மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 21)

திருப்பாவையில் முப்பது பாசுரங்கள் இருப்பது போலன்றி, திருவெம்பாவையில் இருபது பாடல்களே உள்ளன. மீதமுள்ள நாள்களுக்குத் திருப்பள்ளியெழுச்சியின் பத்துப் பாடல்களை ஓதுவது வழக்கம். இது மட்டுமல்லாது, மார்கழிப் பெüர்ணமி, அதாவது திருவாதிரைத் திருநாளுக்கு அடுத்த நாளிலே இருந்து, சிவன் கோயில்களில் திருப்பள்ளியெழுச்சியே ஓதப்பெறும். சந்திர நகர்வுகளின் அடிப்படையில், பூர்ணிமைக்கு  அடுத்த நாள், புதிய மாதம் பிறந்து விடுவதாகக் கணக்கு. ஆக, இரவு (பிரம்ம முகூர்த்தக் கருக்கல்) முடிந்து, பகல் (தை விடியல்) தொடங்கிவிடுகிறது. எனவே, திருப்பள்ளியெழுச்சி. இறைவன் உறங்குவதில்லை. அது அறிதுயில். ஆகவே, பள்ளியெழுச்சி என்பதை இருவிதமாகக் காணலாம். அக்டோபர் மாத பலன்கள் (துலாம் – மீனம்) நன்றி Hindu கரணம் தப்பினால் மரணம் என்பார்கள்: கரண சூட்சுமம் தெரியுமா?

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 11)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 11 கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி! நீ எற்றுக்  குறங்கும் பொருளேலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்:   துயிலெடைப் பாசுரங்கள் ஒவ்வொன்றிலும், உள்ளே உறங்குகிற பெண்ணுடைய தன்மைகளைக் கூறி எழுப்பிக்கொண்டு வருகிறார்கள் என்பது வெளிப்படை. இவ்வகையில், இந்தப் பாசுரத்திலும், உள்ளே இருப்பவளின் பெருமைகள் கூறப்படுகின்றன. இவளுடைய இல்லத்தில் நிறைய மாடுகள்; இவளுடைய வீட்டின் கோபாலர்கள் (இவளின் தந்தையாகவோ சகோதரர்களாகவோ இருக்கக்கூடும்), பகைவர்களோடு திறம்படப் போரிடக் கூடியவர்கள். இவை மட்டுமின்றி, எவ்விதக் குற்றமும் இல்லாதவர்கள். இப்படிப்பட்ட செல்வம் நிறை குடும்பத்தைச் சேர்ந்தவள், பொற்கொடி போலும் அழகானவள், புற்றிலிருக்கும் பாம்பின் படம் போன்ற இடைப்பகுதியைக் கொண்டவள், மயிலின் சாயலாள். "செல்வமிக்க பெண் பிள்ளாய், எழுந்து வா’ என்றழைக்கிறார்கள். "அண்டை  அசலில் இருக்கும் தோழிப் பெண்கள் அனைவரும் வந்துவிட்டோம். உன் இல்லத்தின் முற்றத்தில் வந்து நின்று மேக நிறத்தவனான கண்ணனின் பெருமைகளைப் பாடுகிறோம். இவ்வளவிருந்தும் நீ அசையாமலும் விடை பகராமலும் உறங்குகிறாயே, இது நியாயமா?’ என்று வினவுகிறார்கள்.  பாசுரச் சிறப்பு: நயமிக்க சொற்கள் சில, இப்பாசுரத்தில் கையாளப்பட்டுள்ளன. "கோவலர்’ என்பது கோபாலர் என்பதன் திரிபு. ஆயர்பாடியின் ஆயர்களே, கோபாலர்கள்; பசுக்களைப் பராமரிப்பவர்கள் (கோ=பசு). கண்ணன் மீது நிரம்பப் பிரியம் வைத்தவர்கள்; எவ்வகையிலும் அந்த அன்பில் குறையாதவர்கள். இப்படிப்பட்டவர்களின் வழியில் வந்தவள், கண்ணனைவழிபடுவதை மறந்துவிட்டு உறங்கலாமா? கோபாலன் என்பதைக் கண்ணனைக் குறிக்கும் சொல்லாகக் கொண்டால், கோவலர் பொற்கொடி என்பது அந்த தெய்வத்தையே ஆதாரமாகக்கொண்டு படருகிற கொடி என்றாகும். ஆதாரமில்லாமல் கொடி துவண்டுவிடும்; அதுபோல், பக்தி குன்றினால், அடியார்கள் வாடிவிடுவர். பெண்டாட்டி = பெண் பிள்ளாய். கண்ணனை முகில்வண்ணன் என்று கூறிவிட்டு, நோன்பு நோற்கும் பெண்ணைப் புனமயில் என்பது சிறப்பான நயம். முகிலைக் கண்டால் மயில் ஆடும்; கண்ணனைக் கண்டால், இப்பெண் மகிழ்ச்சியில் ஆடுவாள். ஸ்வாபதேச முறைப்படி, இப்பாசுரமானது, முதலாழ்வார்களில் ஒருவரானபூதத்தாழ்வாரைக் குறிப்பது. அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 11 மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்களிமண்ணை அழகிய பானையாக்கும் வித்தைக்காரர்.. கும்ப ராசியினர்! கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா! வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற் செய்யாவெண் ணீறாடி! செல்வா! சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா! ஐயா!நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – மயிலாடுதுறை சிவகுமார் விளக்கம்:   பொய்கைக் கரையில் நிற்பவர்கள், இறைவனை மேலும் வழிபடுகின்றனர். "மலர்கள் நிறைந்து, அதனால் வண்டுகள் நிறைந்ததாகக் காணப்படும் குளத்தில் புகுந்து நீராடி உன்னுடைய புகழைப் பாடுகிறோம். வழிவழியாக நாங்கள்…

Continue Reading

இந்த ராசி பெண்களுக்கு மனதிற்கினிய செய்திகள் தேடி வரும்: வார ராசிபலன்

பிப்ரவரி 18 முதல் 24ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள். மேஷம்(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) புதிய வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் நேரமிது.  எதிரிகளின் மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். பூர்வீகச் சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கங்கள் அகலும்.   உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாமல் அவர்களின் அறிவுரையைக் கேட்டு நடக்கவும். வியாபாரிகள் புதிய முதலீட்டுக்கான முயற்சிகளை மறு பரிசீலனை செய்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சற்று சிரமத்துக்கு உரியதாக இருக்கும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் விளைச்சல் அதிகரிக்கும். சந்தையில் தானிய விற்பனையில் லாபம் சற்று சுமாராகவே இருக்கும்.  அரசியல்வாதிகள் நெருங்கிய நண்பர்களின் மூலம் சில இடையூறுகளைச் சந்திப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதால் மனதில் திருப்தி ஏற்படும். சக கலைஞர்களின் விருப்பத்தை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பப் பிரச்னைகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். வருமானம் பெருகும். மாணவமணிகள் சக மாணவர்களுடன் ஜாக்கிரதையாகப் பழகவும். பெற்றோர் சொல் கேட்டு நடக்கவும். பரிகாரம்: பரிக்கல் ஸ்ரீநரசிம்மரை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 18, 19. சந்திராஷ்டமம்: 23, 24. *** ரிஷபம்(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும் நேரமிது. உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். உழைப்பிற்குத் தகுந்த முழுமையான பலன் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யமாக சமாளிக்கப் பழகிக் கொள்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் சாத்தியமாகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். அவசியமான செலவுகளுக்கு கடன் வாங்க நேரிடும். விவசாயிகளுக்கு திருப்திகரமான மகசூல் லாபம் கிடைக்கும். சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விற்பனை செய்வீர்கள். கால்நடைகளால் நன்மை உண்டாகும்.  அரசியல்வாதிகள் செய்யும் மக்கள் நலத்திட்டங்களுக்கு மாற்றுக் கட்சியினரும் ஒத்துழைப்பு தருவார்கள். அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெயரும் புகழும் அதிகரிப்பதற்கான சாதனைகளைச் செய்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்தினருடன் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கணவருடன் ஒற்றுமை ஓங்கும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 18, 20. சந்திராஷ்டமம்: இல்லை.***மிதுனம்(மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) மந்தமாக நடந்த காரியங்கள் சுறுசுறுப்பாக நிறைவேறும் நேரமிது. பொருளாதார நிலையில் சீரான வளர்ச்சியைக் காண்பீர்கள். உறவினர்களிடம் இருந்து வந்த மனக்குழப்பங்கள் அகல சற்று தாமதமாகும்.  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். ரகசியங்களை எவரிடமும் வெளியிடாதீர்கள். வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளைப் பல இடங்களுக்கு அனுப்பி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். எதிர்பார்த்த வகையில் லாபம் காண்பீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி விளைச்சலைப் பெருக்கப் பாடுபடுவீர்கள். கால்நடைகளின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.  அரசியல்வாதிகள் கட்சி மேலிடம் இட்ட பணிகளை நிறைவேற்ற நேரம் ஒதுக்குவீர்கள். கடந்த கால உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்….

