கும், அவளுடைய குமரன் முருகனுக்கும் கோயில்களில் கோலாகலமாகத் திருவிழா நடக்கும். அந்த வகையில், ஆடிக்கிருத்திகை அழகென்ற சொல்லுக்கு முருகா என்று போற்றப்பட்ட ஆறுமுகப் பெருமானுக்கு அணி சேர்க்கும் முக்கியத் திருவிழா. சூரபத்மாதியர் செய்த கொடுமையால் தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். அவர்களின் இன்னல்களைக் களையத் திருவுளம் கொண்டார் ஈசன். அவருடைய நெற்றிக் கண்ணிலிருந்து வெளியான தீப்பொறியிலிருந்து ஆறு குழந்தைகளாக அவதரித்தார் ஆறுமுகப் பெருமான். அந்தக் குழந்தைகளுக்குக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்ததால் முருகனுக்குக் கார்த்திகேயன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. அதன்பின் ஆறுமுகக் கடவுள் சூரனை வதம் செய்து தேவர்களைக் காத்த வரலாற்றை புராணங்கள் எடுத்தியம்புகின்றன. “கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோருக்குத் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இனிமையான வாழ்வு அமையும்’ என்று சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அருள்பாலித்தார். எனவே ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு மிகவும் உகந்த நாளாயிற்று. மேலும் தமிழ் மாதங்களில் “கிருத்திகை’ என்ற பெயரில் ஒரு மாதமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முருகப் பெருமான் அக்னியிலிருந்து தோன்றியவன் அல்லவா? அதை உணர்த்தும் வகையில் இம்மாதம் முழுவதும் தீப ஒளியால் இறைவனை வழிபாடு செய்தால் வாழ்வில் ஒளி பிறக்கும். வேத காலத்தில் கிருத்திகை நட்சத்திரமே முதலாவதாக இருந்தது. இது அம்பா, துலா, நிதத்னி, அப்ரயந்தீ, மேகயந்தீ, வர்ஷயந்தீ, சுபணிகா ஆகிய ஏழு நட்சத்திரங்களின் கூட்டமாகும். வேத நெறியில் ஒழுகும் அந்தணர்கள் கார்ஹபத்யம், ஆஹவனீயம், தட்சிணாக்னி ஆகிய மூன்று அக்னி கொண்டு யாக யக்ஞாதிகளை, வேத வேள்விகளைச் செய்வர். “மூன்று வகை குறித்த முத்தீச் செல்வத்து இரு பிறப்பாளர்” என்று இதனை நக்கீரர், திருமுருகாற்றுப்படையில் போற்றுவார். இந்த யாகங்கள் ஆதானம் என்ற கர்மாவினால் செய்யப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரம் அக்னியின் நட்சத்திரம் என்றும் அந்த நட்சத்திரத்தில் அக்னியை ஆதானம் செய்ய வேண்டும் என்றும் வேதம் கூறுகிறது. ஏனெனில் நட்சத்திரங்களின் முகம் கார்த்திகை. மேலும் மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களின் கூட்டமாகும். ஆனால் கிருத்திகை நட்சத்திரம் மட்டும் ஏழு நட்சத்திரங்களின் கூட்டமாகும். எனவே, அதில் ஆதானம் செய்பவரும் அவரது வம்சத்தாரும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள் என்று வேதம் கூறுகிறது. எனவே அவ்வளவு சிறப்புடையது கார்த்திகை நட்சத்திரம்.மாா்கழி வழிபாடு-3: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 3) “ஸ்ரீசுப்ரமண்ய கடவுள் க்ஷேத்திரக் கோவை பிள்ளைத் தமிழ்’ என்னும் பிரபந்தத்தில் காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் “கார்த்திகை மலை” என்னும் தலத்தை ஒரு பாடலில் போற்றுகிறார். இது முருகன் தவமிருந்து சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபட்ட மலையாகும். மஹாராஷ்டிர மாநிலத்தில் புனே அருகில் உள்ள பார்வதி மலையில் கார்த்திகேயன் கோயில் உள்ளது. இதனை கார்த்திகை மலை என்று…
திருவெம்பாவையின் நான்காவது பாடலில், எல்லோரும் வந்துவிட்டார்களா என்று வினவும் தன்மையை, இங்கு இப்பாசுரத்தில் காணலாம். பாவை பாடல்கள் உரையாடல்களாக அமையும் என்னும் இலக்கணமும் இலங்கக் காணலாம். குவலயாபீடம் என்னும் யானையை மதம் கொள்ளச் செய்து கண்ணனுக்கு ஆபத்து விளைவிக்க நினைத்தான் கம்சன் என்னும் நிகழ்ச்சி சுட்டப்படுகிறது. “திருப்பாவையாகிறது இப்பாட்டிறே’ என்று திருப்பாவையின் மையமாகச் சிலாகிக்கப்படுகிற பாசுரம். புறத்தே நிற்பவர்கள் குறை சொன்னவுடன் முதலில் மறுத்தவள், பின்னர் பணிந்து ஏற்றுக்கொள்கிறாள். தன்னிடம் இல்லாத குறையைப் பிறர் உரைத்தாலும் தன்னுடையதாகவே ஏற்றுக்கொள்ளுதல் அடியார் இயல்பு. ஸ்வாப தேசத்தில், ஆழ்வார்களிலேயே கடைக்குட்டியான திருமங்கையாழ்வாரை இப்பாசுரம் குறிக்கிறது.திருமணத்தை மீறிய உறவை ஜாதகத்தில் அறிய முடியுமா? என்ன சொல்கிறார் ஜோதிடர்? நன்றி Hindu பகல்பத்து 4 ஆம் நாள்: செளரி கொண்டையில் நம்பெருமாள்!
திருப்பாவையில் முப்பது பாசுரங்கள் இருப்பது போலன்றி, திருவெம்பாவையில் இருபது பாடல்களே உள்ளன. மீதமுள்ள நாள்களுக்குத் திருப்பள்ளியெழுச்சியின் பத்துப் பாடல்களை ஓதுவது வழக்கம். இது மட்டுமல்லாது, மார்கழிப் பெüர்ணமி, அதாவது திருவாதிரைத் திருநாளுக்கு அடுத்த நாளிலே இருந்து, சிவன் கோயில்களில் திருப்பள்ளியெழுச்சியே ஓதப்பெறும். சந்திர நகர்வுகளின் அடிப்படையில், பூர்ணிமைக்கு அடுத்த நாள், புதிய மாதம் பிறந்து விடுவதாகக் கணக்கு. ஆக, இரவு (பிரம்ம முகூர்த்தக் கருக்கல்) முடிந்து, பகல் (தை விடியல்) தொடங்கிவிடுகிறது. எனவே, திருப்பள்ளியெழுச்சி. இறைவன் உறங்குவதில்லை. அது அறிதுயில். ஆகவே, பள்ளியெழுச்சி என்பதை இருவிதமாகக் காணலாம். ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர் – பகுதி 4 – புலவர்நத்தம் சிவன் கோவில் நன்றி Hindu இன்று பகுதிநேர சந்திர கிரகணம் – 2021