Continue Reading

திருவலஞ்சுழியில் அருள்பாலிக்கும் வெள்ளைப்பிள்ளையார்

தஞ்சைமாவட்டம் – கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுவாமி மலைக்கு அண்மையில் திருவலஞ்சுழி எனும் திருத்தலம் உள்ளது. காவிரி வலமாகச் சுழித்து ஓடியதால் இத்தலத்திற்கு வலஞ்சுழி என்று பெயர். இங்கே கோயில் கொண்டுள்ள திருவலஞ்சுழிநாதர் தேவாரப்பாடல்களால் போற்றப் பெற்றவர். இத்திருக்கோயிலில் அருள்பாலிப்பவரே “சுவேதவிநாயகர்’ எனும் “வெள்ளைப்பிள்ளையார்’ ஆவார். இத்தலத்திற்கு திருவலஞ்சுழி என்று பெயர் ஏற்பட பிரம்மாண்ட புராணம் – பாபநாசத் தல மான்மியத்தில் புராணக்கதை ஒன்று கூறப்படுகிறது. ஒருசமயம், இத்திருத்தலத்தில் காவிரி தென்புறம் திரும்பி வலமாகச்சுழல அச்சுழற்சியால் பெரும்பள்ளம் ஏற்பட்டு அதன்வழியாக, கீழைத்திசையில் ஆறு ஓடாமல் தடைப்பட்டு பாதாளம் சென்றுவிடுகிறது. காவிரி வலமாகச்சுழித்த இடம் திருவலஞ்சுழி என அழைக்கப்படுகின்றது. தண்ணீருக்கு வழியின்றி பயிர்வளம் குன்றியது. ஜீவராசிகள் அழிந்தன. இச்செய்தி பாபநாசத்தில் அரசாட்சிபுரியும் பிரதாபவீரனிடம் தெரிவிக்கப்பட்டது. பிரதாப வீரன் தன்னுடைய படையோடு திருவலஞ்சுழிக்கு வந்து அங்கே அருள்பாலித்துவரும் சிவபெருமானையும் சுவேத (வெள்ளை) விநாயகரையும் வணங்கி, வலஞ்சுழியில் ஏற்பட்ட பெரும்பள்ளத்தினை மூட முயற்சித்தான். மூன்றுஆண்டுகள் கடந்தும் அதனை மூடமுடியாது வருந்தினான். முடிவில் அவ்வூரில் சற்றுத் தொலைவில் வசித்துவரும் ஏரண்ட முனிவரைச் சரண் புகுந்தான். ஏரண்டம் என்றால் ஆமணக்கு என்று பொருள். அந்த முனிவர் வசித்து வந்த பகுதி (ஆமணக்கு) “கொட்டையூர்’ எனப் பெயர்பெற்றது. ஏரண்டமுனிவரும் அதற்கு ஒரு வழி கூறினார். “காவிரியில் ஏற்பட்ட சுழற் பள்ளத்தை அடைக்க எனக்கு அல்லது உனக்கு நிகரான ஒருவர் அதில் இறங்க வேண்டும். அப்போதுதான் அந்த பள்ளம் அடைபடும்’ என்றார் முனிவர். உலக நன்மையின்பொருட்டு நானே அதில் வீழ்கின்றேன்’ என்று கூறி சிவபஞ்சாக்ஷரம் ஜபித்தவாறே சுழற்பள்ளத்தில் குதித்து காவிரியினை மேலெழப் பாய்ந்து கீழைத் திசையில் ஓடச்செய்தார். அதனால் மன்னன் பிரதாபவீரனுக்கு பிரம்மஹத்திதோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்திலிருந்து விடுபடுவதற்காக கொட்டையூருக்கு தென்மேற்கிலமைந்த பாபநாசத் தலத்தின் மேற்கில் 108 சிவாலயத்தை நிறுவி பிரம்மஹத்திதோஷம் நீங்கப்பெற்றான். இத்திருத்தல விநாயகரை கடல் நுரையினாலான சுயம்புமூர்த்தி என்றும் கூறுவர்.அட்சய திருதியையும் ஸ்ரீ அன்னபூரணியும் இந்திரனால் இவ்வூரில் நிறுவப்பட்ட பெருமைமிகு பிள்ளையாரை காளமேகக் கவிராயர் தன் பாடலால் “பிறவாத ஆம்பல்’ என வலஞ்சுழி மேவிய விநாயகர் மீது கவி பாடினார். “பறக்காத வண்டு, தீக்கனலில் கருகாத கரி, பன்முறை பண்ணிற்காக பயன்படுத்தப்பட்ட போதிலும் ஒன்றோடொன்று ஒட்டிவிடாத வீணையின் தந்தி, நெருப்பிலும் உருக்குலையாத பெருந்தங்கம், முழுதும் வெண்மையாய் விளங்கும் மண்டலத்தில் ஒரு சிந்தூரப்பொட்டு, பூசுதற்கு பயன்படாத சாந்து, பெருஞ் சுனையில் முளைக்காத ஆம்பல்’ என்று அமைகின்றது கவி காளமேகப்புலவரின் சொற்றொடர்கள். – முனைவர் ஆ. வீரராகவன் நன்றி Hindu திருஇடையாறு மருந்தீசர் !

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 16)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 16 நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: துயிலெடை நிறைவுற்று, நோன்பின் நோக்கம் தொடங்குகிறது. நோன்பியற்றும் பெண்கள் கண்ணனுடைய இல்லத்தை அடைந்து விட்டார்கள். இது நந்தகோபனுடைய இல்லம் அல்லவா? அதையே கூறுகிறார்கள். வாயிலில் வந்து நின்று, இல்லத்திற்குள் தங்களை அனுமதிக்கும்படி வேண்டுகிறார்கள். "நந்தகோபனுடைய அரண்மனையின் காவலனே, வாயிலின் காவலனே, கதவைத் திறந்து எங்களை உள்ளே அனுமதித்துவிடு. ஆயர் சிறுமிகளான எங்களுக்குப் பரிசு தருவதாக நேற்றே கண்ணன் எங்களிடம் தெரிவித்துவிட்டான். மாயனும் மணிவண்ணனுமான அவனைத் துயிலெழுப்புவதற்காக நாங்கள் தூய்மையானவர்களாக வந்திருக்கிறோம். இல்லை இல்லை என்று உன்னுடைய வாயால் மறுக்காதே. கதவைத் திறந்துவிடு’ என்று விண்ணப்பிக்கிறார்கள்.  பாசுரச் சிறப்பு: முறை தெரிந்தவர்களின் துணைகொண்டு கடவுளை அணுக வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் பாசுரம். கண்ணனுடைய இல்லம் என்று குறிப்பிடாமல், நந்தகோபன் இல்லம் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. நந்தகோபன் மகன் என்று அறிமுகம் செய்து கொள்வதுதான் கண்ணனுக்குப் பிடிக்கும். காண்பதற்கு அழகான (மணிக்கதவம்) கதவுகள், நேயக் கதவுகளாகவும் இருக்கின்றன. கண்ணன் தோன்றிய பின்னர், ஆயர்பாடியின் அஃறிணைப் பொருள்களும்கூட அன்பு கொண்டவையாக மாறிவிட்டன. உள்ளுறைப் பொருளில், "தூயோமாய் வந்தோம்’ என்பது கடவுள் திருத்தொண்டைத் தவிர வேறெதிலும் இவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதைக் காட்டுகிறது. ஆண்டவனை அணுகும் நெறியில், அடியார்களையும் ஆசானையும் அணுகி, அவர்கள் வழியாகக் கடவுளை நெருங்கும் வழிமுறையைக் குறிப்பாகச் சுட்டுகிற பாசுரம்.  அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 16 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்ஸ்ரீ கிருஷ்ணரின் திருவிளையாடல்கள் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – பொன் முத்துக்குமரன் விளக்கம்: பாவை நோன்பின் பொதுப் பயனாக மழையை வேண்டுகிற பாடல். திருப்பாவையின் நான்காவது பாடலான "ஆழி மழைக்கண்ணா’ என்னும் பாசுரத்தை ஈண்டு நினைவுகூரலாம். மழை மேகத்தைக் காண்கிறபோது, இப்பெண்களின் சிந்தனையில் அம்மையின் தோற்றம் எழுகிறது. கருநீலமாகப் புலப்படுகிற பெருங்கடலை, அப்படியே சுருக்கி வற்றச் செய்ததுபோல், வானிலுள்ள கருமேகமும் காட்சி தருகிறது. கருமேகத்தைக் கண்டால், கரிய திருமேனி கொண்டவளான அம்பிகை போன்றே தோன்றுகிறது. "எம்மை ஆட்கொள்கிற உடையாளான அம்பிகையின் நுண்ணிடை இருப்பதும் இல்லாததுமாகத் தோன்றுவதுபோல், மேகத்தின் மின்னலும் மிளிர்ந்து மறைகிறது. அடுத்து இடிக்கிற இடியோ, எங்கள் அம்மையின் திருக்கால்களில்…

Continue Reading

51 சக்தி பீடங்களின் மகத்துவம் (முழு விவரங்களுடன்) – நவராத்திரி ஸ்பெஷல்!

இந்த பிரபஞ்சம் என்ற நாணயத்தின் இரு பக்கங்களாக விளங்குபவர்கள்தான் சதி (அன்னை பார்வதி தேவி), இறைவன் சிவபெருமான். பிரம்மன் மற்றும் பிரதானும் போல. இந்தக் கதை ஒரு யாகத்தில் தொடங்கி சதியின் தீக்குளிப்புடன் சக்திக்கு அடிகோலி நிறைவு பெறுகிறது. சிவபெருமானுக்கு அழைப்பு விடுக்காமல், அவமதிக்கும் வகையில், தட்சிணன் மிக வலிமையான யாகம் நடத்த, யாகத்தைத் தடுக்கும் வகையில் சதி, அந்த யாகத்தில் தன்னைத் தானே இட்டு மாய்த்துக் கொண்டதால் உருவானதே 51 சக்தி பீடங்கள். இதனால் கடும் உக்கிரம் கொண்டு சதியின் உடலைக் கையில் ஏந்தியபடி சிவபெருமான் இந்த உலகமே அழியும் வகையில் தாண்டவமாட, மகாவிஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தால் சதியின் உடலை 51 துண்டுகளாக்குகிறார் (சில மகான்கள், இதனை 108 துண்டுகள் என்கிறார்கள்.) சிவனின் உக்கிர தாண்டவத்தால், சதியின் உடல் பகுதிகளும் இறைவி அணிந்திருந்த அணிகலன்களும் பூமியின் பல பகுதிகளில் சிதறி விழுந்தன. இவ்வாறு தேவியின் உடல் பகுதிகள் ஒவ்வொன்றும் விழுந்த புனித இடங்களே 51 சக்தி பீடங்களாக விளங்குகின்றன, பக்தர்களால் வணங்கப்படுகின்றன. இவை, சமஸ்கிருத மொழியில் உள்ள 51 எழுத்துகளைக் குறிப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த 51 சக்தி பீடங்களிலும் ஒன்றுபோல சக்தி தேவியும், கால பைரவரும் முக்கிய வழிபாட்டுத் தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர். தனிச்சிறப்பு கொண்ட சக்தி பீடங்கள், இந்திய எல்லைக்குள் மட்டுமல்லாமல், அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், திபெத், வங்கதேசம், இலங்கை ஆகியவற்றிலும் விரிந்து பரந்து உள்ளன. இவை அனைத்தும் இந்து மதத்தைப் பறை சாற்றுவதோடு, அந்தந்தப் பகுதியின் சிறப்பியல்புகளை எடுத்தியம்பும் வகையிலும் அமைந்திருப்பது கூடுதல் விசேஷம். தெய்வ வழிபாடு என்பது, பல நாடுகளின் எல்லைகளைக் கடந்து, அவற்றை ஒரு குடும்பம் போலக் கருதச் செய்யும் இந்து மதத்தின் மகத்துவத்தையும் கொண்டுள்ளன சக்தி பீடங்கள். காஷ்மீர் முதல் தமிழகம் வரையிலும் குஜராத் முதல் மேற்கு வங்கம் வரையிலும் தியாகம் – காதல், நம்பிக்கை –  மறுமலர்ச்சியின் அம்சங்களாக சக்தி பீடங்களில் இறைவி அருள்பாலித்து வருகிறார். சிவ புராணம் மற்றும் காளிகா புராணங்களில், 4 சக்தி பீடங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன – அவை, விமலா (புரி, ஒடிசா), தாரா தாரிணி (கஞ்சம், ஒடிசா), காமாக்யா (குவஹாட்டி), தட்சிண காளிகா (காளிகட், கொல்கத்தா) ஆகியன. சில சக்தி பீடங்கள், நூறுநூறாண்டுகள் பழைமை வாய்ந்தவையாக உள்ளன. அதோடு, இந்தக் கோயில்கள் இதுநாள் வரை, பல புராதன உள்ளூர் நம்பிக்கைகளையும் ஐதீகங்களையும் தாங்கி நிற்கின்றன. உதாரணமாக, 15 ஆம் நூற்றாண்டில், புத்த மாலிக் என்ற கால்நடை மேய்ப்பவருக்கு, ஒரு துறவி பை நிறைய நிலக்கரியை அளிக்கிறார். அது சிவபெருமானின் சக்தியால் தங்கமாக மாறியது. தனது நன்றியை வெளிப்படுத்த இறைவனைத் தேடிய புத்த மாலிக், அமர்நாத் குகையில் பனி லிங்கமாகக் காட்சியளித்த சிவலிங்கத்தை வணங்கினார் என்ற ஐதீகம் இன்றளவிலும் விளங்கி வருகிறது. உலகின் மிகப் பெரும் ஆக்கும் சக்தியாகவும் அழிக்கும் சக்தியாகவும் பார்வதி தேவி விளங்குகிறார். சதியின் மறுபிறவியான பார்வதி தேவி, ஆக்கம், மகப்பேறு, மாற்றம், ஆணின் சுதந்திரம் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் சக்தியாகவும் வழிபடப்படுகிறார். சக்தியின் முக்கியத்துவம் சிவராத்திரியின் போது வெளிப்படுகிறது. சதி,…

Continue Reading

திருடியாவது தின்ன வேண்டும் திருவாதிரை களியை..

  தமிழர்களுக்கு மாதந்தோறும் பண்டிகைகள்தான். பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல், திருவள்ளுவர் திருநாள், வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி, திருக்கார்த்திகை தீபம் உள்ளிட்ட ஏராளமான பண்டிகைகள் உள்ளது. அதில்,சில பண்டிகைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. அதில், மார்கழி மாதம் வரக்கூடிய திருவாதிரை திருநாள் முக்கியமானதாகும். மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும், பெளர்ணமியும் சேரும் திருநாள் திருவாதிரை திருநாள் ஆகும். திருவாதிரைப் பண்டிகை தென்னிந்திய சைவர்களால் கொண்டாடப்படுகின்றது. அனைத்து சிவாலயங்களிலும் உறையும் சிவபெருமானுக்கும், தியாகராஜர், நடராஜப் பெருமானுக்கும் திருவாதிரை அன்று விசேஷமாக ஆறு கால பூஜைகளும், அபிஷேகங்களும் செய்யப்படும். முடிவில், கூடியிருக்கும் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார். இதை ஆரூத்ரா தரிசனம் என்பர். ஐம்பூதங்களில் ஆகாசத்தலமான சிதம்பரம் ஷேத்திரத்திலும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலும் திருவாதிரை திருநாள் ஆண்டுதோறும் மிகப் பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. (இந்த ஆண்டு கரோனா தொற்றால் நடத்தப்படவில்லை.) சிதம்பரத்தில் அஷ்ட மூர்த்திகள் காட்சியளிப்பது போலவே, மன்னார்குடி தேரடி, ராஜகோபால சுவாமி கோயில் முன்பு, அஷ்டமூர்த்திகளும் அலங்காரக் கோலத்தில்  வரிசையாக நிறுத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். திருவாதிரை நாளன்று வீடுகளில் பெண்கள் நோன்பிருந்து களியும், கூட்டும் சமைத்து கடவுளுக்கும் படைத்து வழிபடுவர். அன்று சிவபெருமான் களியும், கூட்டும் சாப்பிட்டு களியாட்டம் ஆடி, கூடி நின்ற பக்தர்களுக்கு தில்லை மூவாயிரவர் எனப்படும் சிவனடியார்க்கு தரிசனம் கொடுத்ததாக ஐதீகம். திருவாதிரை நாளன்று சிவபெருமானுக்கு படைத்த களியை பிரசாதமாக உண்ணுவதில் பெண்களுக்குத்தான் முன்னுரிமை. கடவுள் எதிரில் ஒரு வாழையிலையையும், வீட்டிலுள்ள கட்டுக் கிழத்தியாருக்கும், கன்னிப் பெண்களுக்கும் வாழையிலைகள் போடப்பட்டு, இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைப்பர். கடவுளுக்கு நிவேதனம் செய்து அப்படியே பெண்களும் தங்களது இலைகளுக்கு நீர் சுற்றி களி நிவேதனம் செய்து வணங்கி சாப்பிடுவர். சாப்பிட்டு முடித்த பின் தங்களின் கணவரை அழைத்து வணங்கி ஆசி பெறுதல் மரபு. பிறகு வீட்டில் உள்ள ஆண்களுக்கு பிரசாதம் பரிமாறப்படும். திருவாதிரைக் களி பிரசாதம் சாப்பிட்டால் மிகவும் விசேஷமாகும். திருவாதிரைக் களியை திருடியாவது தின்ன வேண்டும் என்று ஒரு வழக்கு (பழமொழி) இருக்கிறது. இந்த சிறப்பு மிகுந்த களியை எப்படி சமைப்பது என்று சிலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால் களி செய்வதின் செயல்முறையைப் பார்ப்போம். களி செய்யத் தேவையான பொருட்கள் பச்சரிசி, வெல்லம் தூளாக்கியது. துவரம் பருப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய், முந்திரி, திராட்சை, கனிந்த பூவன் வாழைப்பழம், பச்சை கற்பூரம், நெய் ஆகியவைகளை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 12) செய்முறை அரிசியை சிவக்க வறுத்து நொய் (குருணை)யாகப் பொடியாக்க வேண்டும். துவரம் பருப்பையும் சிவக்க வறுக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் தேவையான அளவுக்கு தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி, துவரம் பருப்பையும் அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்ததும் தேவையான உப்பைப் போட்டு, அரிசி நொய்யை கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி…

Continue Reading

திருவாசகம் தந்த மாணிக்கவாசகர்…

பாண்டிய நாட்டின் வைகை நதிக்கரையில் உள்ளது திருவாதவூர். சனி பகவானின் வாத நோயை சிவன் தீர்த்ததால், “திருவாதவூர்’ என்று பெயர். இந்தச் சிறப்புமிகு ஊரில் பிறந்தார் மணிவாசகர், “திருவாதவூரார்’ என்று அழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே கல்வி, ஞானத்தில் சிறந்திருந்ததால், அவரை அமைச்சராக்கினார் பாண்டிய மன்னர். சோழநாட்டுத் துறைமுகங்களில் கப்பல்களில் வந்திருந்த குதிரைகளை வாங்கி வர திருவாதவூராரை அனுப்பினார். அவர் புறப்பட்டு சென்றபோது, வழியில் திருப்பெருந்துறை தலத்தில் குருந்த மரத்தடியில் ஞானமே வடிவாய் அமர்ந்திருந்தவரை திருவாதவூரார் வணங்க, அமர்ந்திருப்பது சிவன்தான் என உணர்ந்தார் திருவாதவூரார். அப்போது, வாதவூரார் பாடிய பாடல்களைக் கேட்ட சிவன், “” உன் சொற்கள் மாணிக்கத்தைவிட மதிப்புமிக்கவை. இனி நீ மாணிக்கவாசகர் என்று அழைக்கப்படுவாய்” என்று சொல்லி மறைந்தார் சிவன். இதன்பின்னர் துறவியாக மாறினார் மாணிக்கவாசகர். வந்த வேலையை மறந்து, கொண்டுவந்த பொன், பொருள்களை திருப்பணிகளுக்குச் செலவிட்டார். நாள்கள் கடந்தும் திரும்பாத மாணிக்கவாசகருக்கு மன்னர் ஓலை அனுப்ப, இறைவனைச் சரணடைந்தார் மாணிக்கவாசகர். அப்போது, “”ஆடி மாதம் முடிவடைவதற்குள் குதிரைகள் வந்து சேரும் என்று ஓலை அனுப்பு” என்ற அசரீரி எழ, அவ்வாறே செய்தார் மாணிக்கவாசகர். ஆடி மாதமாகியும் குதிரைகள் எதுவும் மதுரைக்கு வராததால், சந்தேகம் கொண்ட மன்னரும் மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்தார். வனத்தில் இருந்த நரிகளைக் குதிரைகளாக்கி மதுரைக்கு அனுப்பினார் சிவன். மாணிக்கவாசகரை விடுதலை செய்தார் மன்னர். அன்றிரவே குதிரைகள் நரிகளாக மாறி ஊளையிட்டன. சினம் கொண்ட மன்னரோ, மாணிக்கவாசகரை வைகை நதியின் சுடு மணலில் நிறுத்தி மரணத் தண்டனை அளிக்க உத்தரவிட்டார். அப்போது வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த, “வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்க வரவேண்டும்’ என்று ஆணையிட்டார் மன்னர். அப்போது, பிட்டு விற்றுப் பிழைக்கும் மூதாட்டி தனது பங்குக்கு ஆள் இல்லாமல் திண்டாடினார். சிவன் கூலியாள் வேடம் அணிந்துவந்து, பிட்டுக்கு மண் சுமக்க ஒப்புக் கொண்டார். வேலைக்கு வந்த சிவன், படுத்துத் தூங்கினார். அதைக் கண்ட மன்னர் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் சிவனை அடிக்க, அடியானது அனைத்து உயிர்கள் மீதும் விழுந்தது. மன்னரும் வலியால் துடித்தார். அப்போது பணியாள் உருவில் இருந்த சிவன் ஒரு கூடை மண்ணை எடுத்துச் சென்று கரையில் கொட்ட, வெள்ளம் வடிந்தது. சிவனும் அங்கிருந்து மறைந்தார். தவறை உணர்ந்த மன்னரும் மாணிக்கவாசகரை அமைச்சர் பதவியில் மீண்டும் நியமித்தார். அவரோ அதை நிராகரித்துவிட்டு, சிதம்பரம் தலத்துக்குச் சென்றார். அங்கே தங்கி இறைவனை எண்ணி பாடல்கள் பாட வேதியர் ஒருவர் ஓலையில் எழுதினார். பின்னர், அவர் “திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான்’ என்று எழுதி ஓலைகளைக் கீழ்வைத்து மறைந்தார்.நவம்பர் மாதம் இந்த ராசிக்காரருக்கு பல நன்மைகள் உண்டாகும்: மாதப் பலன் பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும் திருக்கோவையும் எட்டாம் திருமுறைகளாக விளங்குகின்றன. 32 ஆண்டுகளே வாழ்ந்த மாணிக்கவாசகர், ஆனி மாதத்தில், மகம் நட்சத்திரத்தில் சிதம்பரம் தலத்தில் இறைவனோடு கலந்தார். இந்த நாளில் அனைத்து சிவன் கோயில்களிலும் மாணிக்கவாசகரின்…

Continue Reading

ஜோதிட ரீதியான பரிகாரங்களை எப்போது செய்ய வேண்டும்?

எல்லா மனிதர்களும் தமது வாழ்வில் எந்த ஒரு பிரச்னையும், கஷ்டமும், கவலையும் இல்லாமல் இருக்கவேண்டும் என்றுதான் ஏங்குகிறோம். ஆனால், எதிர்பாராத விதமாக நாம் எவ்வளவு முன்னெச்சரிக்கையோடும், ஒழுக்கத்தோடும் காரியம் ஆற்றினாலும் முடிவில் சில போது, சிலருக்கு எப்போதும் தவறாகவே நடந்து முடிந்து விடுகிறது. காரணம் தெரிவதில்லை. இதிலிருந்து எல்லா வயதினரும், ஏன் அனுபவம் பெற்றிருந்தும் தவறுகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த முடிவதில்லை. நமது தகுதிக்கும், பண்புக்கும் மீறி நடைபெறும் அந்த செயல்கள் எதனால் என்பதனை அனைவரும் மனதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இதற்குதான் ஜோதிடம் ஒரு நல்ல அறிவுரையைத் தருகிறது என்றால் அது மிகை ஆகாது. ஆம்! சிலர் ஜோதிடம் நன்கு அறிந்து, அந்த மாயவித்தையிலிருக்கும் செய்தியை நம்பிக்கையோடு பின்பற்றி சரியான, மகிழ்வான வாழ்வினை அடைகின்றனர். சிலர் நினைக்கக்கூடும், கோயிலில் மணிக்கணக்கில் அமர்ந்து பூஜை செய்வதும், தம்மிடம் உள்ள பணத்தை வாரி இறைப்பதால், பிரச்னைகள் தீரும் என்று நினைத்துச் செயல்பட்ட பின்னரும், அதே போல் இருப்பதால் -அந்த நிலையே நீடிப்பதால், மனம் தளர்வதை காண முடிகிறது. முதலில் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், பிரச்னை என்பது நமது வாழ்வோடு இணைந்திருப்பது தான், அதனை எவ்வாறு களைவது  என்பதுதான் நாம் எடுக்கவேண்டிய தீர்வாகும். எப்படி நெல்லின் மேல் தோலை (உமி) நீக்க முதலில் கதிர்களை அடித்து நெல்மணியாக்கி பின்னர் அதனை உரலில் லேசாக இடித்து பின்னர் முறத்தில் இட்டு அதனை காற்று வரும்போது அதற்கு எதிர்த்திசையில் புடைத்தால், உமி நீங்கி அரிசி மட்டும் கிடைக்குமோ, அதுபோலவே நமது பிரச்னைகளை எவ்வாறு, எப்போது நீக்கவேண்டும் என்பதைப் பற்றியே இக்கட்டுரை. (தற்போது அனைத்திற்கும் இயந்திரங்கள் வந்து விட்டதால், எளிமையாக நெல்லிலிருந்து உமியை நீக்கி அரிசி பெறுவது போன்று, சில எளிமைபடுத்தும் வழிகள் பல வந்து விட்டது, உண்மை தான்.) படிக்க: சனிப்பெயர்ச்சி யாருக்கு கைகொடுக்கும்! என்ன சொல்கிறார் ஜோதிடர்? ஜோதிடத்தை பொறுத்தவரை அனைத்துமே நேரம் / காலம். இதனை முதலில் புரிந்துகொள்ளுதல் அவசியம். ஒருவர் பரிகாரம் செய்யவேண்டுமானால், அதனை செய்யும் காலம் அறிதல் முதன்மையானது. நிச்சயம் அது தேய்பிறையாக இருத்தல் அவசியம். மேலும் பாக்கியாதிபதி எனும் 9ஆம் அதிபதியின் தசை அல்லது புத்தியாக இருத்தல் வேண்டும். அல்லது சிலருக்கு யோகாதிபதியாக வரும் அதிபதியின் தசை அல்லது  புத்தியாக இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தாலும் அந்த கிரகங்கள், அவயோகி நட்சத்திர காலில் நிற்காமல் இருந்திடல் வேண்டும். இவை ஒரு சிலவே, நிச்சயம் ஜோதிடரை நாடி பலன் பெறுவது அவசியம் ஆகும். பொதுவாக ஒரு எண்ணம் அனைவரின் மனதிலும் இருக்கிறது, ஒரு ஜோதிடர் சொன்னால், எல்லோருக்கும் நடந்து விடுகிறது ஆனால் எனக்கு மட்டும் ஏனோ சரியாக நடப்பதில்லை என கூறுவர். இதனை காரணம் காட்டி பல ஜோதிடரை அணுகியும் விடிவு காண முடியாமல் தவிப்போரும் உண்டு. ஜோதிடர் கூறிய சரியான நேரத்தை, சரியான முறைப்படி செய்தால், நிச்சயம் பலன்கிட்டும். ஐயம் வேண்டாம். முதலில் ஜோதிடத்திலும், ஜோதிடர் மீதும், நம் பிரச்னை…

Continue Reading

உன்மத்தர் உழலும் ஊஞ்சலூர்! சேஷாத்திரி சுவாமிகள் ஆராதனை!

தர்மம் தழைத்தோங்கவும், அனைத்து ஜீவராசிகள் உய்யவும், கர்ம, பக்தி, ஞான யோகத் தத்துவங்களை உபதேசிக்கவும் மகான்கள், அருளாளர்கள், குருமார்கள் அடிக்கடி அவதரிப்பது பாரத பூமியின் மிகப்பெரிய பெருமை. தர்மம்  தழைத்தோங்கவும், அனைத்து ஜீவராசிகள் உய்யவும், கர்ம, பக்தி, ஞான யோகத் தத்துவங்களை உபதேசிக்கவும் மகான்கள், மகனீயர்கள், அருளாளர்கள், குருமார்கள் அடிக்கடி அவதரிப்பது பாரத பூமியின் மிகப்பெரிய பெருமை. அப்படிப்பட்ட ஒரு திரு அவதாரம்தான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள். வந்தவாசி அருகில் வழூர் கிராமத்தில் வசித்துவந்த மரகதம்மாள், வரதராசன் தம்பதிகளுக்கு பிறந்தவர். வெகு நாள்கள் குழந்தைப்பேறு வாய்க்காமல் வருந்திய அந்த தம்பதிகளுக்கு காமாட்சி அம்மன் கனவில் தோன்றி அருளியவண்ணம் மந்திரித்து நவநீதம் (வெண்ணெய்) சாப்பிட அதன் பயனாய் மரகதம்மாள் கருவுற்று அவதரித்தவர். ‘வெண்ணெய் உருவாக்கிய ஆன்மீகக் ‘கரு’ வூலம் இந்த மகான் என சிலாகித்து கூறலாம். அன்னை இறக்கும் தருவாயில் உணர்த்தியபடி திருவண்ணாமலையை அடைந்து சுமார் நாற்பது வருடங்கள் நான்கும் (நான்கு வர்ணாஸ்ரமங்கள்) கடந்த அதீத நிலையில் உன்மத்தராய், சித்த புருஷராய், பித்தராய் அவரவர்களுக்குத் தோன்றியவண்ணம் நின்று பக்தர்களின் இருள், இடர் நீக்கி, மெய்யறிவூட்டி நல்வழிகாட்டி அருளிய மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். விப வருடம் 1929 மார்கழி மாதம் கிருஷ்ண பக்ஷ நவமி திதியன்று (4.1.29) மகா சமாதி எய்தினார். திருவண்ணாமலை செங்கம் முதன்மைச் சாலையில் அவரது சமாதி உள்ளது. மகனீயர்கள், ஒரு இடத்தில் வசித்தாலும், சமாதி கொண்டாலும் அவர்கள் அந்த இடத்தில் மட்டும் உழுபவர்கள் அல்லர், எங்கு, எவ்விதம் அவர்களது அருட்சக்தியை ஸ்தாபனம் செய்து வழிபட்டாலும் அங்கு அவர்களது அருள் பூரணமாக நிலைத்து நின்று வேண்டுவோருக்கு வேண்டியதை அருளிக் காக்கும். இதனை காய வ்யூகம் என்பர். அனேக சரீரமெடுத்து ஒரே நேரத்தில் நான்கைந்து இடங்களில் தென்படுதலைக் குறிக்கும். இவ்விதமாக, திரு அருணையில் தனது சரீரத்தை அடக்கிக் கொண்ட ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு ஊஞ்சலூரில் அமையப் பெற்றதுதான் ‘ சூஷ்ம யோக சமாதி’ அதேபோன்று நெரூர் ஸ்ரீ சதாசிவப்ரம்மேந்திரருக்கு மூன்று சமாதிகள், மதுரை குழந்தையானந்த சுவாமிகளுக்கு நான்கு சமாதிகள் வெளிப்படையாக அமைந்துள்ளன. ஸ்ரீ ராகவேந்திரருக்கு நூற்றுக்கணக்கில் பிருந்தாவனங்கள் அமைந்துள்ளன. ஊஞ்சலூர்: ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டிற்கும், கரூருக்கும் மத்தியில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள சிறிய கிராமம்தான் ஊஞ்சலூர். (கொடுமுடியில் இருந்து  5 கி மீ தூரம்) இவ்வூரில் உள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் அம்பாள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடினதான ஐதீகத்தில் ஊஞ்சலூர் என்ற பெயர் அமைந்ததாம். இன்றும் இக்கோயிலில் ஒரு ஊஞ்சல் தொங்கியபடி தெய்வீகமாகப் போற்றி வழிபடப்படுகிறது. இதைத் தவிர இந்த ஊரில் புராதனமான நாகேஸ்வரஸ்வாமி திருக்கோயில், செல்லாண்டியம்மன் கோயில்,. ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனமும் அமைந்துள்ளது. ஸ்ரீ ஸத்குருஸ்வாமிகளின் அருளாசி உத்தரவின்படி  26.11.50ல் ஊஞ்சலூரில் சூஸ்மயோக சமாதி வைதீக பிரதிஷ்டையாக அமைக்கப்பட்டு தினசரி பூஜைகளும், ஆராதனை, ஜெயந்தி உற்சவங்களும், நவாவரண, பௌர்ணமி பூஜைகளும் நடைபெறுகின்றன. தற்போது இவ்வாலயத்தில் பிள்ளையார், பாலமுருகன் சன்னதிகள், ஸ்ரீ சக்ரபிரதிஷ்டை, சிறப்பு வாய்ந்த அர்த்தநாதீஸ்வரலிங்கம்,…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 20)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 20 முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்! செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்! உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: கண்ணனும் நப்பின்னையுமான திவ்விய தம்பதிகள் எழுப்பப்படுகிற பாசுரம். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு ஏதேனும் துன்பம் வருவதற்கு முன்னரே சென்று, அவர்களின் நடுக்கத்தை நீக்கக்கூடிய கண்ணனே, எழுந்திருக்க வேணும். (அடியார்களைக் காக்கும்) உறுதி கொண்டவனே, வலிமை உடையவனே, பகைவர்களுக்கு நடுக்கம் தரக்கூடிய தூய்மையாளனே, எழுந்திருக்க வேணும். அழகிய மார்புகளையும் சிவந்த வாயையும்நுண்ணிடையையும் கொண்ட நப்பின்னையே, செல்வத்திற்குரியவளே, எழுந்திருக்க வேணும். நோன்புக்கு உபகரணங்களான ஆலவட்ட விசிறியையும் கண்ணாடியையும் தந்தருளி, உன் மணாளனான கண்ணனை (எங்களுக்கு அருள) அனுப்ப வேணும்.  பாசுரச் சிறப்பு: கண்ணனைப் பாராட்டிவிட்டு, நப்பின்னையிடத்தில் பிரார்த்திக்கிறார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அருளியதை எடுத்துக் காட்டுகிறார்கள். அத்தனை பேருக்கு அருளிய கண்ணனுக்கு, இந்தச் சிறுமிகளுக்கு அருள்வது எம்மாத்திரம் என்பது குறிப்பு. "தேவர்களுக்காவது செருக்கும், ஆணவமும், இறுமாப்பும் உண்டு. எமக்கு அவையெல்லாம் இல்லையே’ என்னும் ஆதங்கத்தின் வெளிப்பாடு. நோன்பு நோற்பதற்கும் வழிபாடு செய்வதற்கும் தக்க பொருள்கள் சில பயன்படுத்தப்படும். அவற்றில் விசிறியும் கண்ணாடியும் மட்டுமே இங்கே பேசப்படுகின்றன. பலவற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்னும் வகையில்,  அனைத்து உபகரணங்களையும் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ள வேண்டும். அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 20 போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 1) போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – பொன் முத்துக்குமரன்  விளக்கம்: திருவெம்பாவையின் நிறைவுப் பாடல். நோன்பை நிறைவு செய்யும் பெண்கள், இறைவனின் திருவடிகளைப் போற்றுகின்றனர். "எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருக்கும் நின் திருவடிகளுக்குப் போற்றி. எல்லாவற்றுக்கும் இறுதியாக இருக்கும் திருவடிகளுக்குப் போற்றி. உயிர்களும் பொருள்களும் உயர்திணையும் அஃறிணையும் தோன்றுவதற்குக் காரணமான திருவடிகளுக்குப் போற்றி. வாழ்க்கையை அனுபவிக்கக் காரணமான திருவடிகளுக்குப் போற்றி. அனைத்து உயிர்களும் சென்று சேர்கிற இடமான திருவடிகளுக்குப் போற்றி. திருமாலும் பிரம்மாவும் காணாத திருவடிகளுக்குப் போற்றி. எமக்கு உய்யும் கதி நல்குகிற திருவடிகளுக்குப் போற்றி. இப்பேற்றையெல்லாம் அளிக்கவல்ல மார்கழி நோன்புக்கும் நீராட்டத்திற்கும் போற்றி’} போற்றி போற்றி என்று சிவப்பரம்பொருளின் சகல மேன்மைகளையும் போற்றுகின்றனர்.  பாடல் சிறப்பு: நிறைவுப் பாடலில் "மார்கழி நீராடல்’ என்று இத்தனை நாள்கள் நோற்ற நோன்பினைமாணிக்கவாசகப் பெருமான் குறிப்பிடுகிறார். நோன்பு…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 29)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 29 சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்:   நோன்பு தொடங்கிய நாள் முதல், பறை என்று பரிசுகளைப்பற்றிக் கூறிக்கொண்டேயிருந்த பெண்கள், இப்பாசுரத்தில்தான், தாங்கள் நாடுகிற பரிசு என்ன என்பதைத் தெளிவாக உரைக்கிறார்கள். “அதிகாலைப் பொழுதில் வந்து உன்னை வணங்கி, உன்னுடைய திருவடிகளைப் போற்றி நாங்கள் நிற்பதற்கான காரணத்தைக் கேளாய். பசுக்கூட்டத்தை மேய்க்கும் ஆயர்குலத்தில் பிறந்துள்ள நீ, எங்களை உனக்கான தொண்டர்களாகக் கொள்ளாமல் விட்டுவிடாதே. ஏதோ இப்போதைக்குப் பரிசு பெறுவதற்காக வந்தோம் என்று எண்ணாதே. எந்தக் காலமானாலும், எத்தனைப் பிறவிகளானாலும் உன்னோடு உறவு கொண்டவர்களாக இருப்பதையே யாசிக்கிறோம். என்றென்றும் உனக்கு அடிமைகளாக இருப்போம். இவைதவிர வேறு ஏதேனும் விருப்பங்கள் எங்களுக்கு இருக்குமானால், அவற்றை மாற்றிவிடு’ என்று கோருகிறார்கள்.  பாசுரச் சிறப்பு: நோன்பைத் தலைக்கட்டுகிற (நிறைவேற்றுகிற) நிலையில் வைக்கப்படுகிற விண்ணப்பம் இது. குற்றேவல் என்பது சிறு சிறு ஏவல் கூவல் பணிகள். அந்தரங்கக் கைங்கர்யம் (தனித் தொண்டு) என்பார்கள். ஏழேழு என்பதனை 7, 7+7, 7+7 என்று எவ்விதமாகவேனும் கொள்ளலாம். என்றைக்காக இருந்தாலும் எம்பெருமானுக்கு அடிமைகளாகவும் எம்பெருமானின் உடைமைகளாகவும் இருக்க வேண்டும் என்பதே நிரந்தர விண்ணப்பம். செயல் பெரியதா சிறியதா என்பதைக் காட்டிலும், அது செய்யப்படுகிற நோக்கம் முக்கியமானது. எந்தச் செயலாக இருந்தாலும், அளவுக்கும் பார்வைக்கும் சிறியதாகவே இருப்பினும், அச்செயலுள் இருக்கும்  அன்பும் பக்தியும் அறமும் ஆர்வமும் முக்கியமானவை. ஆங்கிலக் கவிஞர் மில்டனின் They also serve who stand and wait என்னும் வரியை நினைவூட்டுகிற பாசுரம் (இதே உணர்வைத் திருப்பள்ளியெழுச்சியின் 7ஆவது பாடலில், எது எமைப் பணி கொள்ளும் ஆறு என்னும் வரியில் காணலாம்). நோன்பை நிறைவேற்றிய நிலையில், நோன்பின் பலனை இப்பெண்கள் பெற விருக்கிறார்கள். ஒரு செயலின் பலனை அனுபவிக்கும்போது, அந்தச் செயலைச் செய்ததற்கான பெருமையும், செயல் பலனுக்கான ஆனந்தமும், ஒருவகையான மதர்ப்பைத் தரும். அந்த ஆனந்தமே சுயநலமாக மாறும்; ஆணவமாகத் தலைதூக்கும். இதற்குப் பிராப்ய விரோதம் என்று பெயர். இப்படிப்பட்ட  சுயநலம் இல்லாமல், நோன்பென்னும் செயலையும், நோன்பின் நற்பலன்களையும்கூட இறைவனின் திருவடிகளில் அர்ப்பணிக்கிற பாசுரம் இது.  ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாசெவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்?  விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே! வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே! கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் –…

Continue Reading

சூரியன் – சந்திரன் சேர்க்கை நம்மை என்ன செய்துவிடும்? ஜோதிட சூட்சுமங்கள்

நம் பரசார ஜோதிடத்தில் ஒளி கிரகங்களான சூரியன் சந்திரன் என்பவர்கள் சிவனாகவும் சக்தியாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஒளிகிரகங்கள் மற்ற கிரகங்களையும் இயக்கும் முக்கிய பிரபஞ்ச சக்தியாகும். அவற்றில் சூரியன் என்பவர் பகலிலும் சந்திரன் என்பவர் இரவிலும் தன்னுடைய கதிர்வீச்சால் அனைத்து ஜீவ ராசிக்கும் பலத்தைக் கொடுக்க வல்லவர்.  ஒவ்வொரு உயிர் அணுக்களின் ஜீவன் என்பவர் சூரியன் ஆவார். அதனால் சூரியன் என்பவர் ஜாதக கட்டத்தில் வயிற்றையும் குழந்தையைக் குறிப்பது 5ம் பாவம் சிம்ம வீடு ஆகும். அவரே ஜாதத்தில் முக்கிய புள்ளி. அவரோடு ஜீவ சக்தியாக சந்திரன் உள்ளார். சந்திரன் வைத்துதான் கோச்சாரம் பலன் சொல்லப்படுகிறது. சூரியன் பகலில் பிறக்கும் குழந்தைகளுக்கும், சந்திரன் இரவில் பிறக்கும் குழந்தைகளுக்கும் அவரவர் கர்மாவிற்கு ஏற்ப பலம் கொடுக்க வல்லவர்கள். ஜாதக கட்டத்தில் முக்கிய தலைமை பொறுப்பில் சூரியன் சந்திரன் என்ற பிரகாச கிரகங்களுக்கு ஒரு ஆதிபத்தியமும்  மற்ற கிரகங்களுக்கு இரண்டு ஆதிபத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது.  சூரியனிலிருந்து சந்திரன் நகரும் பாகையைக் கொண்டு அது வளர்பிறை மற்றும் தேய்பிறை என்று பிரிக்கப்படுகிறது. ஒருவரது  ஜனன ஜாதகத்தில் உள்ள இரு கிரகங்களின் நெருங்கிய பாகை,  திரிகோணம்,  மற்றும் அவற்றின் பார்வை என்று பல்வேறு சூட்சுமங்களை சேர்க்கை என்று அழைக்கிறோம். நாம் இன்று சூரியன் சந்திரன் சேர்க்கையின் பொது பலன்களை சிறு விளக்கமாக பார்ப்போம். இவர்களோடு மற்ற அசுப கிரகங்களின் சேர்க்கை என்பது மாறுபட்ட பலன்களை கொடுக்கும். இது அவரவர்  ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து கூற வேண்டும். புலிப்பாணி தன் நூலில் இருவரின் சேர்க்கை பற்றி நல்ல பலனை கூறியுள்ளார்.  பாரப்பாயின்ன மொன்று பகரக்கேளுபகலவனும் கலை மதியும் கோணமேறசேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும்செல்வனுக்கு வேட்டலுண்டு கிரகமுண்டுஆறப்பா அமடு பயமில்லை யில்லைஅர்த்த ராத்திரிதனிலே சப்தம் கேட்பன்கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில்கூற்றுவனார் வருங்குறியை குறிபாய் சொல்லே .   விளக்கம்: சூரியனும், சந்திரனும் இணைந்து இருந்தால் எல்லாவித செல்வங்களும், வீடு, ஆயுள் விருத்தி கொண்டவராகவும் மற்றும்  ஜாதகர் இரவில் சப்தங்களைக் கேட்பானாகவும் இருப்பார்.  இத்தகைய அமைப்பில் உள்ள நபர் அதிகபட்சம் 78 வயது வரை உயிர் வாழ்வார் என  சித்தர்  கூற்று. நமக்கு பிராண வாயுவை தரும் நெருப்பு கிரகமான சூரியன் அவரோடு குளிர்ந்த சந்திரன் சேரும்பொழுது நன்று. இந்த இரு கிரகங்களின் பிரகாச சேர்க்கை ஒருவரின் ஜாதகத்தில் அதிக நன்மைகளையும் குறைந்த தீமைகளையும் தரவல்லது. சூரியன் மன உறுதியையும் சந்திரன் மனசலனத்தையும் குறிக்கும். இவர்கள் சேர்க்கை உள்ள ஜாதகர் குழப்பம் ஏற்பட்டாலும் தெளிந்த நீராக முடிவு எடுக்கும் குணம் உண்டு. இந்த சேர்க்கை அரசு சம்பந்த வேலை மற்றும் அரசியல் ஈடுபாடு மனதில் ஒரு ஓட்டம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.  நீர் ஓடை போல பல்வேறு  இடத்தில் வாழ பழகிக்கொள்வார்கள். குடும்ப தலைவர் மற்றும் தந்தைக்கு வெவ்வேறு இடங்களில் வேலை மாற்றம் இருக்கும். இவர்கள் வாழ்க்கை ஏற்ற இறக்கமாகவும், தாய் தந்தை ஒழுக்கத்தில் கண்டிப்பு மிக்கவராகவும், அறிவாளியாகவும்,…

Continue Reading

ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர் – பகுதி 3 – பூந்தோட்டம் சிவன்கோயில்

ஆலங்குடியை சுற்றி எட்டு திக்கிலும் அட்டதிக்கு பாலகர்கள் பிரதிட்டை செய்து வழிபட்ட கோயில்கள் உள்ளன. அதில் வருணன் வழிபட்ட கோயில் பூந்தோட்டம் எனும் இடத்தில் உள்ளது. இந்த பூந்தோட்டம் ஆலங்குடியின் மேற்கில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளது. சிறிய கிராமம், அதில்  இடது புறம்  பேருந்து நிறுத்தம் உள்ளது அதன் எதிரில் ஒரு சிறிய பெட்டிக்கடை இருக்கும் அதனை அடுத்து இரண்டு சிறிய ஒட்டு வீடுகள் உள்ளன. இந்த ஓட்டுவீடுகளின் இடையில் உள்ள சிறிய சந்தின் வழி சென்றால் சில நூறடிகளில் ஒரு சிறிய குட்டையின் கரையில் ஒரு திடல்,  அதன்பெயர் லிங்கத்தடி திடல். அதில் சிறிய தகர கொட்டகையில் தான் எம்பெருமான் வருணேஸ்வரர் எனும் பெயரில் வருணனால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு உள்ளார். இவரை வழிபடுவதன் மூலம் நிலம், நீர் இவற்றிக்கு வாழ்நாளில் பஞ்சமில்லாமல் வாழலாம். அருகில் உள்ள குட்டை தான் வருணன் ஏற்ப்படுத்திய வருண தீர்த்தம்.  சில நூறு ஆண்டுகளின் முன் பெரிய பிரகாரத்துடன் இருந்த கோயில் சிதிலமடைந்து தற்போது லிங்கம் , பைரவர் மட்டும் எஞ்சியது. அந்த ஒரு லிங்கத்திற்கு அன்பர்கள் சேர்ந்து ஒரு தகர கொட்டகை ஒன்றை அமைத்திருந்தனர். இதில் வருத்தம் என்னவென்றால் அந்த ஒரு தகர கொட்டகையையும் கஜா புயல் சாய்த்துவிட்டு சென்றுவிட்டது. சிறிதளவு நகர்த்தி உள்ளே சென்று இறைவனை காணும் அளவிற்கு இடம் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.செவ்வாய் – கேது சூட்சம விளக்கம்  சிறிய லிங்கமாக வருணேஸ்வரரும், புதிதாய் வைக்கப்பட்ட அம்பிகை தென்கோவலவல்லியும் உள்ளனர். இறைவனின் எதிரில் அவரது வாகனம் நந்தி உள்ளது. பழமையான பைரவர் உள்ளார் இதை கண்ணுறும்  அன்பர்கள் சிறிய தகர கொட்டகை ஒன்று எம்பெருமானுக்கு ஏற்ப்படுத்தி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கடம்பூர் விஜயன் – 9842676797 நன்றி Hindu இந்துமத அற்புதங்கள் 52: நோய் தீர்த்த மெய்தீர்த்தம்

பகல் பத்து 10-ம் திருநாள்: மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து 10 ஆம் நாளான வியாழக்கிழமை காலை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். விழாவையொட்டி காலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பட்டு காலை 7 மணிக்கு பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினாா்.  அங்கு அலங்காரம், அமுது செய்யத் திரையிடப்பட்டு காலை 8 மணி முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று முகக் கவசம், சமூக இடைவெளியுடன் நம்பெருமாளைத் தரிசித்து வருகின்றனர். இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை. திருமணப் பொருத்தம் என்பது தேவையான ஒன்றா? வைகுந்த ஏகாதசி பகல்பத்து 10-ஆம் நாளான வியாழக்கிழமை முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள். நன்றி Hindu பயமறியாதவர்கள் மேஷ ராசிக்காரர்கள்!

இந்துமத அற்புதங்கள் 52: நோய் தீர்த்த மெய்தீர்த்தம்

ஒற்றைக் கண்ணில் பார்வை பெற்று சில நாள்கள் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தார் சுந்தரர். திருவாரூர் செல்ல வேண்டிய ஆசையால், தன் பயணத்தைத் தொடர்ந்தார்.கண் பார்வை குறையோடு உடலிலும் தோலிலும் நோய் கண்டிருந்தது. பயணத்தாலும் களைப்பாலும் நோய் அதிகப்பட்டிருந்தது. திருவாவடுதுறையில் வணங்கி வழிபட்டுவிட்டுத் திருத்துருத்தி என்னும் தலத்தை அடைந்தார். தன் உடலின் மீதுள்ள நோய் நீங்க வேண்டுமென்று வேண்டினார். இறைவன் – உத்தரவேதீஸ்வரர்இறைவி – மிருதுமுகிழாம்பிகை சிவபெருமான் சுந்தரரை நோக்கி, "நம்பி! இந்தக் கோயிலின் வடக்குப் பக்கத்தில் ஒரு தீர்த்தம் உள்ளது. அதில் மூழ்கு. உன் உடல் நோய் தீரும்” என்று திருவாக்கு அருளினார். சுந்தரரும் அக்குளத்தில் மூழ்கி எழுந்தார். அவரின் உடல்நோய் நீங்கியிருந்தது. மேனி, பொன்னாய்ப் பிரகாசித்தது. உடனே திருக்கோயிலுக்குள் சென்று தன் நன்றியைக் காட்டப் பதிகம் பாடினார்.ஆசைகளைப் பூர்த்தி செய்யுமா பதினோராம் பாவம்? ஜோதிட சூட்சுமங்கள்! திருத்துருத்தியில் உடல்பிணி நீங்கப் பெற்ற சுந்தரர் பாடிய பதிகம் "மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந்து அருவிவெடிபடக் கரையொடும் திரைகொணர்ந்து எற்றும்அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்சொன்னவாறு அறிவார் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்என்னைநான் மறக்குமாறு எம்பெரு மானைஎன்னுடம்பு அடும்பிணி இடர்கெடுத் தானை” திருத்துருத்தி தலத்தினைச் சென்றடையும் வழி:குத்தாலத்திற்குப் பக்கத்தில் உள்ளது. மயிலாடுதுறை – மகாராஜபுரம் சாலையில் உள்ளது. நன்றி Hindu வரத்தை அருளும் அம்மன்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 13)

  ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 13 புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழ முறங்கிற்று புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய் குள்ளக் குளிரக் குடைந்துநீ  ராடாதே பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி  விளக்கம்: இதுவும் துயிலெடை. “பறவை வடிவம் கொண்டுவந்த பகாசுரனின் வாயைக் கிழித்து அழித்தவனும், கொடிய இராவணனைக் குலத்தொடும் வேரறுத்தவனுமான எம்பெருமானுடைய பெருமைகளைப் பாடிக்கொண்டே நோன்புக் களத்திற்குப் பெண்கள் சென்றுவிட்டனர். கிழக்கே வெள்ளி முளைத்துவிட்டது. வியாழக் கோள் இறங்கிவிட்டது. பறவைகள் பலவகைகளிலும் ஒலி எழுப்புகின்றன. மலர்போன்ற கண்களைக் கொண்ட அழகானவளே. (அதிகாலைப் பொழுதில்) ஆற்றில் குள்ளக் குடைந்து நீராடாமல் இவ்வாறு உறங்கிக் கிடக்கிறாயே’ என்று உள்ளிருப்பவளைப் புறத்திருப்போர் அழைக்கின்றனர். பிறரெல்லாம் நோன்புக் களம் போன பின்னாலும் நீ இன்னும் உறங்கலாமா? என்னும் அங்கலாய்ப்பு. பாசுரச் சிறப்பு: கிருஷ்ணாவதார, இராமாவதாரப் பெருமைகளை இப்பெண்கள் பாடுகின்றனர். விடியலின் அடையாளங்களாக வெள்ளி எழுவதும் வியாழன் விழுவதும் காட்டப்பெறுகின்றன. முதலில் பறவைகளின் ஒலி என்று பொதுவாய்ச் சொல்லி, பின்னர் ஆனைச்சாத்தனைக் காட்டியவர்கள், இப்போது மீண்டும் பறவைகள் என்கின்றனர். எல்லா வகைப் பறவைகளும் ஒலியெழுப்பதால், பொழுது நிறையவே புலர்ந்துவிட்டது எனக் கொள்ளலாம். இனிமை கூறுவதில் குயில் போலவும், ஒருமுகச் சிந்தனையில் கொக்கு போலவும், நன்மையை ஈர்ப்பதில் அன்னம் போலவும், எம்பெருமான் தொண்டில் கருடன் போலவும் இருக்கவேணும்.  ஸ்வாபதேச முறையில், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைக் குறிக்கும் பாசுரம்.  அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 13 பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்முத்து மாரியம்மன் கோயில் திருவிழா அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – மயிலாடுதுறை சிவகுமார் விளக்கம்: பொய்கையை அடைந்த பெண்கள், அப்பொய்கையையும் அம்மையப்பனாகவே காண்கிறார்கள். கருமையான குவளை மலர், கருமேனி கொண்ட  அம்மையாகத் தோற்றம் தர, தாமரையின் செம்மை ஐயனை நினைவூட்டுகிறது. வெண்குருகுப் பறவைகள் நீரில் விளையாடுகின்றன; சிற்றலைகள் பாம்புகள் போல் நெளிகின்றன. இவற்றைக் காண, இறைவன் திருமேனியில் திகழும் குருக்கத்தி மாலையும் பாம்பணிகளும் நினைவு வருகின்றன. உடல் அழுக்கைப் போக்கிக்கொள்ள விரும்புவோர் பொய்கைக்கு வருகின்றனர். மன அழுக்கைப் போக்கிக்கொள்ள விரும்புவோர், இறைவன் காலடியில் பணிகின்றனர். ஆக, இப்பொய்கையைக் கண்டால், மொத்தத்தில் அம்மையும் அப்பனுமாகத் தெரிகிறது. இத்தகைய பொய்கையில் பாய்ந்து, வளைகளும்சிலம்புகளும் ஓசையெழுப்ப, மார்புகள் அசையவும் நீர் மேலெழும்பிப் பொங்கவும் நீராடுகின்றார்கள்.  பாடல் சிறப்பு:   அழகென்பது காண்பவர் கண்ணைப் பொறுத்தது என்பார்கள். முதலில் குளமாகத் தெரிந்த ஒன்று, இப்போது இறைவன்…

Continue Reading

செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? 

  செவ்வாய் என்கிற மங்களகாரகன் ஜாதகத்தில் மிக முக்கியமான கிரகம் ஆவார். செவ்வாய் கேந்திர திரிக்கோணத்தில் இருந்தால் தொழில், நிலம் மற்றும் அபரிமிதமான சொத்து, உடன்  பிறப்புகளால் உதவி, வீர தீர செயலுக்கு முக்கிய காரகனாக இருப்பார். அதேசமயம் மறுபக்கமாக ஒரு சில பாவங்களில் (கட்டங்களில்) தீமை என்ற நிலையையும் உருவாக்கும் அவை தோஷத்தையும் ஏற்படுத்துவார். களத்திர பாவங்கள் தொடர்புடன்  செவ்வாய் ஒருவருக்கு  இருந்தால் கோபம், ஆக்ரோஷம், அதீத உணர்ச்சியில் வேகமுடன் இருப்பார்கள். அதனால் தான் திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது ஒருவருக்கு ஒருவர் ஈடுகொடுக்கும் அளவுக்கு தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்கிறார்கள். ஆனாலும் அது ஒரு சில நேரங்களில் தவறாக முடிகிறது.  செவ்வாய் என்பது ரத்த சம்பந்தமான காரக கிரகம். அறிவியல் ரீதியாக செவ்வாய் தோஷம் இருப்பவருக்கு ரத்தத்தில் Rh factor நெகட்டிவாக இருக்கலாம். இது குழந்தை பிறப்புக்கு பிரச்னையை தரவல்லது. வீட்டில் கல்யாணம் என்ற பேச்சு பேசியவுடன் ஆண் பெண் இருவருக்கும் திருமண பொருத்தம் மற்றும் தோஷங்கள் உள்ளதா எனப் பார்ப்போம். தோஷங்களில் செவ்வாய் தோஷத்தை நினைத்து ஒருவித பயம் பெற்றோர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். ஜாதக கட்டத்தை எடுத்தவுடன் அனைவர் கண்களிலும் படுவது செவ்வாய் தோஷம் தான். லக்கினத்திலிருந்து செவ்வாய் 2,4,7,8,12ல் இருந்தால் தோஷத்தை தருவார். அதேபோல் அடுத்தபடியான தோஷத்தை சந்திரன், சுக்கிரன்  இருக்கும் இடத்திலிருந்து செவ்வாய் 2,4,7,8,12ல் இருந்தால் குறைத்து தருவார்.  எடுத்துக்காட்டாக 2ல் செவ்வாய் இருந்தால் பேச்சில் விஷம் கக்கும் சொல் இருக்கும். இதனால் திருமண வாழ்க்கை சுகம் குறையும். ஏழு என்பது எதிர் பாலினத்தை ஆக்ரோஷத்தைக் குறிப்பது. எட்டு என்பது ஆயுளையும், 12ம் பாவம் அயணம் /மெத்தை சுகத்தை கெடுக்கும். அதில் முக்கிய பாவமான 7,8,12ல் இருந்தால் திருமண முறிவு மற்றும் உடல் பிரச்னை ஏற்படுத்தும். இவைகளே தோஷம் என்று கூறுகிறோம். திருமண பொருத்தத்தை விட மன பொருத்தம் மிக முக்கிய பொருத்தம் ஆகும். தோஷம் இருந்தாலும் இதன் அடிப்படையில் பலபேர் திருமணம் முடித்து அவர்கள் ஓரளவு சீரான வாழ்க்கையை நடத்துகிறார்கள். பெண்கள் ஜாதகத்தில் லக்கினம் அல்லது சந்திர லக்னத்தில் பலம் எது என்று பார்த்து அதற்கு ஏற்ற ராசியை கொண்டு தோஷத்தைக் கணிக்க வேண்டும். செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும் எப்பொழுது பிரச்சனை கொடுக்கும் என்று பார்த்தால், களத்திர சம்பந்தம் கொண்ட பாவத்தோடு தொடர்பு கொண்டால் தாமத திருமணம், குடும்ப உறவு பிரிவு, நோய், குழந்தைப் பேற்றில் சிக்கல் ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக திருமணம் ஆன ஒருவர் அவர் சுய ஜாதகத்தில் செவ்வாய் களத்திரம் மற்றும் குடும்ப ஸ்தானத்தில் இருந்து, செவ்வாய் தசை ஏற்பட்டால் களத்திர பிரிவு நிகழும். அதுவே அந்த நபருக்கு செவ்வாய் தசை மற்றும் புத்தி பல வருடங்களுக்குப் பின் வந்தால், அவருக்கு தோஷமே இருந்தாலும் ஒன்றும் செய்யாது. படிக்க: சூரியன் – சந்திரன் சேர்க்கை நம்மை என்ன செய்துவிடும்? ஜோதிட சூட்சுமங்கள் தோஷம் உள்ளவர்கள் -செவ்வாய்…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 29)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 29 சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்:   நோன்பு தொடங்கிய நாள் முதல், பறை என்று பரிசுகளைப்பற்றிக் கூறிக்கொண்டேயிருந்த பெண்கள், இப்பாசுரத்தில்தான், தாங்கள் நாடுகிற பரிசு என்ன என்பதைத் தெளிவாக உரைக்கிறார்கள். "அதிகாலைப் பொழுதில் வந்து உன்னை வணங்கி, உன்னுடைய திருவடிகளைப் போற்றி நாங்கள் நிற்பதற்கான காரணத்தைக் கேளாய். பசுக்கூட்டத்தை மேய்க்கும் ஆயர்குலத்தில் பிறந்துள்ள நீ, எங்களை உனக்கான தொண்டர்களாகக் கொள்ளாமல் விட்டுவிடாதே. ஏதோ இப்போதைக்குப் பரிசு பெறுவதற்காக வந்தோம் என்று எண்ணாதே. எந்தக் காலமானாலும், எத்தனைப் பிறவிகளானாலும் உன்னோடு உறவு கொண்டவர்களாக இருப்பதையே யாசிக்கிறோம். என்றென்றும் உனக்கு அடிமைகளாக இருப்போம். இவைதவிர வேறு ஏதேனும் விருப்பங்கள் எங்களுக்கு இருக்குமானால், அவற்றை மாற்றிவிடு’ என்று கோருகிறார்கள்.  பாசுரச் சிறப்பு: நோன்பைத் தலைக்கட்டுகிற (நிறைவேற்றுகிற) நிலையில் வைக்கப்படுகிற விண்ணப்பம் இது. குற்றேவல் என்பது சிறு சிறு ஏவல் கூவல் பணிகள். அந்தரங்கக் கைங்கர்யம் (தனித் தொண்டு) என்பார்கள். ஏழேழு என்பதனை 7, 7+7, 7+7 என்று எவ்விதமாகவேனும் கொள்ளலாம். என்றைக்காக இருந்தாலும் எம்பெருமானுக்கு அடிமைகளாகவும் எம்பெருமானின் உடைமைகளாகவும் இருக்க வேண்டும் என்பதே நிரந்தர விண்ணப்பம். செயல் பெரியதா சிறியதா என்பதைக் காட்டிலும், அது செய்யப்படுகிற நோக்கம் முக்கியமானது. எந்தச் செயலாக இருந்தாலும், அளவுக்கும் பார்வைக்கும் சிறியதாகவே இருப்பினும், அச்செயலுள் இருக்கும்  அன்பும் பக்தியும் அறமும் ஆர்வமும் முக்கியமானவை. ஆங்கிலக் கவிஞர் மில்டனின் They also serve who stand and wait என்னும் வரியை நினைவூட்டுகிற பாசுரம் (இதே உணர்வைத் திருப்பள்ளியெழுச்சியின் 7ஆவது பாடலில், எது எமைப் பணி கொள்ளும் ஆறு என்னும் வரியில் காணலாம்). நோன்பை நிறைவேற்றிய நிலையில், நோன்பின் பலனை இப்பெண்கள் பெற விருக்கிறார்கள். ஒரு செயலின் பலனை அனுபவிக்கும்போது, அந்தச் செயலைச் செய்ததற்கான பெருமையும், செயல் பலனுக்கான ஆனந்தமும், ஒருவகையான மதர்ப்பைத் தரும். அந்த ஆனந்தமே சுயநலமாக மாறும்; ஆணவமாகத் தலைதூக்கும். இதற்குப் பிராப்ய விரோதம் என்று பெயர். இப்படிப்பட்ட  சுயநலம் இல்லாமல், நோன்பென்னும் செயலையும், நோன்பின் நற்பலன்களையும்கூட இறைவனின் திருவடிகளில் அர்ப்பணிக்கிற பாசுரம் இது.  ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாஅட்சய திருதியையும் ஸ்ரீ அன்னபூரணியும் விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே! வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே! கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் –…

Continue Reading

இந்த ராசிப் பெண்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது: செப்டம்பர் மாத பலன்

12 ராசி அன்பர்களுக்கும் செப்டம்பர் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.  மேஷம் கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் – ரண ருண ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சனி (வ) – லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது. இம்மாதம் 06ம் தேதி சுக்கிர பகவான் சப்தம களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 07ம் தேதி செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 13ம் தேதி புத பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் வக்ரம் ஆரம்பம். இம்மாதம் 14ம் தேதி குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 17ம் தேதி சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 27ம் தேதி சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். பலன்: கடின உழைப்பினால் வாழ்க்கையில் முன்னேறும் மேஷ ராசியினரே உங்களுக்கு திடீரென்று  வரும் கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம். இந்த மாதம் புத்திக் கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள்  அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை. மேலும் அறிந்துகொள்ள.. இதைச் செய்யாமல் விட்டால் குழந்தையின் ஆதார் செல்லாததாகிவிடும் குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும் போது கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைய கூடுதல்  கவனத்துடன்  படிப்பது அவசியம். விளையாடும் போதும் கவனம் தேவை. பெண்களுக்கு புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. அஸ்வினி: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம்…

Continue Reading